Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உளியின் ஓசை (சரித்திர குறுநாவல்)


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
RE: உளியின் ஓசை (சரித்திர குறுநாவல்)
Permalink   
 


அதனை கண்டு மனம் நொந்தவன் ,

“ஒருவேளை நம்மை பிடிக்க வில்லையோ? அதனால் தான் நம்மை காணமல் தவிர்த்து விட்டானா?

என்று யோசித்த பொழுது கண்கள் கலங்கியது. பின் சமாளித்து இல்லை இருக்காது காத்திருப்போம்

நிச்சயம் ஏதாவது வேலையாக் வெளியூர் சென்றிருப்பான் என்று கருதிக்கொண்டு கிடந்தவன்

இரவு கடந்து உறங்க துவங்கினான்.

 

மறுநாள் பொழுது விடிந்ததும் கூட வரும் நண்பர்களுக்காக கூட காத்திருக்காமல் முதல் ஆளாக

கோயிலுக்கு சென்றான் நேற்றை போலவே இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. தாகம் தீர்க்க வந்த

யசோதையும் அவனிடம் பேசவும் முடியாமல், நம்மைத்தான் பார்கிறானா இல்லை வேறு சிந்தனையில்

இருக்கிறானா? என்று குழப்பத்துடன் மோகம் கொண்டு திரும்பினாள். இப்படியே ஏமாற்றத்துடன்

மூன்று நாள் ஓடியது.

 

நான்காம் நாள் காலையும் தன்னம்பிக்கையுடன் கிளம்பியவனை தடுத்து நிறுத்தினான் சொக்கனின்

நண்பன் தீபசந்திரன்

 

“தம்பி எங்க அவசரமாக புறப்படுறிங்கனு தெரிஞ்சிக்கலாமா? என்று கேட்டான்

 

“என்னடா அர்த்தம் இல்லாம கேக்குற? கோயிலுக்குத்தான்

 

“இல்லை நான் அறியாமல்தான் கேட்கிறேன் கடந்த மூன்று நாட்களாகவே உன்

நடவடிக்கை எதுவுமே சரி இல்லையே!, சரியாக உணவருந்த மறுக்கிறாய், உறங்க மறுக்கிறாய்,

அதோடு மட்டுமல்லாமல் இன்று ஆறுமாதத்திற்கு பின்னான மருத்துவ பரிசோதனை நாள் என்பதயும்

மறந்து விட்டாய்!! இதற்கெல்லாம் என்னடா பொருள்?

 

“என்னடா உளறுகிறாய்.? என்ன மருத்துவ பரிசோதனை யாருக்கு?

 

“போச்சுடா.?!! அதுவும் மறந்து போய்விட்டாயா? யானைகளுக்குடா!! யானைகளை போய்

பரிசோதித்து மருத்துவ சான்று பெற வேண்டும். அதுவும் இந்த முறை ஆலய பணிகளில் பயன் படுத்த

படும் பிராணிகளுக்கான பெரு மருத்துவர் நித்தவினோத மதுசூதன பூபதி என்பவரிடம்தான் காண்பிக்க

வேண்டுமாம்.!!

 

“ஸ்ஸ்ஸ்..... ஆமாமடா நான் கூட மறந்து விட்டேன்சரி சரி நீ புறப்பட வில்லையா?

எனக்கு புத்தி கூறி விட்டு இன்னும் நீராடாமல் கூட அமர்ந்திருக்கிறாய்!?

 

“இல்லை சொக்கா.. எனக்கு இன்று வேறு ஒரு முக்கிய பணி இருக்கிறது அதனால் நான் அடுத்த வாரம்

சென்று காண்பித்து கொள்கிறேன்

 

“அப்படியானால் இன்று ஆலய பணிகளுக்கும் செல்ல போவதில்லையா? இது எவ்வளவு பெரிய

புரட்டு தெரியுமா?? சிக்கினால் காராகிருகம் தான்.

 

“ஒரு வாரத்தில் என்னடா ஆகி விட போகிறது? அதெல்லாம் பார்த்து கொள்ளலாம்.... அலட்சியம்

மிகுந்து காணப்பட்டது அவனது பேச்சில்

 

மாறன் இன்றாவது வந்திருப்பானா? என்று காணும் ஆவலுடன் ஆலயத்திற்கு கிளம்பினாலும் அரசின்

ஆணையை மீறுவது கடும் குற்றம் என்பதாலும் சரியான நேரத்தில் பரிசோதனை செய்யாமல் போனால்

யானையின் உடல் நிலை பாதிப்படய கூடும் என்ற எண்ணத்திலும் விருப்பமே இல்லாமல் சக

வீரர்களுடன் யானையை ஒட்டி கொண்டு காவிரி கரையோரம் அமைந்திருந்த மருத்துவர்

இல்லத்திற்கு விரைந்தான் சொக்கன்.

 

கோசாலை போல காட்சி அளித்த அந்த இடத்தில் ஒரு பக்கம் முழுவதும் நூற்று கணக்கில் பசுக்கள்

வரிசையாக கட்ட பட்டிருந்தது, ஒரு பக்கத்தில் பட்டிகளில் ஆடுகள் அடை பட்டிருந்தன. ஏராளமான

வாத்துகள், புறாக்கள், வான்கோழி களுடன் ஒன்றிரண்டு மயில்கள் கூட

அங்கு விளையாடி கொண்டிருந்தன, ஒரு பக்கத்தில் யானைகளை மருத்துவர்கள்

பரிசோதித்து கொண்டிருந்தனர், அருகில் அந்த யானைகளை உரிமை கொண்ட வீரர்கள்

உதவி கொண்டிருந்தனர். பரிசோதிக்க பட்ட யானைகள் பற்றிய குறிப்புகளை சுவடிகளில் மருத்துவர்கள்

எழுத; அதனை எடுத்து சென்று அங்குள்ள பூவரசு மரத்தடியில் அமர்ந்து இருக்கும் நித்தவினோத

மதுசூதன பூபதி எனும் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து கொண்டிருந்தனர் வீரர்கள்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஆநிரை (பசுக்கள்) மேய்த்தலையே தொழிலாக கொண்ட முல்லை நில மக்கள் எனப்படும் வேளிர்

குலத்தை சேர்ந்த மருத்துவர், முதலில் நோய்வாய் பட்ட பசுக்களுக்காகத்தான் மருத்துவம்

கற்று கொண்டார். பின் ஆர்வம் மிகுதியால் மனிதன் பழக்கியுள்ள அனைத்து விலங்குகளை பற்றியும்

ஆராய்ச்சி செய்து அவற்றில் ஏற்படும் நோய்களை களைவது எப்படி? அதற்கான ஔடதங்களை

(மருந்துகள்) உருவாக்குவது எப்படி? என்று பலவித மருத்துவ நூல்களையே இயற்றி இருக்கிறார்.

இவரது திறமைக்கு பரிசாகத்தான் பேராலய பணிகளுக்கு பயன் படுத்த படும் விலங்கினங்களின்

 மருத்துவத்தை இவரிடம் ஒப்படைத்துள்ளார் அரசர்.

 

முன்னரிமை அடிப்படையில் முதலில் வந்த யானைகளுக்கு பரிசோதனை நடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் காத்திருந்த சொக்கன் பின் தனது களிற்றை பரிசோதிக்கும் மருத்துவரிடம்

அழைத்து சென்று அதனை படுக்க சொல்லியும், எழ சொல்லியும், கால்களை தூக்க சொல்லியும்

கட்டளைகளை பிறப்பித்தான், பின் மருத்துவர் எழுதிய

குறிப்புகளை பெற்று கொண்டு தலைமை மருத்துவரை நோக்கி சென்றான்.

 

அவர் வீரர்கள் கொண்டு வரும் குறிப்பு ஓலையை பார்த்து மருந்துகளையும், உணவுகளையும்

பரிந்துரைத்தும், சில நபர்களுக்கு மறு வருகை நாளையும் அருகில் அமர்ந்திருந்த

உதவியாளரை கொண்டு எழுத பணித்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கனுக்கு முன் நின்ற வீரன்

காட்டிய குறிப்பை பார்த்தவுடன் அவரின் மனதில் ஏதும் ஐயம் எழுந்திருக்கும் போல, அதனை களையும்

பொருட்டு அருகில் இருந்த உதவியாளரை மருத்துவ

சுவடி ஒன்றை கொண்டு வருமாறு பணித்து அனுப்பினார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர்

பின் தெளிந்தவராய் உதவியாளரை அனுப்பியதை மறந்து அவருக்கு எழுத கட்டளை பிறப்பித்தார்.

 

“ஓஹோ.. வாசுதேவன் அங்கு சென்றுள்ளானா? என்று யோசித்தவர் பின் அருகில் இருக்கும்

தனது இல்லத்தை நோக்கி.

 

“யசோதா.....!!! அம்மா யசோதா....!!!  என்று உரத்த குரலில் தன் மகளை அழைத்தார்

 

“இதோ வருகிறேன் அப்பா...... என்று யசோதை உள்ளிருந்து வெளிபட்டாள். ஆனால் முகம் சுணக்கமாக

காணப்பட்டது.

 

“என்ன அம்மா இன்னும் கோபம் தீர வில்லையா உனக்கு? நமக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நீ மோர்

விற்க ஆலயத்திற்கு செல்வதே எனக்கு பிடிக்க வில்லை. இருந்தும் தோழிகளுடன் நீ செல்ல

விரும்புகிறாய் என்று அனுப்புகிறேன், இன்று ஒருநாள் வேலை அதிகம் உள்ளதால் போக வேண்டாம்

 கூறினேன், இதற்கு போய் இன்னும் எவ்வளவு நேரம் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருப்பாய்?

என்று தன் செல்ல மகளை செல்லமாக கடிந்து கொண்டார் மருத்துவர்.

 

“இன்றாவது அந்த யானை வீரருடன் பேசி விட மாட்டோமா? அல்லது அவரின்

கவனத்தையாவது பெற்று விட மாட்டோமா? என்று எண்ணி ஆலயத்திற்கு புறப்பட்ட

யசோதை தந்தையின் கோரிக்கையால் தங்கி விட்டாள். அதனால் வாடி போயிருந்த முகத்துடன்

வந்தவள் தந்தை அருகில் இருக்கும் ஆண்களை எதேச்சயாக கண்டாள். அங்கு நின்ற

சொக்கனை கண்டவுடன் தொய்ந்து போயிருந்த அவளது முகம் கருமேகம் கண்ட

கானமயிற்தோகை போல விரிந்தது.

 

உள்ளூர மகிழ்ந்து நானம் கருதி வெளிகாட்டி கொள்ளாமல் “சொல்லுங்கள்

அப்பா எதற்கென்னை அழைத்தீர்கள் என்று உரிமையுடன் வினவினாள் தந்தையை.

“இங்கு வந்து அமர்ந்து கொண்டு நான் கூறும் குறிப்பை இந்த ஓலை சுவடியில் எழுது அம்மா! என்றார்

அவர் சொக்கனை நேரடியாக பார்க்க முடியாத இக்கட்டான சூழல் இருந்தாலும் தன்னால் இயன்ற

வரை அவனை பார்த்து கொண்டே எழுதினாள்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அவளிடம்

“அம்மா வாசுதேவன் வரும் வரை இங்கு அமர்ந்திரு என்று கூறி விட்டு சொக்கனுக்கு முன் நின்ற

வீரனிடம்

 

“வீரரே உமது யானை எங்கு நிற்கிறது வந்து காட்டுங்கள் நான் காண வேண்டும்

என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றார் அவர்

 முன்னின்ற வீரன் மருத்துவருடன் சென்றதால் அந்த இடத்தை நகர்ந்து சென்று நிரப்பினான் சொக்கன்.

அவனது பின் நிற்கும் வீரன் சற்று தொலைவு தள்ளியே நின்றான். பின்

 

“ஆஹா....மருத்துவர் மகள் தனியாக இருக்கும் பொழுது அருகில் நெருங்கி விட்டோமே என்று விலக

முற்பட்டான் சொக்கன் உடனே யசோதை, மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில்

பேச துவங்கினாள்.

 

“நில்லுங்கள் வீரரே உங்களுக்கு என்னை உண்மையில் தெரிய வில்லையா?

 

நிமிர்ந்த சொக்கன் சற்று நேரம்

யோசித்து “இல்லையே தேவி தாங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியுமா? என்று கேட்டான்.

 

சற்றே அதிர்ந்தவள் “ நல்ல நடிப்பு வீரரே! கடந்த மூன்று நாட்களாக உங்களயே ஆலயத்தில்

சுற்றி வருகிறேன், நான் நிற்கும் இடத்திற்கே நீங்களும் வந்து வந்து நின்றீர்கள். இன்று எதுவும்

தெரியாதவர் போல பிதற்றுகிறீரே!!?? என்று கண்கள் கலங்க கேட்டாள்.

 

சொக்கனுக்கு அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது ஆனால் அதற்குள் மருத்துவர்

வந்து விடவே இருவராலும் மேற்கொண்டு பேச முடியாமல் போயிற்று.

 

வந்தவர் சொக்கனின் கையிலிருந்த ஓலையை வாங்கி பார்த்து விட்டு சில மருந்துகளை பரிந்துரைத்தார்.

அதனை யசோதை எழுதினாள். பின் அந்த ஓலையை வாங்கிகொண்டு அவளை பார்த்தும்

பார்க்காதது போல ஒரு பார்வையை வீசி விட்டு மருத்துவருக்கு வணக்கம் கூறி அங்கு கொடுக்க பட்ட

மருந்துகளை பெற்று கொண்டு மறு வருகை தேதியை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து எண்ணற்ற

குழப்பத்துடன் அகன்றான் சொக்கன், கூடிய விரைவில் அவனை தனிமையில் சந்திக்க

ஒரு ஏற்பாட்டை யசோதை செய்து விட்டாள் என்பதை அறியாமல். ஆனால் சிறிது நேரம் தான்

யசோதை பற்றிய நினைவு அவனிடம் இருந்ததே தவிர பிறகு வழக்கம் போல மாறன் மீண்டும்

வந்து ஆக்ரமித்து கொண்டான்.

 

பார்த்தீர்களா? கடந்த மூன்று நாட்களுக்கு முன்னாள் நார்த்தாமலை சென்ற மாறனை பற்றி நாம் கூட

மறந்து விட்டோம்.

 

தஞ்சையிலிருந்து அதிகாலை புறப்பட்ட மாறனும், மற்ற சிற்பிகளும் பொழுது மங்கி இரண்டு நாழிகை

 கடந்து நார்த்தாமலையை அடைந்து பின் அவர்கள் சிற்பிகளின் வசதிக்காக போட பட்டிருந்த

கீற்று கொட்டகையில் தங்கி ஓய்வெடுத்து கொண்டிருந்த. அந்த இருட்டு வேளையில் ஆஜானு பாகுவான

பல ஆண்கள் நல்லெண்ணெய் குடங்களை தோளில் தங்கி கொண்டும் சிலர்

தீபந்தங்களை ஏந்தி கொண்டும் எதையோ சாதிக்க போகும் வெறியுடன் மாறனும், சிற்பிகளும்

தங்கியிருந்த கீற்று கொட்டகை நோக்கி விரைந்தனர்.   

                                                                                                 -ஒசைகேட்கும்'

                                                                                                                     

                  



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

புதிய பெண்ணின் வருகை, கதைக்கு சுவாரசியத்தை கொடுக்கிறது...

சில உவமைகள் சிறப்பா இருக்கு (ஞாயிறு, திங்கள் உவமை)....

நல்லபடியா கல்லை தஞ்சைக்கு கொண்டு வந்திடுங்க.....



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:18:17 AM

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

கதை ரொம்ப அருமையாக இருக்கிறது

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

கதையும், உங்கள் எழுத்து நடையும், மிக தேர்ந்த எழுத்தாளரைப் போல நினைக்கத் தோன்றுகிறது.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மிக அருமையான படைப்பு.. கதையை படிக்கும்போது உங்கள் உழைப்பு நன்றாகத் தெரிகிறது. நார்த்தாமலை, களிற்றுப்படை போன்ற உண்மையான தகவல்களை

அடிப்படையாகக் கொண்டு சிறப்பான புனைவை படிக்கிறீர்கள்.. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. அங்கங்கே தென்படும் எழுத்துப் பிழைகளின் மீதும், தவறுதலாக சில

இடங்களில் இடம்பெறும் தற்கால பேச்சு வழக்கையும் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக அமையும். பாத்திரங்களுக்கு இடும் பெயரையும் அக்கால தமிழ்மக்களின் பெயர்களுடன்

பொருந்த அமைக்க முயலவும். ருக்மணி, யசோதா போன்ற பெயர்களை அக்கால பெண்கள் சூடியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

 

நல்ல முயற்சி..தொடர்ந்து எழுதவும்.

[அக்காலத்தில் கற்றளிகளில் நிர்மாணப் பணிசெய்யும் ஆட்கள் விரதம் மேற்கொண்டு, புலனடக்கத்துடன் பணிசெய்ய வேண்டியது கட்டாயமானது. அதை மீறி ஆலய

கட்டுமனத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் பணியாட்களின் தலை யானையால் இடறப்பட்டு உருளும் அபாயம் கூட உள்ளது. உங்கள் குருநாதர் வழியில் சென்று நாயகர்களை

கொன்றுவிடாமல் இந்த அபாயத்தில் இருந்து அவர்களைக் காத்து, சுபம் சேர்க்கவும் - எனது தனிப்பட்ட வேண்டுகோள்]



-- Edited by ArvinMackenzie on Monday 29th of July 2013 11:33:16 PM



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:14:28 AM

__________________

gay-logo.jpg

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

உளியால்.. தட்டிய தட்டில்.. முக்கோண காதல் கதை பிறந்துள்ளதாகத் தெரிகிறதே.. வாழ்த்துக்கள் நண்பரே..

அதென்ன.. மோர் என்றாலே.. இரட்டுற மொழிதல் தானா..

//இதனை இரட்டை பொருளில் நீங்கள் புரிந்து கொண்டால்

அதற்கு நானோ அல்லது அந்த பெண்ணோ பொறுப்பல்ல.//

மிருகநல வைத்தியர்.. வைத்தியசாலை என வியக்க வைக்கும் கற்பனை வளம்..

ஆநிரை, ஔடதம்.. தெரிந்தவற்றிக்கு அர்த்தம் சொன்ன நீங்கள்.. காராகிருகத்தை எப்படி விட்டுவிட்டீர்கள் என்று புரியவில்லை.. எனினும்.. கூகிள் நண்பன் உதவினான்..

உளியின் ஓசை.. தொடர்ந்து கேட்க ஆசை...!

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

முதற்கண் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!!

 

திரு குருஜி அவர்களுக்கு!

                       நீங்க சொன்னதுக்கப்றம் மாற்று கருத்து உண்டா? கண்டிப்பா தஞ்சைக்கு நல்ல படியா கொண்டு வந்துடுவோம்!! தொடர்ந்து வாழ்த்துங்கள்

திரு திருப்பூர் பாபு, திரு ஹாட் குரு , அவர்களுக்கு !!

                             வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தொடர்ந்து நல்லாதரவு தர வேண்டுகிறேன்!!

திரு ரோதிஸ் அண்ணாச்சி அவர்களுக்கு!!

                       இவ்வளவு தூரம் ரசித்து படிப்பதற்கு நன்றிகள், மேலும் காராகிருகம் என்பது சிறைச்சாலையை குறிக்கும். பெரும்பாலான 

பழைய திரைப்படங்களில் இது அதிகம் சொல்லாட பட்டிருக்கும் அதனால் தான் விளக்கம் அளிக்க வில்லை ஔடதம், ஆநிரை போன்ற பதங்களை தமிழ் புத்தகங்களில் தான் 

படித்திருப்போம் அதனால் தான் பொருள் குறிப்பிடிருந்தே. என் தவறுதான் பொறுத்தருள்க!! தொடர்ந்து நல்லாதரவு தரவும்

 

திரு அரவிந்த் மெக்கன்சி அவர்களுக்கு!!

                                 பாராட்டுகளுக்கு நன்றிகள், ஆலோசனைகளுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் 

எவ்வளவு தான் திரும்ப திரும்ப தேடி பார்த்தாலும் சில எழுத்து பிழைகள் 

கண்களில் படாமல் தப்பித்து விடுகின்றன. இது என் தவறுதான் பொறுத்தருள்க. தற்கால பேச்சு வழக்குகளை 

இயல்பு கருதி பின் புத்தி இருப்பேன் பிழை என்றால் பொறுத்தருள்க.

 

அதே சமயம் ஒரு சின்ன விஷயத்தை தாங்கள் கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறன்.

 அந்த மிருக நல வைத்தியர் வேளிர் குலத்தை சேர்ந்தவர் அதாவது மாடுகள் மேய்ப்பதை குலத்தொழிலாக கொண்டவர்

(முல்லைநில மக்கள்).

இந்த குலத்தில் தான் திருமால் கண்ணனாக 

அவதரித்ததாக பாரதம் முழுவதும் நம்ப படுகிறது, ஸ்ரீமத் பாகவதமும்,  இதைத்தான் உறுதி செய்கிறது,

துவாரகையை ஆண்டகண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன.

(ஆதாரம்:விக்கிபீடியா)

எனவே திருமாலை  குல தெய்வமாகவும் (பார்க்க ஐந்திணை கருப்பொருள் அட்டவணை) அவரது வரலாற்றுடன் தொடர்புடையவர்களின் பெயர்களே தங்களுக்கு வைத்து கொள்வதையும்

இம்மக்கள் இன்றும் பின்பற்றுகின்றனர். 

அதனால் தான் அப்பெண்களுக்கு யசோதை, ருக்மணி என்ற பெயரையும், மருத்துவருக்கு நித்தவினோத மதுசூதன பூபதி என்று பெயரையும் சூட்டினேன்.

நம் தமிழகத்தை பொறுத்த வரை  யார் ஆட்சி செய்தாலும் மக்கள் தத்தமது குல வழக்கங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள் 

என்ற அடிப்டையில் தான் இந்த செயல்பாடு. மாற்று கருத்துக்கள் இருந்தால் குறிப்பிடவும். எமது குரு நாதரை ஆமோதித்தற்கு ஆயிரம் கூடி நன்றிகள் 

தொடர்ந்து நல்லாதரவை நல்கும் படி தாழ்மையுடன்

விண்ணப்பிக்கிறேன்!! 

  



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:20:36 AM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@msvijay

// ஏன்பா உனக்கு இவ்ளோ கொலைவெறி?....

இதற்கல்லாம் என் அடுத்த கதையில் நான் உருவாக்கபோகும் கதாப்பாத்திரத்தில்

சேர்த்து வச்சுக்கறேன்...

(தம்பிக்கு நாலு தலை பார்சல் பண்ணுங்கப்பா....!) //

அண்ணா.. நாங்களும் கதை எழுதுவோம்.. நியாபகம் இருக்கட்டும்..



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:24:15 AM

__________________

gay-logo.jpg

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Nanba,
Ungalin indha kadhai moolam pala puthiya tamil sorkalai ariya mudigiradhu..Ungaladhu tamil pani thodara valthukkal. Nanbar rothesis solvadhu pol
kadinamana sollukkum porul sonnal migavum sirappaga irukkum...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ராஜ்குட்டி,
நீங்க ஒவ்வொருமுறை என்னை "குருநாதா"னு கூப்பிடும்போதும், ஒரு படத்தில் வடிவேலு தன் குருநாதரை கூட்டிக்கொண்டு சண்டைக்கு போவாரே அதுதான் நினைவுக்கு வருது.....
"டேய் இப்ப வாங்கடா, இப்ப வாங்கடா.... பாருங்கடா இந்த சிங்கத்த..... குருநாதா!, இங்கதான் என்னைய அடிச்சாணுக குருநாதா"னு வடிவேலு சொல்ற மாதிரியே காதுக்குள் கேட்குது....
உங்க கதைப்படி அது "அசிரீறி"யா? அல்லது என் கதைப்படி "ஹாலுசினேஷன்'ஆ?னு தெரியல.....

@அர்விந்...
ஏன்பா உனக்கு இவ்ளோ கொலைவெறி?.... இதற்கல்லாம் என் அடுத்த கதையில் நான் உருவாக்கபோகும் கதாப்பாத்திரத்தில் சேர்த்து வச்சுக்கறேன்... (தம்பிக்கு நாலு தலை பார்சல் பண்ணுங்கப்பா....!)

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

தலிவா..........

                       அசிரீரியா இருந்தாலும் ஹளுசிநேசன் அஹ இருந்தாலும் என் குருநாதருக்கு ஒரு ஆபத்து வரும்போது

உங்க சிஷ்ய பிள்ளை பட்டுன்னு "மான் கராத்தே " போடுறேன் பயப்படாதிங்க

 

@ திரு ஹாட் குரு அவர்கள்: நன்றிகள் பல். நிச்சயம் இனி வரும் காலங்களில் சொல்கிறேன்.



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அண்ணா.. நாங்களும் கதை எழுதுவோம்.. நியாபகம் இருக்கட்டும்.. /////

பாசக்கார பயலுவ.... விட்டுட்டு சாப்புடவே மாட்டாணுவ......


@ராஜ்குட்டி....
மான் கராத்தே, கடப்பாரை நீச்சல், சிதம்பர ரகசியம் போன்றவை எல்லாம் கரைத்து குடிச்சுதான் நானும் வந்திருக்கேன்பா.... தம்பிகளுக்கு ஒரு பிரச்சினைன்னா, இதுல எதாவது ஒன்னு ட்ரை பண்ணி தப்பிச்சுடலாம்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அந்த கடபாறைய மட்டும் எப்படி கரைச்சி குடிக்கிராதுன்னு தம்பிங்களுக்கு சொல்லி குடுங்க



__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

nice moving

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@ராஜ் (pls இப்படியே உங்களை சொல்றேன்)...


உங்கள் கதையின் பலமே விளக்கமான நடை தான் .

படிக்கும் போது பெரிய கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு நடுவில் போய் வந்தது போல் ஒரு பிரமை ...

இரண்டாவது முறையாக சரித்திர கதை (முதல் விஜய் ப்ளாக்கில் அவர் எழுதிய சரித்திர கதை

(வழக்கம் போல் நாயகர்கள் காலி சோக முடிவு )) படிக்கிறேன் ...

குழப்பம் இல்லாமல் கதை அழகாக போகுது...கதைக்காக உங்களின் உழைப்பு அருமை...

சினிமா பாணி முக்கோணக்காதல் அதன் எதார்த்தமான நிகழ்வுகள் ...

weekly days வைத்து யசோதை அழகை வர்ணித்துள்ளது நல்லாருக்கு....

உங்களின் தமிழ் அறிவு பார்த்து கொஞ்சம் பொறமை & சந்தோசமாகவும் இருக்கு....

keep it up...sorry for the late post...

@vijay...
யாரு இது எங்கள் விஜயா இது என்ன ஒரு கிண்டல்,கேலி இந்த கலகலப்பாக நீங்கள் இருப்பது நல்லா இருக்கு

praying to god for that....வீட்ல function முத்தின நாள் ஜாலி மாதிரி சந்தோசமா இருக்கு ....

தமிழன் தான் missing...

உங்கள பற்றி நினைக்கும்போது காரணம் இல்லாமல் நடிகர் தனுஷ் கொஞ்சம் சோகமா இருப்பது போல் ஞாபகம் வரும்(sorry...)...

but இப்போ சந்தோஷமான தனுஷ் ஞாபகம் வருது ....



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:28:15 AM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை தொடர்ச்சி

 

       பால் நிலா தேனமுதாய் பொழியும் அந்த நார்த்தாமலையில் சிறிதும் பெரிதுமாக ஆங்கங்கு பாறைகளும், 

குன்றுகளும் தலை தூக்கி அந்த இருட்டிலும் தங்களது இருப்பை உணர்த்தி கொண்டிருந்தது. உடைக்க

பட்ட கற்கள் தஞ்சை கொண்டு செல்லுவதற்காகவே சிறப்பாக அமைக்க பட்ட கருங்கற் பாதையில் தீ

பந்தங்கள் வெளிச்ச விதை விதைத்து கொண்டிருந்தன. ஆங்கங்கு யானைகள் கஜகர்ணம்*

போட்டு கொண்டிருந்தன. அவற்றின் பாகன்கள் சமதள பாறைகளில் அமர்ந்து உருளாயம், சொக்கட்டான்,

வெட்டுபுலி என்று காலம் கழித்து கொண்டிருந்தனர். எண்ணெய் குடங்களை தாங்கி வந்தவர்கள்

எதிர்காலத்தில் உடைக்கப்பட இருக்கும் பாறைகளின் மீது அந்த எண்ணெயை ஊற்றி மெழுக

ஆரம்பித்தனர். சிலர் சில பாறைகளின் மீது தீப்பந்தங்களால் ஒற்றடம் கொடுத்து கொண்டிருந்தனர்.

 

       உடைக்கப்பட இருக்கும் பாறைகள் எளிதில் உடைவதற்கும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும், 

சிதறாமல் இருப்பதற்கும் அக்கால சிற்பிகள் கடை பிடித்த வழிதான் இது. இரவில் பாறைகளின்

மீது பூசபட்ட எண்ணெய் பகல் முழுவதும் வெயிலில் காய்வதால் அந்த எண்ணெய் பாறையால் மெல்ல

உட்கிரகிக்கபடும். பின் மீண்டும் பிறிதொரு இரவில் தீப்பந்தங்கள் கொண்டு பாறையை சூடேற்றும்

பொழுது உட்கிரகிக்க பட்ட எண்ணெய் முழுவதும் மெல்லிதாக வெளியேறி விடும்.

இதே செயல்முறையை தொடர்ந்து செய்யும் பொழுது பாறையின் கடின தன்மை குறைந்து எளிதாக

உடைந்து விடும்.

 

      அதிகார நந்தி வடிப்பதற்காக தேர்ந்தெடுக்க பட்ட பாறையின் மீது கடந்த இரண்டு வாரமாக இந்த 

நடைமுறை செயல் படுத்த பட்டதால் அதன் மீது இருக்கும் எண்ணெய்  அங்கு கொளுத்த பட்டிருந்த தீ

பந்த ஒளியில் பட்டு தங்க நிறத்தில் காட்சி அளித்து கொண்டிருந்தது, தஞ்சையில் இருந்து வந்திருந்த

தலைமை சிற்பிகளும், அவர்களோடு வந்த நமது மாறனும் அந்த பாறையின் அருகில்

நின்று கொண்டிருந்தனர். கற்களை உடைக்கும் உளிகளுடன் பணியாட்கள் அவர்களுக்கு அருகில்

காத்திருந்தனர்.

    வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவரும், கம்மியகலை எனப்படும் சிற்ப சாத்திர நூல்களை ஐயம்

திரிபர கற்றவரும் ஆன குணவன் மதுராந்தக நித்தவினோதப்பெருந்தச்சனர், தேர்ந்தெடுக்க பட்ட

பாறையின் அருகில் சென்று புறங்கை விரல்களால் தட்டி பார்த்தார். பின்

 

“ ம்ம்ம்ம்,,...... பாறை சரியான முறையில் இளகி இருக்கிறது என்று கூறி விட்டு அருகில் இருக்கும் மாறனிடம்

 

“மாறா அரசர் குறிப்பிட்ட அளவு உனக்கு தெரியுமல்லவா? பாறையின் மீது ஏறி அதன்படி சுன்ன சாந்தால் வெட்டுவதற்கு ஏற்ற வண்ணம் கோடிட்டு வா.!! என்றார்

 

     கையிலிருந்த ஓலை குறிப்பில் உள்ளது போல தேவையான அளவிற்கு பாறையின் 

மீது கோடுகளை வரைந்தான் மாறன்.

பிறகு பழுக்க காய்ச்சி பின் குளிர்ந்த எண்ணெயில் இட்டு கடினமாக்க பட்ட இரும்பு உளிகள்,*

மற்றும் குடை பாரைகளின் உதவியுடன் கடைநிலை சிற்பிகள் மாறன் கோடிட்ட பகுதிகளில் வெட்ட

துவங்கினர். ஒரு பெரிய பாறையில் இருந்து துருத்தி கொண்டு இருக்கும் சிறிய பாறை தான்

தேர்ந்தெடுக்க பட்ட பாறை என்பதால் இணைந்திருக்கும்

ஒரு பக்கத்தை வெட்டினாலே பாறை துண்டாகும் வண்ணம் இருந்தது அந்த சிற்பிகளுக்கும் அதிகம்

சிரமம் இல்லாமல் போயிற்று. சந்திரன் தோன்றி இரண்டு நாழிகைகள் கழித்து துவங்க பட்ட

பணி ஆதவன் தோன்ற ஒரு நாழிகை இருக்கும் தருவாயில் நிறைவு கட்டத்தை எட்டி கொண்டிருந்தது.

 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

      இன்னும் ஐந்து விரல்கடை அளவு வெட்டி விட்டால் பாறை முழுவதும் துண்டாகி விடும் என்பதால் 

அதுவரை ஆங்கங்கு சோர்வுடன் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து வந்து அந்த பகுதியை சூழ

துவங்கினர். இறைவனுக்கு இணையாக அவனது எதிரில் அமைக்க பட இருக்கும்

நந்தியெம்பெருமானுக்குரிய கல் ஆதலால் தலைமை சிற்பிகள், மாறன் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த

பய பக்தியுடனும், எதிர்பார்ப்புகளுடனும் பாறை விழ இருப்பதை ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர்.

அதிகாலையின் தென்றல் மெல்ல வருடும் அந்த வேலையில் கல்லின் மீது இரும்பு மோதும் “களீர்

“களீர் என்ற ஒசை மட்டும் கேட்டு கொண்டிருதது.

 

   அனைவரும் எதிர்பார்த்த அந்த இனிய வேளையில் கல்லுக்கும் பாறைக்கும் இருந்த 

தொப்புள்கொடி அறுந்து இறைவனுக்கு வாகனமாக பிறக்கப்போகும் அந்த கல் தரயில் “டங்.

என்று விழுந்தவுடன்

 

“ஹர ஹர மகாதேவா.!!

 

“தென்னாடுடைய சிவனே போற்றி

 

“என்னாட்டவருக்கும் இறைவா போற்றி “

 

“மும்முடி சோழ சக்கரவர்த்திகள்!! வாழ்க!! வாழ்க!!

 

“ராஜ ராஜேஸ்வரத்தின் புகழ்! வாழ்க! வாழ்க !!

என்று விண்ணை பிளக்கும் வகையில் கோஷங்கள் எழுந்தன.

 

       அந்த இடமே பக்தி பரவசத்தில் ஆரவாரத்துடன் இருந்தது, பின் கல்லின் அடிபகுதியை சமமாக 

பொளிந்தனர். அபோழுதுதான் உருளை கட்டைகளை அடியில் கொடுத்து உருட்டும்

பொழுது சிரமமின்றி இடம்பெயரும். பின் பொளிய பட்ட கல் பெரிய பெரிய சங்கிலியால்

பிணைத்து பலம் பொருந்திய யானைகள் இழுக்கும் படி அவைகளுடன் இணைத்தனர். இந்த

பணிகளை மாறன்தான் மேற்பார்வை இட்டு நெறிபடுத்தினான். அதற்குள் இந்த காட்சியை நோக்கும்

ஆவலுடன் ஆதவன் கீழ் வானத்தில் இருந்து மேலேறி விட்டான்.

தஞ்சைக்கு செல்லும் கற்பாதையில் பாகன்கள் யானைகளை விரட்ட, கல்லுருட்டும் பணியாளர்கள் கல்

நகர நகர அடியில் உருட்டு கட்டைகளை போட்டு கொண்டே வர மெல்ல, பிரதோஷ வேலையில்

பலரின் விண்ணப்பங்களை கேட்கவிருக்கும் நந்தியெம்பெருமான் புதைந்திருக்கும் அந்த கல்

தஞ்சை நோக்கி தன் பயணத்தை துவங்கியது.

 

      தன்னிடம் ஒப்படைக்க பட்ட மேன்மை பொருத்திய பணி நிறைவைடைந்ததால் அதுவரை உள்ளத்தின் 

கட்டிலில் தூங்கி கொண்டிருக்கும் சொக்கனின் நினைவுகளை தட்டி எழுப்பினான் மாறன். வந்த

வேலை ஒரே இரவில் முடிந்து விடும் என்று அவன் எதிர்பார்த்து இருக்க வில்லை. கல்லை உடைக்கும்

பணி நிறைவடைந்தாலும் அதனை தஞ்சை கொண்டு சேர்க்கும் வரை மிகவும் கவனமாக இருக்க

வேண்டுமே?? அதனால் மாறனும் மற்ற சிற்பிகளும் குதிரையின் மீது அமர்ந்து கொண்டே மெல்ல பின்

தொடர்ந்தனர். குதிரையில் அமர்ந்து கொண்டு வருவதால் அதிகம் மற்றவருடன் பேசும் வாய்ப்புகள்

குறைவாக் இருந்தது மாறனுக்கு. குதிரை தஞ்சை நோக்கி நடைபோட, மாறன் மனமோ தஞ்சையில்

இருக்கும் சொக்கனை நோக்கி நடை போட்டது.

 

“நேற்று முழுவதும் சொக்கன் நம்மை தேடியிருப்பானா?,

இலுப்பை வனத்திற்கு சென்று ஏமார்ந்திருப்பானா? இல்லை நம் நினைவே அவனுக்கு இல்லாமல்

இருந்திருக்குமா? எப்படி இருந்தாலும் தஞ்சை சென்றதும் முதல் வேலையாக அவனிடம்

நமது காதலை சொல்லி விட வேண்டும்.

       என்று மனதிற்குள் தீர்மானித்து கொண்டான். ஆங்கங்கு அமைக்க பட்டிருக்கும், சத்திரங்களிலும்,

சாவடிகளிலும் பணியாட்களும் யானைகளும் ஓய்வெடுத்து கொண்டே நார்த்தா மலையில்

இருந்து கிளம்பி நான்காம் நாள் விடியும் தருவாயில்  தஞ்சையிலிருந்து பத்து காத தொலைவில்

இருந்தனர்.

 

         இங்கிருந்து நகர் துவங்க இருப்பதால் இனி எந்த கவலையும் இடம் இல்லை என்பதால் மாறன் உட்பட 

மற்ற தலைமை சிற்பிகளும் அவரவர் இல்லத்திற்கு சென்றனர். எப்படியும்  முற்பகலுக்குள் கல்

ஆல்யத்தை அடைந்து விடும் என்ற நம்பிக்கையில் மூவரும் புறப்படவே மாறனும் வேக வேகமாக

பாசறைக்கு வந்து நீராடி ஆலயத்தில் மாறனை சந்திக்கும் ஆவலுடன் தன்னிடம் இருக்கும்

ஆடைகளிலேயே சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு ஆடியில் தன்

அழகை பார்த்து ஒருமுறை வியந்து விட்டு ஆலயம் நோக்கி விரைந்தான். தான்

ஆசை காதலனை மூன்று நாட்கள் கழித்து பார்க்க போகும் ஆவலில் எதிரே யானை படை வீரர்கள்

கூட்டம் கூடமாக எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை கூட கவனிக்காமல்

சென்று கொண்டிருந்தான் மாறன்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஆலய வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. நந்திக்கான மேடையில் கல்லை ஏற்றும் வன்னம்

சிறிய சாரம் அமைக்க பட்டிருந்தது. ஆங்கங்கு சிவாச்ரியார்கள் பூரண கும்பங்களுடன் தயார் நிலையில்

இருந்தனர் அரசரின் வருகைக்காக. கல்லை எதிர்கொண்டு வரவேற்கும் பொருட்டும் அதற்கு நடை பெற

இருக்கும் சிறப்பு ஆராதனைகளில் கலந்து கொள்ளுவதற்கும் அரசர் வர இருப்பதால் பாதுகாப்பும்

சற்று பல படுத்த பட்டிருந்தது. ஆனால் பணிகள் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தன.

 

வேகமாக ஆலயத்தின் உள்ளே சென்ற மாறன் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று சொக்கன்

இருக்கிறானா என்று பார்த்தான். வெகுவாக யானை படை வீரர்களின் எண்ணிக்கையும்

குறைந்து காணப்பட்டது.

 “வரும் பொழுது கூட யானை படை வீரர்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனரே!! எங்கு சென்றார்கள்,?

அவர்களில் சொக்கனும் ஒருவனா? அப்படியானால் நான் எப்படி கவனிக்காமல் வந்தேன்.?

என்று யோசித்து கொண்டே இருக்கும் பொழுது எதிரில் வந்த பணியாளர் ஒருவரை மறித்து

 

“அய்யா இங்கு பணிக்கு வந்த யானை படையை காணுமே எங்கே? என்று விசாரித்தான்

 

“யானை படை போருக்கு போயிருக்கும் என்று நக்கல் தொனிக்க கூறி விட்டு சென்று விட்டான் அவன். ஆனால் இதனை கேட்டவுடன் மாறனின் மனம் அடைந்த கவலை சொல்லி மாளாது.

 

“அப்படியானால் இனிமேல் சொக்கனை காண முடியாதா? அவனுடன் ஒட்டி உறவாடி உள்ளம் களிக்க வேண்டும் என்று நான் கண்ட கனவெல்லாம் பகற் கனவாய் போய்விட்டதா? “ என்று அவன் என்னும் பொழுது கண்ணீர் தாரை தரையாக ஓடி தரையை நனைத்தது.  

 

பின் தலைமை சிற்பியின் அழைப்பால் அவரிட்ட வேறு பணிகளில் மனகவலையுடன் ஈடு பட்டான். பின்

கல்லுக்கு நடந்த பலத்த வரவேற்பிலும், அரசரின் வருகையிலும் கூட அவனது மனம் நாட்டம் கொள்ள

வில்லை.

 

ஒருவழியாக பொழுது சாய்ந்த பொழுது சொக்கனை இறுதியாக பார்த்த

இலுப்பை தோப்பிற்கு சென்று அங்கு தனிமையில் சொக்கனின்

நினைவுகளை அசைபோட்டு காதலாகி கசிந்துருகி கொண்டிருந்தான் மாறன்.

யானைக்கான மருத்துவ பரிசோதனைக்காக சென்று பாசறைக்கு திரும்பியவுடன் கட்டிலில்

படுத்து மாறனின் நினைவுகளை அசை பட்டு கொண்டிருந்த சொக்கனுக்கு எப்பொழுது உறக்கம்

வந்தது என்றே தெரிய வில்லை. மதிய உணவிற்கு கூட எழாமல் மாலை பொழுதில் எழுந்தான்.

எழுந்தவுடன் ஆலயத்திற்குத்தான் சென்று பார்க்க முடிய வில்லை. இலுப்பை தோப்பிற்காவது சென்று

 

“மாறன் வருவானா? என்று காத்திருப்போம்?

 என்ற எண்ணத்துடன் நீராடி புறப்பட்டு குதிரையின்

மீதமர்ந்து இலுப்பை தோப்பிற்கு அதனை விரட்டினான் சொக்கன்.

 

“சொக்கன் வருவானா?

 என்று ஆவலுடன் நெஞ்சை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்த மாறனுக்கு குதிரையின்

குளம்படி சத்தம் கேட்க துவங்கியது.

 

மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுந்து வந்து பார்த்த மாறனின் கண்களில் இருந்த துயர கண்ணீர் ஆனந்த

கண்ணீராக மாறும் வண்ணம் சொக்கன் குதிரயில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

சிரத்தை இல்லாமல் சோர்வுடன் குதிரையை செலுத்திய சொக்கனோ மாறனை கண்டதும்

ஒரு உந்து உந்த குதிரை மின்னலென பறந்து மாறன் அருகே வந்தது. குதிரயில் இருந்து இறங்கியவுடன்

நேருக்கு நேர் இருவரும் பார்த்து கொண்டனர். ஆனால் அங்கு பேச்சு எழ வில்லை. ஆயிரம் ஆயிரம்

உணர்சிகளை வெளிபடுத்தி அதில் ஆறுலட்சம்

கேள்விகளை மாறி மாறி கண்களாலேயே கேட்டு கொண்டனர் இருவரும். கண்ணீர்

வழிந்து காட்டை நனைத்தது. பின் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிவந்து அனைத்து கொணடனர். இந்த

அணைப்பில் காதல் தீ கொழுந்து விட்டு எறிய துவங்கியது. எறிந்த தீயில் ஏற்பட்ட வெப்பம் அவர்களின்

கட்டுகடங்காத காமத்தை தூண்டி விட, காதல்தீயும் காமத்தீயும் சேர்ந்து அந்த

காட்டை கொளுத்தி கொண்டிருந்தது. காமக்கடலில் மூழ்கி முத்தெடுத்து நள்ளிரவு வரை மூன்று நாள்

கதையையும் பேசிய பொழுது சொக்கன் தான் ஆசை காதலனுக்கு வங்கி வைத்திருந்த

பரிசை கொடுத்தான்.

 

இதே வேலையில் மருத்துவர் மாளிகையில் சொக்கனை எண்ணி உறங்காமல் கிடந்தால் யசோதை.

 

காதல் கொண்ட மனங்கள் என்றுமே எதிர் காலத்தை பற்றி எண்ணுவதில்லை. காலங்கள் மாறும்

பொழுது காட்சிகள் மாறும் என்பதையும் அது அறிந்திருப்பதில்லை.

 விடிய போகும் அந்த நாளில் மாறனின் கண் முன்பே சொக்கன் மிகப்பெரிய ஆபத்தில் சிக்க போகிறான்

என்பதை அறியாமல் மாறனும், மாறன் தன்னிடம் ஒரு மிக பெரிய உண்மையை மறைத்திருக்கிறான்

அது தெரிய வரும்பொழுது காதல் கொண்ட சொக்கனின் மனம் சுக்கு நூறாக சிதறும்

என்பதை அறியாமல் சொக்கனும், சொக்கன் வேறொருவனுக்கு சொந்தமானவன் என்பதை அறியாமல்

காதல் கொண்டுள்ள யசோதைக்கு காலம் பல பரிசுகளை தர காத்திருக்கிறது என்பதை அறியாமலும்

யசோதையும் அந்த இரவுக்கு விடை கொடுத்தனர்.

 அப்படி மாறன் மறைத்த உண்மை என்ன? சொக்கன் என்ன ஆபத்தில் சிக்க போகிறான்,

யசோதைக்கு காலம் கொடுக்க போகும் பரிசு என்ன? அறிந்த கொள்ள காத்திருங்கள் அடுத்த பகுதி வரை.

                                                         -ஒசைகேட்கும்

 

 

 

 

* கஜகர்ணம்- யானையை கட்டி போட்டிருக்கும் பொழுது அது நிலையாக நிற்காமல், கால்கள், துதிக்கை, தலை முதலானவற்றை அசைத்து கொண்டே இருக்கும். இதனைத்தான் கஜகர்ணம் என்பார்

 

* கற்றுளி- இரும்பை பழுக்க காய்ச்சி உடனடியாக எண்ணெயில் குளிர்விக்கும் பொழுது அதன் கடின தன்மை அதிகபடும். இவ்வகை இரும்பால் செய்த உளிகளை தான் கற்களை பொளிய பயன் படுத்தினர் அக்கால சிற்பிகள்.

 

பின்குறிப்பு: எண்ணெய் மற்றும் தீபந்தம் கொண்டு கல்லை இளக்கும் முறையை நான் முன்னெப்போதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அது ஒரு வார இதழ். அதை ஆதாரமாக கொண்டுத்தான் இங்கு எழுதியுள்ளேன். மேலும் ஆதரங்கள் இருந்தால் குறிப்பிடலாம் மற்று கருத்து இருந்தாலும் குறிப்பிடலாம்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

//எண்ணெய் மற்றும் தீபந்தம் கொண்டு கல்லை இளக்கும் முறையை நான் முன்னெப்போதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அது ஒரு வார இதழ். அதை ஆதாரமாக கொண்டுத்தான் இங்கு எழுதியுள்ளேன். மேலும் ஆதரங்கள் இருந்தால் குறிப்பிடலாம் மற்று கருத்து இருந்தாலும் குறிப்பிடலாம்.//

மிகுந்த உழைப்பு தெரிகிறது...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வியக்க வைக்கும் அதீத கற்பனை.. சம்பவங்கள் கண்முன் நடப்பது போல் உள்ளது..

அலுவலகத்திலிருந்து வீடு வரும் வழியில்.. குறுநகையோடு.. வாசித்தபடியே நடந்தேன்..

வீடு சென்ற பின் ஆற அமர வாசிக்கும் பொறுமையில்லை..

கல் “தொப்புள் கொடி அறுந்து” விழுந்த பகுதியை வாசித்தபோது... believe it or not.. I had goosebumps..

பாலகுமாரனின் சில ஆக்கங்களைத் தவிர வேறெந்த சரித்திர நூலையும் நான் படித்ததில்லை..

உளியின் ஓசை.. அப்படி ஒரு ஆவலை.. என் வரையில்... பேராவலை ஏற்படுத்துகிறது..

ஒன்று சர்வ நிச்சயம்... கற்றளி எழுப்ப.. பண்டைய தமிழ் மக்கள் தாமாக முன் வந்து உடலாலும் பொருளாலும் உதவியிருப்பர்...

ஆனாலும் ஜே சி பி இயந்திரங்கள் போன்ற எந்த விதமான நவீன கருவிகளும் இல்லாத அந்த காலத்தில்..

குடிமக்களின் நொங்கை பிதுக்கித் தான் வேலை வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது..

மூன்று முடிச்சுகளுடன் நிறுத்தியுள்ளீர்கள்.. அதிகம் காக்க வைக்காமல்.. உளியைத் தொடர்ந்து பொளியுங்கள்..

(எல்லாம் சரிதான்.. கொஞ்சம் இந்த் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க சரி பண்ணக் கூடாதா..??? நல்ல கதை படிச்ச திருப்தியோடு.. உச்சி முகர்ந்து....

அப்படியே.. எங்க அம்மா திட்ற மாதிரி... “இனி தப்பு வரும்..? இனி தப்பு வரும்..?”னு நங்கு நங்குன்னு கொட்டி வைக்கலாமான்னு வருது..

அப்படி மட்டும் நடந்தா... ராஜ்குட்டி காதலன்... “சீ(ழ்)த்தலை சாத்தனார்” என்று அன்போடு அழைக்கப்படுவார்...

அந்த பேர் பிடிக்கலைனா... “புண்ணு மண்டையான்னு” ஸ்டைலா வச்சிக்கோங்க...) :D



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:31:04 AM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

படிக்க படிக்க ஆச்சரியம்....பொதுவாக பெரிய கோயிலே நிறைய ரகசியங்கள் மறைந்த இடம் என்று எங்கள் classical dance madam சொல்லுவார்கள் அதில் இதுவும் ஒன்றோ என்று நினைக்கும் அளவு இருக்கிறது உங்கள் கற்பனை கதை...கடைசியில் வரும் விளக்கம் படிப்பவர்களுக்கு உங்கள் உழைப்பை உணர்த்தும்...Proud of u...

@rotheiss
பாவம் ராஜ்...இவ்வளவு பிரமாதமாக எழுதுறார் அவர்க்கு பொய் புண்ணு மண்டையான்னு...ஹா ஹா ஹா அதுவும் ஸ்டைலாக கொஞ்சம் ஓவர் ...உங்கள் அம்மா குட்டுன்னா எங்கள் வீட்டில் அம்மா,அக்காவிடம் கிள்ளு தமிழ் படிக்க...அந்த பயத்தில் எழுத்து விடாமல் மனப்பாடம் பண்ணி...ஆனால் எதற்கும் சரியான அர்த்தம் புரியாமல்...நான் வாசிக்கும்போது சரியாக இருக்கும் அவர்கள் வாசிக்கும்போது தப்பாக இருக்கும் அந்த ரகசியம் இப்போ வரை புரியல...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//மூன்று பக்கம் கழனிகளாலும் ஆறுகளாலும் சூழ பட்ட தஞ்சையில் அடி முதல் நுனிவரை உயர்ந்த ரக
செவ்வரியோடிய கருங்கற்கள் கொண்டு இப்படி ஒரு கோயிலை//
felt like seeing it on live..!


//இரண்டு ஆண்கள் கட்டி பிடித்து ஒழுக்கு ஏற்படுவதால் உண்டாகும் தீட்டும், மாடுகள் பூட்டிய வண்டியில்
உடலுறவு கொள்வதால் ஏற்படும் பாவமும், கட்டியஉடையுடன் நீரில் மூழ்கும் போது போய்விடும்//
i'd heard about this..! And still some lorry drivers afraid about .ving sex in their truck..!


//இந்த காதல்நோய் படுத்தும் பாடு இருக்கிறதே... எதிர்ப்பு வரும் போது கடுவாய் புலியைக்கூட
கடுகை போல என்ன வைக்கும்.பிரிவு வரும் பொழுது நடக்கும் தொலைவை கூட நாலாயிரம்
அடி போல எண்ணி தவிக்க வைக்கும்//
it's absolutely true..! And and you've a wonderfull talent in narrating a story..! Keep it up..! And sorry for the late..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஒருவழியாக முதல் பகுதியில் எவ்வித ரத்தமும், யுத்தமும் இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கீங்க..... ரொம்ப அற்புதம்.... ஒரு உண்மை சம்பவத்தில் பின்னணியில், நம் கற்பனையை திணிக்கும்போது உண்மைக்கு பங்கம் வராமல் எழுதுவது ரொம்ப சிக்கலான விஷயம்... அந்த சிக்கலை ரொம்ப எளிதா கையாண்டு விட்டீர்கள்.... சிறப்பு....

எல்லோரும் ப்ளஸ்'களை அதிகம் சொல்வாங்க என்பதால் ஒருசில மைனஸ் களை நான் இங்க சொல்றேன்....

கதைக்கும் காட்சிக்கும் தேவையான சில வரலாற்று விஷயங்களை நீங்க முன்வைக்கும்போது, உங்கள் பணிகள், முயற்சிகள் அபாரம்.... ஆனால், அந்த விஷயங்களில், நீங்க சொல்ல வரும் காதல் விவரிக்கப்படவில்லையோ'னு தோணுது..... அவங்க காதலுக்கு இன்னும் உயிர் கொடுத்திருக்கலாமோன்னு தோணுது....
மற்றபடி கதையும், களமும், கருவும், அதை நகர்த்திய விதமும் என்று எல்லாமும் கலக்கல்....

அடுத்த பாகத்தில் நான் குறையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை நகர்த்துவீங்கன்னு நான் நம்புறேன்..... வாழ்த்துகள்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் குருஜி

                                                           அவர்களின் காதல் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். இதனை கவனத்தில் கொண்டு 

தொடர  முயற்சிக்கிறேன். ஆலோசனைகளுக்கு நன்றி. எனது அடுத்த பகுதியையும் இதிலேயே தொடரலாம் 

என்று முடிவெடுத்திருக்கிறேன். கூடிய மட்டும் குறைகள் தெரியாமல் தொடருவேன் என்றும் தங்கள் ஆதரவுடன். நன்றிகள் கோடி



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

nys

cntnue

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

  *           தேம், மைந்து- மதம்

 *   மதநீர்- மதம் கொண்ட யானைக்கு கண்ணுக்கு பின் இருக்கும் சிறிய துவாரத்தில்

இருந்து வழியும், புளித்த மணம் கொண்ட திரவம்

·  *       மும்மதம் காத்து பெரும்பேறு பெற்ற - தாராசுரத்தில் சைவ, வைணவ, ஜைன சமய

கோயில்களை கட்டி கொடுத்ததால் இப்பட்டத்தை குந்தவை பெற்றிருந்தார்.

·     *   இரணிய கர்ப்பம்- இது ஒருவகை தானமாகும், வெங்கலத்தில் பசு உருவம் செய்து அதன்

வயிற்றில் ஒரு திறப்பு வைத்து உள்ளே அமர்ந்து கொள்வர். பின் சடங்குகள் முடிந்ததும் பசுவின்

பிறப்புறுப்பு வழியே வெளியேறுவர் இதனால் இச்சடங்கை செய்தவர் புதிய பிறவி எடுத்தவராகிறார்.

இப்பிறவியில் செய்த பாவங்கள் இந்த பிறவியிலேயே தீர்ந்துவிடுவதாக இச்சடங்கின் மூலம்

கருதினர். இச்சடங்கை திருவிசலூரில் மன்னன் துலாபாரம் எய்திய பொழுது அரசியார்

செய்திருக்கிறார்.

இசைக்கருவிகளுக்கான ஆதாரம்: http://ta.wikipedia.org/wiki/தமிழர்_இசைக்கருவிகள்_பட்டியல்



-- Edited by rajkutty kathalan on Saturday 10th of August 2013 04:56:42 PM



-- Edited by rajkutty kathalan on Sunday 11th of August 2013 07:30:33 AM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை தொடர்ச்சி

 

    வானத்தில் வெள்ளிதட்டு ஒன்றிலிருந்து கற்கண்டு சிதறி  கிடப்பதை போன்ற  

பிம்பத்தை வெண்ணிலவும் 

விண்மீன்களும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் அந்த இரவு வேலையில், மாறனை கட்டி தழுவி இன்பம்

கண்டதால் அவனது உடல் மணம் தன் உடலிலும், உதட்டின் மணம் தன் உதட்டிலும்

வீசுவதை உணர்ந்து .உள்ளுக்குள் சிலிர்த்த படியே பாசறையை அடைந்தான் சொக்கன்.

 

   அருகிலுள்ள யானை கொட்டகையில் இருந்து அவற்றின்  

மணியோசை காற்றை கிழித்து கொண்டிருந்தது. 

வழக்கத்தை விட இன்று கூடுதலாகவே அந்த சத்தம் கேட்டது சிறிய ஐயூரை ஏற்படுத்தினாலும்.

மருத்துவ முகாமுக்கு சென்று வந்த உற்சாகம் போல என்று எண்ணி கொண்டான்.

 

     தொடர்ந்து அறைக்குள் சென்றவனுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. சக வீரர்களெல்லாம் 

உறங்கி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தவனுக்கு, அங்கு அனைவரும்

அமர்ந்து எதை பற்றியோ தீவிரமாக் வாதம் புரிந்து கொண்டிருப்பது வியப்பாக இருந்தது.

இவனை கண்டதும் தீபச்சந்திரன் ஓடி வந்து

“சொக்கா... இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்?

“நம் வாழ்நாளில் நாளை மறக்கமுடியாத நாளாய் அமைய போகிறதடா..!! என்றான்.

வியப்பு மேலிட, “என்னடா விஷயம் கூறும்போதே ஆவலாய் இருக்கிறது சொல் என்றான் சொக்கன்.

“நந்தியெம்பெருமான் அமைக்க கொண்டு வரபட்டிருக்கும் கல்லையும், ஆலய பணிகளையும் பார்வையிட

நாளை அரன்மனையிலிருந்து மகளீர்கள் ஆலயத்திற்கு வர போகிறார்களாம்!!!

“ச்சே இதுதானா? இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன இருகிறதடா? ஏண்டா இப்படி பெண்கள்

என்றால் அலைகிறீர்கள்? என்று சலிப்புடன் கூறிய படி தனது படுக்கைக்கு சென்ற

சொக்கனை தடுத்து நிறுத்தினான் சந்திரன்.

“வாயை கழுவுடா பாவி, அந்தபுரத்தில் இருந்து நாட்டிய தாரகைகளும், நடன சிகாமணிகளும் ஒன்றும்

நாளை வர போவதில்லையடா, பட்டத்தரசியாரும், பெரிய பிராட்டியாரும், கூடவே இளைய நாச்சியாரும்

எழுந்தருள போகிறார்களாம். என்று அவன் கூறியவுடன் சொக்கன்

“ஆஹா.... என்ன பிழை செய்துவிட்டேன்!!?, சரி சரி பொருத்து கொள்ளடா. “ அப்படியானால்

சிறப்பு நிகழ்ச்சி ஏதேனும் இருக்குமே?

“ஆமாமடா பலவித வரவேற்பிற்கு ஏற்பாடு செய்ய பட்டிருக்கிறதடா. அவர்கள் வரும் பொழுது வாயிலில்

நமது  யானைப்படை கூட அணிவகுத்து நிற்க வேண்டுமாம், அதற்கு நமது குழுமத்தை தான்

தேர்ந்தெடுத்திருகிறார்கள்.

“அப்படியா...!!! நிச்சயம் படை பிரிவில் சேர்ந்த பின் நமக்கு கிடைக்க போகும் முதல் பெருமையடா இது

உண்மையாகவே ஆனந்தித்தான் சொக்கன்.

“ஆமாமடா சூரியோதயத்திற்கு பின் மூன்று நாழிகை கழித்து வருவார்களாம், நாமெல்லாம்

முன்பே சென்று ஒதுக்க பட்ட இடத்தில் யானைகளுடன் நின்று விட வேண்டும், மேலும் நமக்கு அளிக்க

பட்டுள்ள சகலவித ஆபரண அணிகலன்களுடன், முறையான சீருடையில் இருக்க வேண்டுமாம்.

அதை பற்றித்தான் இத்துணை நேரம் பேசிகொண்டிருந்தோம் எல்லோரும்.

“ ஆமாம் நீ எங்கு சென்றிருந்தாய்? இதற்கு சற்றே தடுமாறிய சொக்கன்.

“அது! அது!! அதுவந்து..... நண்பனை பார்க்க போயிருந்தேன்!!

“ம்ம்.... நண்பனா? இல்லை அந்த மோர்க்காரியா? மருத்துவ முகாமில் அந்த பெண் தனியாக உன்னிடம்

ஏதோ கூறினாள் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறதே!! ஒரு வேளை அது சம்பந்தமாக

ஏதேனும்...

 

“என்னடா உளறுற?.... “ என்று அவனை தள்ளி விட்டு சமாளித்து அங்கிருந்து அகன்று விட்டான்

சொக்கன், மனதில் சந்திரன் கூறியது சிறிய குழப்பத்தை ஏற்படுத்தினாலும், நாளைய தினத்தை பற்றிய

எதிர்பார்ப்புகளுடனும், மாறனை பற்றிய நினைவுகளுடனும் படுக்கையில் சாய்ந்து கடந்த மூன்று நாள்

உறக்கத்தையும் சேர்த்து உறங்கினான் சொக்கன்.

 

 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

இரவில் “சந்திரன் கூறிய தகவல்களை கடல் கடந்து எங்கேயோ உதித்து கொண்டிருந்த “சூரியன்

கேட்டிருப்பான் போல, தஞ்சையில் நடக்க போகும் விந்தையான நிகழ்ச்சிகளை காணும் ஆவலுடன்

எழுகதிர் செல்வன் தன் கனகமணி பொற்கிரணங்களை நகரின் மீது விழும்படி செய்து கொண்டிருந்த அந்த

புலர் காலை வேளையில் ஆலய பணியாளர்கள் வழக்கத்தை விட

முன்னதாகவே வந்து பணிகளை துவங்கி இருந்தனர்.

 

அரசர் வருகை அடிக்கடி  நிகழும் ஒன்றாக இருப்பதால் , சலித்து போன பணியாளர்களும், மக்களும்

அரசிகளின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்தனர், பணியாளர்கள் கூடுதல்

உற்சாகத்துடன் பணி புரிந்து கொண்டிருந்தனர், காலையிலேயே பணிக்கு வந்த மாறனிடம்

தலைமை சிற்பி

“மாறா காலை வரும் பொழுதுதான் கவனித்தேன் முதல் திருவாயிலின் இடது ஓரத்தில் முதல்

நிலையில் சிறிய இடம் மொட்டையாக இருப்பது போல இருக்கிறது நீ சென்று ஏதேனும் சிற்பம்

வடித்து விட்டு வருகிறாயா? என்று கேட்டார்

 

“சரி பிரபு என்று மறுப்பேதும் கூறாமல் சாரங்களை பிடித்து கற்றுளிகளுடன் மேலே ஏறி வாகாக

அமர்ந்து கொண்டான் மாறன்.

 

அங்கிருந்து பார்க்கும் பொழுது தஞ்சை நகரின் தனிப்பெருமை அவனுக்கு விளங்கியது, மாட மாளிகைகள்

கூட கோபுரங்கள், அரண்மனை, அதனை அரவணைத்த படி தூரத்தில் ஓடும் காவிரி என்று கண்

கொள்ளா காட்சியாக இருந்தது அவனுக்கு, அப்படியே கீழே நோக்கும் பொழுது ராஜ வீதியின்

அருகே அரசிகளை வரவேற்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது,

 

சாலையை ஒட்டி

பெருமுரசு, சிறுமுரசு, பேரிகை, சந்திர வளையம், மொந்தை, பாகம், உபாங்கம், துடி,தூம்பு, பேரிமத்தளம்,

கணப்பறை, கண்டிகை, கல்லல், கிரிகட்டி போன்ற தோற்கருவிகளை இசைக்கும் கலைஞர்களும்,

 

சங்கு, தாரை, நாதசுவரம், கொம்பு, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம் போன்ற

நாதகருவிகளை இசைக்கும் கலைஞர்களும்,

 

கைமணி, தாளம், நட்டுவாங்க தாளம், கஞ்ச தாளம், கொண்டி, கடம், சேமக்கலம், தட்டுக்கழி போன்ற

தாள கருவிகளை இசைக்கும் கலைஞர்களும், வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

 

அதனை தொடர்ந்து பூக்களை வாரி இறைக்கும் பொருட்டு கையில் உதிரி பூக்களை கொண்ட

தட்டுகளை தாங்கிய படி பாங்குற பெண்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர்,

 

அதனை தொடர்ந்து யானை படை வீரர்கள் தத்தமது யானைகளுடன் அணிவகுத்து நின்றிருந்தனர்,

 

அதனை தொடர்ந்து இருக்கும் வாயிற் மண்டபத்தை ஒட்டி சிவாச்சார்யர்கள் பூரண கும்பங்களுடன்

நின்று கொண்டிருந்தனர்.

 

இவற்றை மேலிருந்து பார்க்கும் மாறனுக்கு மனம் எல்லையில்லா ஆனந்த பட்டது இருந்தாலும்

யானை படையின் அணி வகுப்பில் பொக்கை விழுந்தது போல இடையில் ஒரு யானை இல்லாமல்

இருந்தது அவனுக்கு முகம் சுளிக்க வைத்தது.  அதை எண்ணி யோசித்த வண்ணம்

நிமிர்ந்தவனக்கு சாலையின் மீது



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

தோள்களில் தோற்பட்டை, மார்பில் கவசம், தலையில் பாகை, அதன் மீது கோரை பூவுடன் புலிச்சின்னம்,

முதுகில் அம்பூரா தூளி, பளபளக்கும் பட்டாடை,

 

கையில் தனுசு, கதை. வீச்சு வாள், கட்டாரி, குறுவாள் போன்ற ஆயுதங்கள், இடுப்பில்

சங்கு அதனோடு உள்ள சிறிய தோல்பை என்று போர் வீரனுக்குரிய சகல வித ஆபரணங்களுடன்

ஆனை மீது ஆரோகணித்து வந்து கொண்டிருந்த சொக்கனை கண்டதும்

 

ஒருவேளை அந்த சிறை காத்த அய்யனார் தான் ஆனை வாகனத்தில் வீதியுலா வருகிறாரோ என்று கூட

தோன்றியது மாறனுக்கு. மூன்று நாள் தொலைத்த உறக்கத்தால் அசந்து தூங்கிய சொக்கன்

சற்றே தாமதமாகத்தான் புறப்பட்டு வந்தான். வந்த உடன் அவனுக்கு என்று ஒதுக்க பட்டு பொக்கையாக

இருக்கும் அந்த இடத்தையும் நிரப்பினான்.

 

இதனை மேலிருந்து பார்த்த மாறனுக்கு நிலை கொள்ள வில்லை

 

“ஆஹா இவனை எப்படி மேலே பார்க்க வைப்பது? நாம் இவனை பார்த்து கொண்டிருக்கிறோம்

என்று எப்படி அறிய வைப்பது? என்று யோசித்து கொண்டிருந்தாலும், சொக்கனின் கம்பீரமும், அழகும்

அவனை பெரும் பாடு படுத்தியது.

 

இருந்தாலும் சமாளித்து கொண்டு அங்கு சிதறி கிடக்கும் கல் துண்டுகளில்

ஒன்றை எடுத்து குறிபார்த்து சொக்கனின் மீது வீசினான் மாறன். கல் பட்டு விண்ணென்று தெரித்ததால்

அனிச்சையாக மேலே பார்த்த சொக்கன் மாறனை கண்டதும் மனதை பறி கொடுத்தான்.

உடனே மேலிருந்து மாறன், பாட்டிகள் திருஷ்ட்டி கழிப்பது போல தன

கையை முன்னோக்கி நீட்டி சுத்தி தலையில் வைத்து முறித்து கொண்டான், மட மட

என்று நெட்டி முறிந்தது . மாறனின் இச்செய்கையால் சொக்கனுக்கு வெக்கமும், ஆசையும்

பிடுங்கி தின்றது.

 

ஆனால் இந்த இன்ப வேளையில் ஏதோ தவறு இருப்பது போல சொக்கனுக்கு மனம்

எதையோ உணர்த்தியது

 சட்டென கண்களை மூடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு அங்கு வீசி கொண்டிருக்கும்

வித்தியாசமான புளித்த மணம் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. மூச்சை நன்றாக இழுத்து பார்த்தான்

விளங்கி விட்டது.

 

“ஆஹா இது மத நீரின் வாடை ஆயிற்றே!!? எந்த யானையிடம் இருந்து வருகிறது என்று தெரிய

வில்லையே!!?? என்று கால்களால் தன் யானையின் முகப்படாமை விளக்கி குனிந்து பார்த்தான்.

யானையின் மதக்குழியில் மத நீர் வழிய வில்லை என்பதை ஊர்ஜித படுத்தி கொண்டான்.

 

பின் மற்ற யானைகளை பார்த்தான்; அனைத்து யானைகளின் முகமும் முகபடாம் போட்டு மறைக்க

பட்டிருந்தது. அதனால் சரியாக உணர முடிய வில்லை சொக்கனால். மதம் கொண்ட

யானை காதுகளை அசைக்காது, என்ற வகையில் யோசித்தாலும் கடைசியில் நிற்கும் யானிகளின்

நிலைமை கண்களுக்கு புலப்பட வில்லை, என்ன செய்வது என்று யோசித்தவன் ஒரு முடிவை எடுத்த

படி இடுப்பில் இருக்கும் தோற்பையை திறந்து பார்த்து மனதை திட படுத்தி கொண்டான்,

பூக்களை வாரி இறைக்க காத்திருக்கும் பெண்கள் வைத்திருக்கும் பூக்களிலிருந்து நறுமணம் வீசுவதால்

சரிவர அது மதநீரின் மணம் தானா என்று கூட ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தான் சொக்கன்.

அந்த பூக்களின் வாசனையாலோ என்னவோ மற்றவர்களின் நாசிக்கு அந்த மணம் புலப்பட

வில்லை போலும்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

சிறிது நேரத்தில் பட்டத்து யானை முன் வர அரண்மனையின் ஆஸ்த்தான வாத்திய காரர்கள்

முன்னிசைக்க மூன்று சிவிகைகள் (பல்லக்கு) பலத்த பரிவாரங்கள் சூழ

ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆலய வளாகமும் அங்கு கூடி இருக்கும் மக்களும்

ஆவலுடன், பரபரப்பாய் காட்சி அளித்தனர். சாலையை ஒட்டி ஆலயத்தின் வாசலுக்கு நேர்

எதிரே அமைக்க பட்டிருந்த மேடையில் முதல் பல்லக்கு இறக்கி வைக்க பட்டதும் அங்குள்ள

கட்டியங்காரன்

 

வாணர்குல தலைவன் வந்தியத்தேவரின் வம்ச விளக்கு.........,

சுந்தர சோழர் ஈன்றெடுத்த சொல்லின் செல்வி.............,

ஆதித்த கரிகாலனின் தங்கை.......,

ஆகமங்கள் காக்கும் அருண்மொழித்தேவரின் அருகிருந்து காக்கும் அக்காள்.............. 

மும்மதம் காத்து பெரும்பேறு பெற்ற *

பெரிய குந்தவை பிராட்டியார் வருகிறார்...! வருகிறார்....!! என்றான்

தொடர்ந்து இரண்டாவது பல்லக்கு இறக்க பட்டதும்

 

திருவையாறில் உத்திரகயிலாயம் அமைத்து........,

திருவிசலூரில்இரணிய கர்ப்பம்* புகுந்து.........,

இடர் நீக்கும் ராசராசனின் இடப்பாகம் அமரும்....., உலகமாதேவி.....,

பட்டத்தரசி ஸ்ரீமதி தந்தி சக்தி விடங்கி தேவியார் வருகிறார் வருகிறார்....! வருகிறார்.....!!.

 

என்று கூவினான் பின் தொடர்ந்து மூன்றாவது பல்லக்கும் இறக்க பட்டவுடன்

 

சோழதேசத்தின் செல்வத்திருமகள்......,

 சுந்தர சோழந்தெரிந்த வில்லி........,

மும்முடி சோழர் ஈன்றெடுத்த முத்து செல்வி.......,

தஞ்சை மாநகரின் பட்டத்து இளவரசி.....

 இளைய குந்தவை நாச்சியார் வருகிறார்...! வருகிறார்.......!! என்று கூவினான்.

 

தொடர்ந்து மூன்று அரச குல மாதர்களும் அங்கு விரிக்க பட்டிருந்த ரத்தின கம்பளத்தில் நடக்க

துவங்கியதும் இசைக்கருவிகள் விண்ணதிர முழங்கின. அடுத்து பூமாரி பொழிய

யானை படையை சேர்ந்த யானைகள் ஒரு சேர பிளிறி தங்களது வரவேற்பை நல்கின. அங்கு நின்றிருந்த

அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க அவர்களுக்கு மங்கள ஆரத்தி காட்டி, பூரண கும்ப

மரியாதையை கொடுக்க அதனை பெற்று கொண்டவர்கள் ஆஸ்த்தான மண்டபத்தில்

எழுந்தருளி அமர்ந்தனர்.

 

உடனே மீண்டும் ஒரு முறை வாத்திய கருவிகள் விண்ணதிர முழங்கியது தான் தாமதம்,

அணிவகுப்பில் நின்றிருந்த யானை ஒன்று துதிக்கையை தூக்கி “ஓ வென்று பிளிறிய படி அந்த

கூட்டத்தில் புகுந்து அங்குள்ளவர்களை துவம்சம் செய்ய துவங்கியது. இசைக்கலைஞர்கள் எல்லாம்

கருவிகளை போட்டு விட்டு ஓட, யானை அவற்றை மிதித்து நாசமாக்கி விட்டு, அதன்

மீது அமர்ந்திருக்கும் தீபச்சந்திரனையும் சுமந்துகொண்டே சாலையில் உள்ள கடைகளையும், மக்களையும்

அடித்து கலங்கடிக்க துவங்கியது. கணப்பொழுதில் நடந்த சம்பவத்தால் அனைவரும்

அங்கு கதி கலங்கி போயிருந்தனர்.

 

இக்காட்சியை மேலிருந்து பார்க்கும் மாறனுக்கு சொக்கன் அந்த இடத்தில் இருந்து வெளியேற

வேண்டுமே என்று சிந்தித்தான், மேலும் காதலனின் பாதுகாப்பை பற்றிய ஐயமும்

ஏற்படவே பதற்றத்துடன் சொக்கனை பார்த்து கொண்டிருந்தான். ஆனால்

சொக்கனோ தனது யானையை விட்டு இறங்கி மதம் கொண்ட

யானையை நோக்கி ஓடி கொண்டிருந்தான்.

 

மைந்துற்ற யானை* மீது அமர்ந்திருந்த தீபசந்திரனை காப்பற்ற வேண்டுமே!! என்ற நோக்கில் சொக்கன்

யானையை நெருங்குவதற்குள் யனையை கட்டு படுத்த முயற்சித்த சந்திரனை யானை துதிக்கையால்

வளைத்து பிடித்து இழுத்து விசிறி அடித்தது. அங்கு இருந்த மரம் ஒன்றின்

மீது மோதி விழுந்தவனை தேடி கண்டு பிடித்து அவன் தலையில்

பாதங்களை வைத்து மிதித்து தீபச்சந்திரனின் கதையை முடித்தது அந்த தேமுற்ற யானை.*

 

இருந்தும் வெறி அடங்காமல் மக்கள் கூட்டத்தை நோக்கி  யானை நெருங்கி வரவே சிறிதும்

தாமதிக்காமல் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு குதிரையின் மீது ஏறி யானைக்கு அருகில் சென்றான்

சொக்கன். யானையின் பின் பக்கமாக சென்று இடுப்பில் இருந்த சங்கை எடுத்து சத்தமாக முழக்கினான்

 அந்த சத்தத்தில் மேலும் கிளர்ச்சியுற்ற அந்த வேழம் தன் பருத்த உடலை திருப்பி சொக்கனை துரத்த

துவங்கியது. 

 

சொக்கன் குதிரையில் முன் செல்ல அவனை துரத்தி கொண்டு யானை வெறியுடன் பின் தொடர்ந்தது.

இக்காட்சியை மேலிருந்து பார்த்த மாறனுக்கு படபடப்பில் இதயத்தின் ஓசை இடிபோல கேட்டது.

 

“ஐயோ!! சொக்கா உனக்கு ஏனடா இந்த வேலை? எனக்கு உயிரே போவது போல இருக்கிறதே!!!, தேமுற்ற 

யானையை தேடிச்சென்று மல்லுக்கு இழுக்கிறாயே!!

என்று மேலிருந்து தன்னை மறந்து கதறி கொண்டிருந்தான்.

 

யானை சொக்கனை கொன்றதா? சொக்கன் யானையை வென்றானா? இவற்றில் எது நடந்தாலும்

மாறனின் மண நிலை எப்படி இருக்க போகிறது ? அறிந்துகொள்ள காத்திருங்கள் அடுத்த பதிவு வரை.

                                                                                                           -ஒசைகேட்கும்



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

நல்லா இருக்கு ராஜ்குட்டி.... சம்பவங்கள் கண்முன் நடப்பவை போல் உள்ளன... ராஜராஜசோழனுக்கு அணுக்கி ஒருவர் உண்டென்று பாலகுமாரன் நாவல்களில் படித்திருக்கிறேன்... அவர் இதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டாரா?

யானையின் மதனனீருக்கு வண்டுகள் சுற்றி வருவதாக... தமிழ் செய்யுள்களில் படித்ததாக ஞாபகம்... அந்த மதனனீரும்.. இந்த மத நீரும் ஒன்றா?
(இந்த மதனனீர வச்சி பசங்க பெரிய ஆராய்ச்சியே நடத்துவாங்க.. :D)

Good job buddy... very very informative... Muacks!!!!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

ஒரு வார தாமதத்தால் என்ன ஆகிவிடும் என்று கேட்டவன், அந்தத் தாமதம் அவன் உயிரையே வாங்கிவிடுமென்று நினைத்திருக்க மாட்டான். கதை குதிரையில் ஏறி வேகமெடுத்துவிட்டது. இன்னும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.
கதையின் ஊடே பல தகவல்களை நெய்திருக்கிறீர்கள். கதைக்காக நிறைய ஆராய்ச்சி செய்திருப்பது தெரிகிறது.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்...

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

super ...continue

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதைக்காக உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கின்றன....வானத்தில் வெள்ளிதட்டு ஒன்றிலிருந்து கற்கண்டு சிதறி கிடப்பதை போன்ற .... ஆரம்பத்தில் மகிழ வைத்து முடிவில் பதைபதைப்புடன் படிக்க வைத்துவிட்டிர்கள் ...வழக்கம் போல் கடைசி தகவல்கள் அருமை....மாறனோடு மேலிருந்தும் சொக்கனோடு கிழேயும் ஒரே நிகழ்வுகளை சொல்வது நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது...keep it up

__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

please avara kondrathinga

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

You make me feel like seeing everything in life..! Like your way of writting and excited about your tamil knowledge..!

__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

அற்புதமான நடை.. அருமையான தமிழ். குழப்பம் இல்லாத கதா பாத்திரப் படைப்பு.
செந்தமிழ் அருவியில் முங்கிக் குளித்தது போல ஒரு உணர்வு.

"வானத்தில் வெள்ளிதட்டு ஒன்றிலிருந்து கற்கண்டு சிதறி கிடப்பதை போன்ற பிம்பத்தை வெண்ணிலவும் விண்மீன்களும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் அந்த இரவு வேலையில், மாறனை கட்டி தழுவி இன்பம் கண்டதால் அவனது உடல் மணம் தன் உடலிலும், உதட்டின் மணம் தன் உதட்டிலும் வீசுவதை உணர்ந்து .உள்ளுக்குள் சிலிர்த்த படியே பாசறையை அடைந்தான் சொக்கன்." // -

எத்தனை முறை படித்தாலும் அப்போதுதான் புதிதாகப் படிப்பதுபோல என்னை சிலிர்க்கவைத்த வைர வரிகள் இவை.

மதயானை மீது இன்னொரு மதயானை போல வீற்றிருந்த சொக்கனை வருணித்த விதமும் அருமை.

தொடரட்டும் உங்கள் நற்றமிழ்ப் பணி .

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நிறைய தேடுதல், உங்கள் வரிகளில் தெரிகிறது...... அதற்காகவே சிறப்பான பாராட்டுக்கள்.....
மூன்று தேவியரின் வருகையை அழகாக காட்சி படுத்தி இருக்கிறீர்.... எதிர்பாராத விதமாக மதம் பிடித்த நிகழ்வு அதிர்ச்சியான ஒன்று.....
போனவன் மீண்டு வருவானா? தெரியவில்லை.....
மாறனை போல காத்திருக்க மட்டும்தான் முடியும் இப்போதைக்கு.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை தொடர்ச்சி

மூற்பகலா அல்லது பொற்பகலா என்று வியக்கும் வண்ணம் ஏறுமுகத்தில் இருந்த கதிரவன் ஒளி பட்டு

தென் இமயம் (தக்ஷினமேரு) என்று தஞ்சை மக்கள் போற்றும் பெரிய கோயிலின் உத்தம விமானம்

ஜொலித்து கொண்டிருந்த அந்த காலை வேளையில் அங்கு கூடி இருந்த அனைவரும் முகங்களில் வியப்பு மேலிட,

அவர்தம் புருவங்களோ அதைவிட மேலே செல்ல, அந்த காட்சியை பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

ஆஸ்த்தான மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் அரசகுல மகளீர் கூட தம் நாட்டு வீரன் ஒருவன் மதயானையை

வலுச்சண்டைக்கு இழுக்கும் காட்சியை பெருமிதத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

 

ஆனால் ஆவலுடன் அனைவரும் பார்க்கும் அக்காட்சி மாறனுக்கோ உயிர் போகும் வேதனை எப்படி இருக்கும்

என்று காட்டி கொண்டிருந்தது. சொக்கனின் இந்த தீரசெயலை கண்டவன்

“சொக்கா உனக்கு அந்த வேழத்தால் ஏதும் ஆபத்து நேர்ந்து விட்டால் நான் என்னடா செய்வேன்?

அந்த யானை பாகன் போல உன்னயும் யானை மிறித்து கொன்று விட்டால்? ஐயோ!!

இந்த காட்சியை பார்க்கவா இவ்வளவு உயரத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்?.

என்று தன்னை மறந்து புலம்பினான்

தாயே!! உரையூர் வெக்காளி!!! உன் கருணை மழையை பொழி தாயே!!!

அந்த யானையால் என் சொக்கனுக்கு ஏதும் நேராத படி நீ தான் காக்க

வேண்டும் அம்மா!! அவனை இந்த பேராபத்தில் இருந்து காத்து விட்டால்

வரும் கடக கடைவெள்ளியில் உன் சன்னதியை 108

முறை பிரதட்சிணம் செய்கிறேன், அதோடு மட்டுமல்லாமல் சொக்கனோடு சேர்ந்து வந்து

உன்னை தரிசிக்கிறேன் அம்மா!! சொக்கனை காப்பாத்து!!

என்று வான்நோக்கி கரம்தூக்கி தொழுதவன், கண் திறந்து சொக்கனை பார்த்த பொழுது அந்த தேமுற்ற 

யானை சொக்கன் ஏறி சென்ற குதிரையை நெருங்கி, துதிக்கையால் பிடிக்கும் முயற்சியில் பின் தொடர்ந்தது.

ஆனால் சொக்கனோ இடுப்பில் இருந்த சங்கை எடுத்து இன்னொரு

முறைமுழக்கி யானைக்கு மேலும் கிளர்ச்சியை பெருக்கிய படியே வேகமெடுத்தான்.

அதோடு மட்டுமல்லாமல் அந்த பரந்த வீதியில் ஒரே நேராக செல்லமால்

குதிரையை சாலையின் இரண்டு பக்க விளிம்பையும்

தொடுமாறு வளைத்து வளைத்து செலுத்தினான் இதனால் குதிரையை பின்

தொடர்ந்த அந்த வேழமும் நேராக செல்லாமல் தன் பருத்த உடல்

கொடுக்கும் சிரமத்தையும் பொருட் படுத்தாமல் குதிரையை போலவே

விளிம்பிற்கு சென்று சென்று பின் தொடர்ந்தது. குதிரையின்

மீது வேங்கை செல்லுவது போல தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கும்

சொக்கனோ சாலையை ஒட்டி ஆலயத்தின் தென்

பகுதியில் இருக்கும் அந்த பரந்த திடலில் நுழைந்தான். பின் தொடர்ந்த யானையும்

தன்னை அலை கழிக்கும் குதிரையையும் சொக்கனையும்

கிழித்து வானில் எரியும் நோக்கத்துடன் திடலுக்குள் நுழைந்தது.

அதன் நீண்ட தந்தங்கள் முற்றிய வாழை தண்டை கூர்பார்த்து செருகியது போன்ற வென்மயுடனும்,

இரண்டு கரங்களின் கட்டை விரல் மற்றும்

ஆள்காட்டி விரல் கொண்டு பற்றினாலும் பிடிக்குள் சிக்காதபடி பெருத்த வடிவுடனும் இருந்தது.

இன்பம் கொடுக்கும் ஆனை எழுப்பும் மணியோசை போலல்லாமல் அந்த வேழத்தின் கழுத்து மணிகளும்,

காற் சதங்கைகளும் இடி போன்ற ஓசையை எழுப்பி கொண்டிருந்தது, 

கொலைவெறியில் செல்லும் ஆனையின் மென் பாதம் படும் இடமெல்லாம் மண்மகள்

உள்வாங்கி போயிருந்தாள். குழவிகளுக்கு கூட இன்பம்

நல்கும் குறும்பு கார யானை போலல்லாமல், கொடூர வேகத்தை கொண்ட அந்த யானையை

கண்டு அஞ்சாமல் சொக்கன் அதனை அழகாக மக்கள் இல்லாத இடத்திற்கு அழைத்து

சென்றதை கண்டு அனைவரும் வியக்கும் வேளையில் சொக்கன் அந்த பரந்த வெளியில் அங்கும்

இங்கும் குறுக்கும் நெடுக்கும், சடாரென பல திருப்பங்களையும் ஏற்படுத்திய வண்ணம் 

குதிரையை செலுத்த அந்த வேழமும் அதே போல அதன் பருத்த உடலை திருப்பி திருப்பி சொக்கனை

கண் மூடி தனமாக துரத்தி கொண்டிருந்தது. அளவில் சிறியதாய் இருந்தாலும் குதிரையின் வேகத்துக்கோ

அல்லது அதன் ஓடும் ஆற்றலுக்கோ ஈடு கொடுக்க  முடியுமா யானையால்?

தொடர்ந்து சொக்கனை சுற்றி சுற்றி வந்த ஆனை சிறிது சிறிதாக தன் வேகத்தை குறைக்க துவங்கியது,

 கால்களில்  ஏற்பட்ட குடைச்சலும், ஓடியபடியே இருந்ததால் ஏற்பட்ட மூச்சிரைப்பும் அந்த

வேழத்திற்கு வேதனையை தரவே அது வானத்தை கிழிக்கும் 

படி பிளிறி கொண்டே மிதமான வேகத்தில் விடாமல் சொக்கனை தொடர்ந்தது.

வேகத்தில் சோர்வடைந்ததே தவிர இத்தனை நேரம்

அலைகழிக்க பட்டதில் சொக்கனை கொல்லும் வெறியும், மதத்தின் செறிவும் அந்த

யானைக்கு கூடித்தான் போயிருந்தது. தன் எண்ணப்படி யானை சோர்வடைந்து விட்டதை

உறுதி செய்து கொண்ட சொக்கன். குதிரையை யானைக்கு வெகு சமீபமாக செலுத்தினான். 

பின் சற்றே யோசித்த வண்ணம் விலகி வந்து இடது தோளில் குடி கொண்டிருந்த தனுசை

எடுத்து அதில் வலது தோளில் குடிகொண்டிருந்த அம்பூராதூளியில்

இருந்து பானத்தை எடுத்து பூட்டினான். யானை ஓடிக்கொண்டு இருப்பதால் அவனுக்கு 

நினைத்த வண்ணம் குறி பார்ப்பது சிறிதே சிரமத்தை கொடுத்தது. அந்த கனபொழுதில்

கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்தி பூட்டியிருந்த 

அம்பிற்கு விடுதலை கொடுக்க, அது  காற்றை கிழித்து கொண்டு போய் யானையின் துதிகையில் தைத்தது.

மெல்லிய பாதத்தில் கருவேல முள் குத்தினாலே வேதனையால் யானைகள் துடிக்கும் என்ற நிலையில்,

நாற்பதாயிரம் வகை தசை பிரிவால் வடிமைந்த துதிக்கையில் தைத்த அம்பு பெரும்

வேதனையை யானைக்கு கொடுத்தது. அம்பு தைத்த துதிக்கையை பக்க வாட்டில் அசைக்க 

முடிந்தாலும், மேல்நோக்கி தூக்க அதனால் முடியவில்லை. துதிக்கையை தூக்கி பிளிருவதற்கே

யானை மிகவும் சிரமப்பட்டது.

 



-- Edited by rajkutty kathalan on Saturday 17th of August 2013 04:21:42 PM



-- Edited by rajkutty kathalan on Saturday 17th of August 2013 04:37:03 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

தீபசந்திரனை துதிக்கையால் வளைத்து பிடித்து விசிறி அடித்தார் போல இனி யானையால் செய்ய

முடியாது என்று உறுதி படுத்தி கொண்ட

சொக்கன் கையிலிருந்த தனுசை கண்களில் ஒற்றி அதற்கு மரியாதையை செய்து விட்டு

அதனையும் அம்பூரா துளியையும் கழற்றி தரையில் எறிந்தான்

பின் யானைக்கு வெகு சமீபமாக சென்று அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடியே

அதனை சுற்றி சுற்றி வந்தான். யானையும் நின்ற இடத்திலேயே சுழன்ற படி அவனை பிடிக்க முயன்றது.

ஒரு கட்டத்தில் சுழற்சி காரணமாக யானைக்கு அழற்சி ஏற்பட துவங்கவே இதுதான் 

சமயம் என்று, அது சுதாரிப்பதற்குள் மின்னலென குதிரையில் இருந்து தாவி யானையின் மத்தகத்தில் கால்

வைத்து கழுத்தில் கட்டபட்டிருந்த

கயிறை பிடித்து அதன் பிடரியில் ஏறி அமர்ந்தான் சொக்கன்.

யானை ஒரு கனம் திகைத்தாலும் அங்கு சுற்றி கொண்டிருந்த குதிரையை துத்திக்கையால்

ஒரு தட்டு தட்டவே அது தூரத்தில் தூக்கி எறிய பட்டு கனைத்த படியே எழுந்தோடி சென்று மறைந்தது.

அதற்குள் சொக்கன் தன் மேல் அமர்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்த  யானை துதிக்கையை

தூக்கி அவனை பிடிக்க முயற்சித்தது ஆனால் அம்பு கொடுத்த வலியால்

அதனால் சொக்கனை பிடிக்க முடிய வில்லை. இதுதான் தக்க சமயம் என்று உணர்ந்த சொக்கன்

தன் இடுப்பில் இருந்த தோல்பையில் கை விட்டு அதிலிருந்த குப்பிகளில் ஒன்றை எடுத்தான் 

ஆனால் அது இடுகளி* உண்டாக்கும் மருந்து என்பதால் பின் யானையின் மதத்தை

கட்டுபடுத்தும் மருந்தை எடுத்தான். இந்த இடத்தில் மேற்சொன்ன மருந்துகளை பற்றி

விளக்க வேண்டியது காதாசிரியனாக நமது கடமை ஆகிறது. 

 

போர்களத்தில் எதிரிகள் எய்யும்அம்பு முதலான ஆயுதங்கள் கொடுக்கும் வேதனையை

பொருட்படுத்தாமல் களிறுகள் முன்னேற “குளுகு எனும் தழையால் செயற்கையாக

மதத்தை (இடுகளி) உண்டாக்கும் மருந்துதான் முதலில் சொக்கன் எடுத்த மருந்து.

 

இடுகளி ஏற்படுத்த பட்ட யானைகளின் மதத்தையும், இணை சேர்க்கை திமிரால் உண்டாகும்

இயற்கை மதத்தையும் கட்டுபடுத்த “வாழை குருத்து கொண்டு செய்யபட்ட மருந்துதான்

சொக்கன் எடுத்த இரண்டாவது மருந்து.

சரி இதனை கொண்டு சொக்கன் என்ன செய்கிறான்

என்று பார்ப்போம் வாருங்கள்.

 

 அந்த மதம் தெளிய வைக்கும் மருந்தை இடுப்பில் இருந்த குறுவாளில் ஊற்றி தோய்த்து

யானையின் தலை பகுதியில் உள்ள பள்ளமான பகுதியில் ஓங்கி செருகினான் சொக்கன்.

ஒருமுறையோடு நிறுத்தாமல் மேலும் மேலும் அந்த மருந்தை உட்செலுத்தும் பொழுது ஏற்பட்ட

காயம் கொடுத்த வேதனையையும், அதில் இருந்து பெருக்கெடுத்த குருதியாலும், ஏற்கனவே

துதிக்கையில் தைத்த அம்பு கொடுத்த வேதனையாலும் துடித்து கொண்டே தன் வேகத்தை

குறைத்தது யானை. பின் மேலிருக்கும் சொக்கனை மறந்து விட்டு மெல்ல தள்ளாடிய படியே

 நடந்து கரிய குன்று ஒன்று சூறாவளியால் பெயர்ந்து விழுந்தது போல தரையில் மயக்கமுற்று சாய்ந்தது

அந்த யானை. அது சாய்வதற்குள் சொக்கன் அதன்  மேலிருந்து குதித்து

வீசியெறிந்த தனுசை போய் எடுத்து கொண்டான். 

இந்த காட்சியை வாய்மூடாமல் பார்த்த தஞ்சை மக்களும், கண்மூடாமல் பார்த்த

மாறனும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தன் காதலனின் வீரத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிட்ட குற்ற உணர்வில் தவித்தாலும்,

இத்தகைய வீரமகன் தனக்கே உரியவன், அவனது நெஞ்சம் 

தன் தலை சாய்க்கும் மஞ்சம், அவனது உள்ளம் கொண்டிருக்கும் வெள்ளம் தன் மீதுள்ள

 காதல் பிரவாகம், அவனது வலிமை பொருந்தியதோள்கள் தான் தலை சாய்க்கும் தலையனை,

என்று எண்ணிய பொழுது மாறனுக்கு காதல் உணர்ச்சி பிடுங்கி தின்றது. 

இப்பொழுதே ஓடி சென்று சொக்கனை அனைத்து கொள்ள வேண்டும் அவனது

வீரமிக்க கழல்களுக்கும் தீரமிக்க கைகளுக்கும், தர்மசாஸ்தாவை போன்ற அழகிய முகத்துக்கும்,

முருகனின் கரவேல் போன்ற கண்களுக்கும்  தன் உதடுகளால் ஒற்றடம் கொடுக்க வேண்டும்

என்று எண்ணிய படி கோபுரத்தில் இருந்து இறங்க துவங்கினான்

அதற்குள் சொக்கனின் சக வீரர்களும் தஞ்சைவாழ் மக்களும் ஓடி சென்று ஆனையை

கொல்லாமல் வென்ற சொக்கனை தங்கள் தோள் மீது சுமந்து கொண்டு அரசிகள் எழுதருளி இருக்கும் மண்டபத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதற்குள் மற்றைய வீரர்கள் கனமான 

இரும்பு சங்கிலிகள் கொண்டு மயக்க முற்ற யானையை பிணைத்து கொண்டிருந்தனர்,

மேலும் கால்நடை மருத்துவரான மதுசூதனருக்கு தகவல்தெரிவிக்க பட்டிருந்ததால் அவரும்

யானைக்கு மருத்துவம் பார்க்க வந்து விட்டிருந்தார் அவருடன் அரசிகளை காணும் ஆவலுடன்

வந்திருந்த யசோதையும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்த படி சொக்கனை சுமந்து வரும்

கூட்டத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள்.



-- Edited by rajkutty kathalan on Saturday 17th of August 2013 04:28:25 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஆணையின் மீது ஐய்யனார் போல, பின் குதிரை மீது கள்ளழகர் போல ஆரோகணித்த சொக்கன்

இப்பொழுது மனிதர்களின் தோள்

மீது ஆரோகனித்து வந்து கொண்டிருந்தாலும் அவன் கண்களோ கோபுரத்தின் மீது வீற்றிருந்த தன் காதலன

மாறனை தான் தேடின. நமது இந்த 

வீர பிரதாபத்தை மாறன் பார்த்திருப்பானா? அவன் இதனை கண் கொண்டு எப்படி பட்ட உணர்ச்சியுடன் இருப்பான்?

என்று அறியும் ஆவலுடன்

அவன் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தான் சொக்கன். ஆனால் அவன் அங்கு இல்லாதது கண்டு அவன்

முகம் சுண்டி போய்விட்டது

 

நாடாளும் ராணிகளே தன் வீரத்தை கவுரவிக்க போகிறார்கள் என்று பெருமித படாமல் தன் மனதாளும் நாயகனின்

பார்வைக்காக ஏங்கினான்

சொக்கன். அதற்குள் சொக்கன் மேடையில் ஏறிவிட, கோபுரத்தில் இருந்து இறங்கிய மாறன் சொக்கனை

நெருங்க கூட முடியாமல் இறங்கிய

இடத்திலேயே தவித்து நின்றான், எப்படியாவது முன்னேறி முன்னுக்கு செல்லலாம் என்று எண்ணினாலும்

அவனுக்கு முன் நின்ற

பெண்ணொருத்தியால் இயலாமல் அங்கேயே நின்று விட்டான் மாறன். அவனுக்கு முன் நின்ற பெண்தான்

யசோதை என்பதை குறிப்பிடவும்

நாம் இங்கு கடமை பட்டுள்ளோம்.

 

மேடையில் இருக்கும் சொக்கன் அரசிகளை பணிவுடன் வணங்கி விட்டு கூட்டத்தில் எங்காவது

மாறன் நிற்கிறானா என்று சுற்றும் முற்றும்

யாரும் அறியாத படி தேடிக்கொண்டு இருந்தான், சொக்கன் நம்மைத்தான் தேடுகிறான் என்று

உணர்ந்த மாறன் எப்படியாவது தன்

இருப்பை உணர்த்த தவித்து கொண்டிருந்தான், ஆனால் யசோதையோ தன்னைத்தான் சொக்கன்

தேடுகிறான் நாம் இங்குதான் இருக்கிறோம்

என்பதை அவருக்கு எப்படி உணர்த்துவது என்று எண்ணி கொண்டிருந்தாள். காதல் கொண்ட மூவரின்

ஆறு கண்களும் ஒன்றை ஒன்று சந்திக்க

தவிக்கும் அந்த வேலையில்

 

குந்தவை பிராட்டியார் பேச துவங்கினார்.

“எனதருமை தஞ்சை வாழ் மக்களே!! எனது தமயன் பார் போற்ற ஆட்சி செய்யும் இந்த சோழ வள நாட்டில்

அநியாயமாக ஒரு உயிர் போய்விட

கூடாது என்ற எண்ணத்தில் வேழத்தை கொல்லுவதற்கு வாய்ப்பிருந்தும் தன் சமயோசித அறிவுடன்

கூடிய வீரத்தால் மதயானையை அடக்கிய

இந்த வீரனை எத்தனை பாராட்டினாலும் தகும்,

“உனது பெயர் என்ன அப்பா?

“சொக்கநாதன் தாயே!! பணிவுடன் கூறினான் சொக்கன்

“ஆஹா..!!! என்னப்பன் ஈசனின் நாமம்!! எனதருமை சோழவளநாட்டின் குடிகளே!!....... தேமுற்ற

ஆனையை தேடிச்சென்று மல்லுகிழுத்து அதனை அடக்கியதால் இந்த வீரனுக்கு “ஆனையடக்கி என்ற பட்டத்தை

வழங்கி சிறப்பிக்கிறேன்.

இன்றுமுதல் “ஆனையடக்கி சொக்கநாதன் என்று நீ அழைக்க படுவாய் அப்பனே!! என்று அவர் கூறி தனது கழுத்தில் இருந்த

விலை மதிப்பில்லாத ரத்தின மாலையை கழற்றி சொக்கனுக்கு பரிசாக வழங்கினார். அதோடு நில்லாமல் அருகில்

இருந்த பட்டத்தரசி தன்

கையிலிருந்த விலை மதிப்பில்லாத மரகதகல் பதித்த மோதிரத்தை கழற்றி பரிசாக கொடுத்தார்.

 

அவைகளை பணிவுடன்

பெற்று கொண்டு அவர்களுக்கு உரிய வணக்கத்தை செலுத்திய படி கூட்டத்தை நோக்கிய சொக்கன் மாறனை

கண்டு கொண்டு விட்டான்.

மாறன், சொக்கன் நம்மை கண்டு விட்டான் என்பதை உணர்ந்த வுடன் ஆனந்த கண்ணீரில் நனைந்தான்.

சொக்கன் ஆனையை அடக்கிய

போது இருந்ததை விட தற்பொழுது அரசிமார்களின் திருகரங்களால் பரிசு பெற்றது கண்டு அவன் மனம்

ஆனந்த கூத்தாடியது. மாறனை கண்ட 

சொக்கனோ மரியாதையை மிகு இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து மாறனின் கண்களில்

வழியும் நீரை கண்டு பெருமித உணர்வில் 

கண்ணீர் சிந்தினான். ஆனால் மாறனை கண்டு கண்ணீர் விடும் சொக்கன் நம்மை பார்த்துதான்

ஆனந்தத்தில் அழுகிறான்

 “ஆகா.!!இவருக்குத்தான் நம் மீது எத்துனை காதல் இவரிடம் எப்படியாவது காதலை தெரியபடுத்தி

அவரது நெஞ்சில் குடி புகுந்து விட வேண்டும்

என்று எண்ணிய பொழுது யசோதைக்கும் அங்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்நிலையில்

மாமன்னர் அருன்மொழித்தேவர்!! வாழ்க! வாழ்க!!

பெரிய குந்தவை பிராட்டியார்!! வாழ்க!! வாழ்க!!

ஆனையடக்கி சொக்கநாதன்!! வாழ்க!! வாழ்க!!

என்று கோஷங்கள் எழ சொக்கன் மேடையிலிருந்து இறங்கினான். இறங்கியவனை சக வீரர்கள்

தூக்கி கொண்டு பாசறை நோக்கி நடக்க

அங்கு இருந்த அணுக்க தொண்டர்கள் கூடியிருக்கும் மக்களை அப்புற படுத்த மூன்று தேவிமார்களும்

ஆலயத்தின் பணிகளை பார்வையிட

உள்ளே நுழைந்தனர்.



-- Edited by rajkutty kathalan on Saturday 17th of August 2013 04:34:19 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

சொக்கனை காண நெருங்கி செல்ல முடியாத வேதனையுடன் எப்படியும் இன்று இலுப்பை தோப்பில்

பார்க்கத்தானே போகிறோம்

என்று மனதை தேற்றி கொண்டு கோபுரத்தின் மீது ஏறினான் மாறன், மொட்டையாக இருந்த இடத்தில்

என்ன சிற்பம் செதுக்கலாம்

என்று காலையில் எண்ணி கொண்டிருந்தவன் இப்பொழுது புத்துணர்ச்சியுடன் பொளிய துவங்கினான்.

 

தஞ்சையின் அழகை எவ்வளவு நேரம்தான் நீயே கண்டு கொண்டிருப்பாய்? நான் பார்க்க வேண்டாமா?

என்று நிலவு சூரியனை கடிந்து கொண்டதா என்னவென்று தெரிய வில்லை, ஆதவன் விரைவாக மறைய

சந்திரன் பால்மழை துவங்கி விட்டான். இன்பம் தரும் அந்த இரவில் இலுப்பை தோப்பில்

காதல் புறா இரண்டும் களித்து கொண்டிருந்தது.

 

காலையில் அரசியார் தனக்கு அளித்த மோதிரத்தை மாறனின் கரம் பற்றி அவன் விரல்களில் போட்டு

அழகு படுத்தினான் சொக்கன்

“என்ன சொக்கா எனக்கு போடுகிறாய் இது உனக்கு கிடைத்த பரிசல்லவா?

“சொக்கன் சட்டென கண்கள் குளமாக பேச துவங்கினான்

“மாறா நீ வேறு நான் வேறென்றா இது வரை நினைத்து கொண்டிருக்கிறாய்

இதுவே நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அந்த ரத்தின மாலையை உனக்கு பூட்டி

அழகு பார்த்திருப்பேனடா ஆனால் எனக்குதான்

காதலி வாய்பதற்கு பதில் காதலன் வைத்து விட்டானே!!

அதனால்தான் இந்த மோதிரத்தை உனக்கு அணிவிக்கிறேன்,

இனி காலம் முழுவதும் இது உன் விரல்களில் என் நினைவாக இருக்க வேண்டும் 

என்ற பொழுது மாறன் சொக்கனை கட்டி பிடித்து கொண்டு அழுத படியே

“சொக்கா என்னை மன்னித்து விடடா உனது மேன்மையான

அன்பை புரிந்து கொள்ளாமல் பேசி விட்டேன். என்றான்

பின் “சொக்கா நீயும் நானும் ஒருமுறை சேர்ந்து உறையூர் வெக்காளியம்மனை

தரிசனம் செய்வதாக 

வேண்டியுள்ளேன் எப்பொழுது செல்லலாம்

என்று கேட்டான் மாறன்

“அப்படியா.!!! சரிதான் நான் எங்கள் படைக்குழு தலைவரிடம் அனுமதி வங்கி

கொண்டு சொல்கிறேன்

 எத்தனை நாட்கள் ஆகும் நாம் சென்று வர?

“எப்படியும் முழுதாக ஒரு வார காலம் பிடிக்கும் நாளை கேட்டு விட்டு சொல்லடா,

நானும் தலைமை சிற்பியிடம் அனுமதி வாங்கி விடுகிறேன்

நாளை ஆலயத்தில் இதனை பற்றி முழுதாக விவாதித்து கொள்வோம்.

“சரி மாறா உனக்கு இத்தனை விலை மதிப்பில்லாத பரிசை அளித்துள்ளேனே

எனக்கு என்ன தர போகிறாய் என்று கேட்டான் சொக்கன்

“அதுதான் நானும் யோசிக்கிறேன் என்னிடம் என்ன இருக்கிறது? உனக்கு கொடுக்க என்று சோகமாக தலை

குனிந்த மாறனின் நாடியை பிடித்து தூக்கி உன்னிடம் என்ன இல்லையா?

சரிதான் இந்த கோவை பழம் போன்ற

உதடுகளுக்கு ஈடு இணை செய்யுமா அந்த 

விலை மதிப்பில்லாத ரத்தினங்கள்? என்று மாறனின் இதழ்களை கவ்வி சுவைக்க துவங்கினான்

காதல் கொண்ட பறவைகள் காம தேவனின் கூட்டுக்குள் அடைக்கலம் புக துவங்கிய

இதே வேலையில் அங்கு யசோதையும் சொக்கன் காலையில் தன்னை தேடியதை

எண்ணியும் பின் கண்ணீர் விட்டதை நினைத்தும் காதல் உணர்வில் தூக்கத்தை தொலைத்து கொண்டிருந்தால்.

ஆனால் காதலின் கடலில் படகோட்டும் சொக்கனும், யசோதையும் உண்மை தெரிய வரும் பொழுது

அவர்களின் இதயம் சுக்கு நூறாக வெடிக்க போகிறது என்பதை அறியாமல் அந்த இரவுக்கு விடை கொடுத்து கொண்டிருந்தனர்.

அது என்ன உண்மை? அறிந்து கொள்ள காத்திருங்கள் அடுத்த பதிவு வரை

                                   ஓசை கேட்கும்



-- Edited by rajkutty kathalan on Saturday 17th of August 2013 04:31:36 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

//இரவில் “சந்திரன்” கூறிய தகவல்களை கடல் கடந்து எங்கேயோ உதித்து கொண்டிருந்த “சூரியன்”

கேட்டிருப்பான் போல, தஞ்சையில் நடக்க போகும் விந்தையான நிகழ்ச்சிகளை காணும் ஆவலுடன்

எழுகதிர் செல்வன் தன் கனகமணி பொற்கிரணங்களை நகரின் மீது விழும்படி செய்து கொண்டிருந்த அந்த

புலர் காலை வேளையில்//

சாண்டில்யன் தோற்றார் உங்கள் வர்ணனையில். அற்புதமான கற்பனை...

//அங்கு வீசி கொண்டிருக்கும்

வித்தியாசமான புளித்த மணம் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. மூச்சை நன்றாக இழுத்து பார்த்தான்

விளங்கி விட்டது.



“ஆஹா இது மத நீரின் வாடை ஆயிற்றே!!?” எந்த யானையிடம் இருந்து வருகிறது என்று தெரிய

வில்லையே!!??” //

நான் ஏற்கனவே சொன்னது போலவே, உங்கள் அறிவுக் கூர்மை... சின்ன சின்ன விஷ்யங்கள் அமர்க்களப் படுத்துகிறது.

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

முதற்கண் அனைவருக்கும் நமது நன்றிகள்

திரு ரோதீஸ் அவர்கள்: அனுக்கி என்பவர் அரசனின் வரலாற்றை எழுதுபவர் என்று படித்திருக்கிறேன்

அவர் அரசரோடுதானே வருவார்? சரி இருக்கட்டும் தங்களது விரிவான விமர்சனத்திற்கு நன்றிகள்.

திருவாளர்கள் அரவின், cutenellaimdu, samram,shiyam,FRIDGER,msvijay அவர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த 

நன்றிகள்

திரு திருப்பூர் பாபு அவர்கள்,: சாண்டில்யன் போன்ற மகத்தான எழுத்தாளர் களுடன் என்னை ஒப்பிடுவது கடுகையும், 

மலையையும் ஒப்பிடுவதற்கு சமமாகும், தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள் 

தொடரட்டும் அனைவரின் ஆதரவும்



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

திரு ரோதீஸ் அவர்கள்:

தங்களது நீண்ட விளக்கத்துக்கும், தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள வேட்கைக்கும்

நமது நன்றிகளும் வணக்கங்களும்,

குழவி என்றால் குழந்தை என்று பொருள் படும் இதிலிருந்து அதற்கான விளக்கத்தை பெற்று கொள்ளலாம்

தீபச்சந்திரனை பற்றி தங்கள் எழுப்பியுள்ள கேள்வி சரியானதுதான்

அதற்கான விளக்கம் பின்வருமாறு, சரியான நேரத்தில்  மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லாததில் இருந்து

ஒரு யனைபாகனாய் மதம் பிடிப்பதற்கான அடிப்படை குறிப்புகளை கூட கவனியாமல் யானையை அலங்காரம் பண்ணி 

அழைத்து வந்தது வரை அவன் செய்தது மிகபெரிய தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகின்றன. 

அப்படியே இருந்தாலும் தன்னிடம் இருக்கும் ஆயுதங்களை (சொக்கனிடம் இருந்த அனைத்து தளவாடங்களும்

அவனிடமும் இருக்கும் என்பது குறிப்பிட தகுந்தது) வைத்து யானையை வழிக்கு கொண்டு வராமல்

 

அது துதிகையால் பிடிக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் உயிரை விட்டுள்ளான் தீபச்சந்திரன்.

போரில் வீர மரணம் எய்திய வீரர்களுக்கே அதிகம் கவலை படாத (பெருமையாக கருதும்) நம் தமிழர்கள் இத்தகைய 

குற்றவாளிகளுக்கு நிச்சயம் கவலை பட்டு அவனுக்காக நாள் முழுவதும் அழுது கொண்டு இருக்க வாய்ப்பில்லை

அப்படியே நண்பன் என்ற முறையில் சொக்கன் வருத்த பட்டாலும் ஈம சடங்குகளில் கலந்து கொண்டாலும் 

அவன் மாறனை காண வந்தது இரவு வேளையில்தான் என்பதையும் விளங்கி கொள்ள வேண்டுகிறேன்

மேலும் கதையின் போக்கிற்கு தீ்பச்சந்திரனின் ஈமசடங்கு முதலானவை அவசியம் இல்லை என்பதால் யாம் அதை பற்றி 

குறிப்பிட வில்லை என்பதையும் இங்கு விளக்க கடமை பட்டுள்ளேன். மேலும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்க.

ஆனா ##வெளியில தெரியறது ஒரு உருவம்... உள்ள இருக்கறது.. பல ரூபங்கள் மாதிரியான விஷயமா இது..## இது என்னனு 

சத்தியமா புரியல



-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:40:19 AM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

*இடுகளி- யானைகளுக்கு குளகு தழையிட்டு செயற்கையாக மதம் விளைவிப்பது.

 

குளகின் மூலம் மதம் உண்டாகும் என்பதற்கு சான்றுகள்:

 

"காமங் காம மென்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்

கடுத்தலுந் தணிதலு மின்றே யானை

குளகுமென் றாண்மதம் போலப்

பாணியு முடைத்தது காணுனர் பெறினே" (136) என்ற புறநானூற்று பாடல்

மற்றும்

சிந்தாமணியில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"

(சிந்தமணி உரை 750)

 என்று குளகு பற்றிக் குறிப்பு உள்ளது.

 

வாழை குருத்தால் மதம் தெளியும் என்பதற்கு சான்றுகள்:

" சோலை வாழைச் சுரிநுகும் பினைய

அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து

மயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பை (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் உறுதிசெய்துகொள்ளலாம்.

" யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று கிராமங்களில் வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா குறிப்பிட்டுள்ளார் 

மேற்கண்ட தழைகளை யானைகளை உண்ண வைத்துதான் அக்காலத்தில் பயன்படுத்தி உள்ளனர்

அதனை மருந்தாக்கி குப்பியில் அடைத்து கத்தி மூலம் உட்செளுத்தியது நமது கற்பனையே!!!

  யானை மதம் பற்றிய தகவல்களுக்கு நன்றி: http://muelangovan.blogspot.in/2010_12_01_archive.html



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Hey chance-less, felt like seeing a movie....

__________________
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard