ஒரு வருடத்தின் அருமை கல்லூரியில் அட்மிஷன் கிடைக்காதவனுக்கு தான் தெரியும். அரை வருடத்தின் மதிப்பு செமஸ்டரில் பெயில் ஆன மாணவனுக்கு தான் தெரியும். ஒரு மாதத்தின் அருமை குறைபிரசவத்தில் குழந்தை பெற்ற தாய்க்கு தான் தெரியும். ஒரு வாரத்தின் மதிப்பு வார பத்திரிக்கை ஆசிரியருக்கு தான் புரியும். ஒரு நாளின் மதிப்பு குடி போதையில் மட்டையாகி கிடந்தவனுக்கு தான் தெரியும். ஒரு மணி நேரத்தின் அருமை காத்திருக்க வைத்து காதலியை சந்திக்க விரையும் காதலனுக்கு தான் தெரியும். ஒரு நிமிடத்தின் அருமை விபத்தில் தப்பித்தவனுக்கு தான் தெரியும். ஒரு வினாடியின் அருமை ரயிலை தவற விட்டவனுக்கு தான் தெரியும்.
"மறுபடியும் உங்களை பார்க்க முடியுமோன்னு எனக்கு தோணலை.உங்களை பத்தி எதுவும் சொல்லவே இல்லை. நான் உங்களை வற்புறுத்தவில்லை, இருந்தாலும் என்னோடு வந்தததற்கு ரொம்ப நன்றி. எனக்கு பத்து நிமிஷம் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு ரயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கினேன். அவனும் என்னோடு நடந்தான்.
நேரத்தை பற்றி சொன்ன விதம் நல்லாருக்கு....அதோடு நடந்து முடிந்ததை சொல்லும்போது அந்த சந்திப்பை பற்றி அவர்கள் பேசியதையும் சேர்த்து சொல்லுவது சினிமாவில் வரும் கட்ஷாட் மாதிரி நல்லாருக்கு ...இது போல் எழுதுவது படிக்க வித்தியாசமாக இருக்கு....I like this....கலக்குறீங்க