Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரிபங்கி


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
திரிபங்கி
Permalink   
 


தமிழ் இனி மெல்லச் சாகும்!! என்பவர்களும், அதை நம்புபவர்களும்தான் சாவார்கள்!! தமிழ் சாகுமா!?.... சாவதற்கு அது என்ன அற்பப் பிறவியா!?

திரிபங்கி என்பது செய்யுளில் ஒரு அணியிலக்கணத்தைக் குறிப்பது. செய்யுளின் வரிகளில் உள்ள வாக்கியங்களை மூன்றாக பிரித்து நான்கு வரிகளிலும் முதல் வார்த்தைகளை ஒரு பிரிவாகவும், இரண்டாவது வார்த்தைகளை இரண்டாவது பிரிவாகவும், மூன்றாவது வார்த்தைகளை ஒரு பிரிவாகவும் கொண்டு பொருள் கொண்டாலும், அவ்விதமின்றி முழுதுமாகவே பொருள் கொண்டாலும் தரும் ஒரு அமைப்பு. அக்காலத்தில் இதை நிறைய பேர் செய்திருக்கிறார்கள்.... சிவத்திரு மீனாக்ஷி சுந்தரம்பிள்ளையவர்கள் இம்மாதிரியான நாசூக்கான செய்யுள்களை தமது பிரபந்தங்களில் சிலவிடங்களில் யமகம், மடக்கு, திரிபங்கி, முதலிய பலவற்றை சித்தாந்த கருத்தை சிறப்பிக்கும் வகையில் அமைத்துப் பாடியிருப்பார்!!

ஆதரந்தீரன்னை போலினியாயம்பி காபதியே
மாதுபங்காவன்னி சேர்சடையாய் வம்பு நீண்முடியாய்
ஏதமுய்ந்தாரினல்லல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்
ஓதுமொன்றே யுன்னுவாரமுதே யும்வர்நாயகனே!!

01. 
ஆதரந்தீர் - எமது ஆசாபாசத்தை நீக்குகின்ற
மாதுபங்கர் - உமையொரு பாகனே
ஏதமுய்ந்தார் - என் குற்றத்தில் இருந்து நீக்குகின்ற
ஓதமொன்றே - வேதாகமங்கள் நிர்ணயித்த ஒப்பற்ற பொருளே!!

02. 
அன்னைபோலினியாய் -தாய்போல் இனியவனே
வன்னிசேர் சடையர் - வன்னியை சடையில் சூடியவனே
இன்னல் சூழ்வினைதீர் - எம் துன்பங்களை தீர்ப்பவனே
உன்னுவாரமுதே - நினைப்பவர்க்கு அமிர்தமே!!

03.

அம்பிகாபதியே - அம்பிகையின் நாயகனே
வம்பு நீண்முடியாய் - வாசமிகும் கேசத்தை உடையவனே!
எம்பிரானினியார் - எம்பெருமானே... எனக்கு உனையன்றி வேறு யார்?
உம்பர் நாயகனே - தேவர்களின் தன்லைவனே!!



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

sorry இந்த அளவு தமிழ் இலக்கணம் தெரியாது...அணி பற்றி வரும் கேள்வி non sylabus...நான் படித்த ஸ்கூல் அப்டி they dont concentrated on languages...but in my own interest I read it frm the book...
இதை தான் தவறு என்கிறேன் அதை பற்றி தெரியாததால் அதன் அருமை என்னை போல் உள்ளவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது...now Im interested but no time...இதை வாசிக்கவே என்னால முடியலை...very ashamed to tell this...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அதொன்றும் கடினமில்லை நண்பா,இப்பாடலில் ஒவ்வொரு வரியிலும் வரும் முதல் வார்த்தைகளை மட்டும் சேர்த்தால் ஒரு பொருள் தரும்,அது போலவே இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்த்தைகளையும் சேர்த்து படித்தால் வேறு பொருள் தரும்.


திரி-மூன்று
பங்கி-பகுதி

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

I studied tamil during my school days and I am very much interested in tamil ilakkanam but I hv never heard about this earlier.Thanks for sharing this info.Very informative.Proud to have tamil as our mother tongue!!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

There are so many interesting things in tamil ilakkanam.One such thing I could remember is 'Andhaadhi'..This type of poems will have the last word of the first line as first word of the second line and so on...One familiar
example is 'Abirami Andhadhi' written by Abirami Pattar...Since it is difficult to type in tamil using my mobile,I will try to get a screenshot

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard