Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனதில் உறுதி வேண்டும்


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
மனதில் உறுதி வேண்டும்
Permalink   
 


மனம் என்பது மாயை
அதில் நிலையானவன் மேதை
காரியங்களோ நம் செய்கை
அதற்கான உறுதியதில் தேவை

உலகமே பழித்தது ஹிட்லரை
நான் கூசாமல் புகழ்வேன் அவரை
தன் கருத்தில் மாறாது நின்றார் கடைசி வரை
காலம் கடந்து காதுகளில் கேட்கும் வகையில் ஆக்கிவிட்டார் அவர் பெயரை

அமெரிக்கா அலட்சியப் படுத்திய கறுப்பினர்
அவர் அமிழ்ந்த அடிமை
அவிழ்த்து அடிமைக்
கெதிராய் ஆசானம் ஒன்றை ஆணையிட்ட
ஆப்ரஹாமை
அமெரிக்காவே புகழும்
அளவிலான உறுப்பினர் அவர்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
தந்தை மரணமுற்ற பின் தங்க தேவதை பிறந்தாள்
தாயின் நலமும் குன்றி
தளிர் தவிக்கும்படி இறந்தாள்
நார்மாஜின் டென்சன் என்ற பெயருடைய அவள்
வளரும் வரை அனாதை இல்லத்தில் இருந்தாள்
வளர்ந்த பின் வீடு வீடாய் அசுத்தம் விலக்க விளக்கினாள்
இருந்தும் இடமில்லை தவித்தாள்
ஒரு கால உணவுக்கு
ஒரு காலண்டர் படத்துக்கு உடையின்றி நடித்தாள்
அதுதான்
அவள் கண்ட மாற்றம் அன்றோ
அடுத்தடுத்த வெற்றிகளோ
சேர்ந்தது போல் குன்றோ
பல பெண்கள் இவர் கண்டு கடிந்தொழுகிய வசனம்தான் இது நன்றோ
இறந்த பின்னும்
இடை அழகில் சிறந்தது இன்றோ
உலகம் புகழும்
அழகி அவள்
மர்லின் மன்றோ

கையேந்தி கடையில் நின்றவள்
கால் கஞ்சிக்கும்
கதியற்றவருக்காக
கையில் கடந்துவருது கண்ணியவானின் காரிய கருமம்
கைகளை துடைத்து விட்டு
கருமம் அதை நான் கொள்வேன் செய்
தருமம் அதை ஈகையாக்குவேன் என்றாள்
கருணை கடலவள்
அன்னை தெரஸா

அவர்களுக்கும்
உங்களுக்கும்
இருக்கும் வித்தியாசம்
ஒன்று தான்

மனதில் உறுதி கொண்டவர்கள் அவர்கள்
சொல் மாறிய கணத்தில் நொடிந்து விடுவீர்கள் நீங்கள்

சிறு சிறு சொற்களுக்கும்
பெரியதொரு விளைவு காண்போம்
அந்த விளைவு வழியே
மன உளைச்சல் காண்போம்
உளைச்சலின் உச்சியில்
விரக்தி காண்போம்
விரக்தியின் இறுதியில்
உயிர் முக்தி காண்போம்

வார்த்தை ஒன்றும் பெரிய வாளில்லை
எவர் சொல் அதிகாரமும் இங்கு
மாறவில்லை
அவர் கடிந்த மொழியில்
நீர் ஒடியப் போவதுமில்லை
இருந்தும் அது புரிவதில்லை
புரிந்தவர் இங்கு பலரில்லை
எல்லை கடந்தும்
இது நிற்பதில்லை
எல்லையில்லாமல் செல்கிறது இதில் பாதித்தவரின் நிலை


பிறர் வார்த்தைகளை பெரிது படுத்தாதீர்
உம் குற்றம் உரைத்தால்
அதை கேட்க தவிர்க்காதீர்
புகழ்ந்து கூறினால் மயங்காதீர்
இகழ்ந்து பேசினால்
நிற்காதீர்
தட்டிக் கொடுத்ததற்காக செயலில் இறங்காதீர்
வெட்டி எறிந்தால்
துளிர்க்க மறவாதீர்

மனதினில் உறுதி கொள்
உறுதியில் வலிமை கொள்
வலிமையில் நேசம் கொள்
நேசத்தில் நெகிழ்ந்து கொள்
பின்பு
உலகமே உன்னை எண்ணி நெகிழும்

-ராம்நவ்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...பாரதியார் பாடலில் உள்ள மனதில் உறுதி வேண்டும் ஏற்படுத்திய தாக்கம் உங்கள் கவிதையிலும் இருக்கு,ஹிட்லர்,ஆபிரகாம் லிங்கன்,மர்லின் மன்றோ,அன்னை தெரசா பற்றிய வரிகள் உங்கள் விசாலமான அறிவை காட்டுகிறது,
பின்வரும் ---வார்த்தை ஒன்றும் பெரிய வாளில்லை...நீர் ஒடியப் போவதுமில்லை...அருமை நண்பா...முடிவில்
மனதினில் உறுதி கொள்
உறுதியில் வலிமை கொள்
வலிமையில் நேசம் கொள்
நேசத்தில் நெகிழ்ந்து கொள்
பின்பு
உலகமே உன்னை எண்ணி நெகிழும்....you give a conclusion for life to over come the fears in us...good work...super...super...please join in kavithai competition...


__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard