நானும் அவனும் தாம்பரம் ரயிலில் தான் செல்ல வேண்டும். அவனை விட்டு விலக வேண்டும் என தான் விரும்பினேன் ஏனெனில் பெரிதாக ஈடுபாடு எதுவும் இதுவரை அவனிடம் ஏற்படவில்லை. இந்த பத்து நிமிடத்திற்கு பிறகு இதை வளர்க்க விரும்பவில்லை. ஏனோ அவனை நெருங்க விட கூடாது என்கிற எண்ணங்களே என்னை நிறைத்து கொண்டு இருந்தது. என்னை சுற்றி ஒரு வேலி இருக்கிறது. நான் தான் அதை தாண்டி வெளியே வருவேன். அந்த எல்லையை மீறி யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டேன். இவனை பார்த்தால் தடைகளை உடைத்து நீக்கமற நிறைபவன் போலவே தோன்றியது.
"ஓகே, எனக்கு எக்மோர் வரை கொஞ்சம் வேலை இருக்கு, அப்போ நான் இந்த பக்கம் வர்ற ட்ரைன்ல போறேன், பை, பை" என்று அவனை பார்த்து சொல்லி விட்டு, பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தேன். அவன் கண்களில் நான் பிரிந்து போகிற ஏக்கம் இருந்தது. என்னை மறுக்காதே என்கிற வேண்டுகோள் அதில் இருந்தது. அவனுடைய உதடுகள் திறந்து பேசும் முன்னர் அவனை விட்டு விலகி எதிர் பக்கம் வரும் ரயிலை நோக்கி சென்றேன்.
அவனை திரும்பி பார்க்கவில்லை. எனக்கு தெரியும் அவன் என்னை நோக்கிக்கொண்டே நின்றிருப்பான். அதோ எக்மோர் வரை செல்லும் ரயில் நெருங்கி வந்து கொண்டு இருந்தது.
அவனை கண்ட அந்த நொடியில் இருந்து இதோ இந்த கடைசி தருணம் வரை எங்கே அவன் எல்லை மீறினான்?. அவசர அவசரமாக ஓடி வந்தவன் ஏன் அதே ரயிலில் செல்லவில்லை? எதற்காக நான் புத்தகத்தை மூடி வைத்து முகத்தை உயர்த்தும் வரை என்னை அணுகவில்லை? பத்து நிமிடத்திற்குள் என்னை கவர்ந்து அந்த நேரத்தை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்ற பதற்றம் அவனிடத்தில் இல்லை. கொடுத்த வாக்கை அவன் மீறவில்லை. இப்பொழுதும் கூட நான் ரயிலில் ஏற போகும் அந்த கடைசி நொடி வரை என்னை தொடர்ந்து வந்து தொந்தரவு செய்யவில்லை.
புத்தகத்தின் முகப்பை வைத்து அதன் மதிப்பை சொல்லி விட முடியாது . முகப்பு வேறு மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளேயும் ஒரு இனிய வியப்பு மறைந்து இருக்கும். புத்தகத்தின் உள்ளே புதைந்து கிடக்கும் சுரங்கங்கள் அட்டையில் தெரிந்து விடுமா என்ன? புத்தகத்தை ஏற்கனவே படித்த ஒருவர் பரிந்துரைத்தால் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். இறங்கி பார்த்தால் தானே கடலின் ஆழம் கண்டறிய முடியும். அது போல் திறந்து படிக்க வேண்டும். வரிக்கு வரி படித்த பிறகு தான் அது என்ன புத்தகம் என்று அறிந்து கொள்ள முடியும். அது தரும் செய்திகளையும் அது தரும் அனுபவங்களையும் வைத்து தான் அந்த புத்தகம் மனதுக்கு மிக நெருக்கமாக அமையப்பெறும். அதற்கு முன்பே நிராகரிக்கலாமா என நான் கையில் சுருட்டி வைத்து இருந்த புத்தகம் என்னை கேட்டது. ஆறடிக்கும் குறைவான உயரத்தில் இருந்த அந்த புத்தகதை திரும்பி பார்த்தேன்.
Very Nice story pa. அவனுடைய வாசனையை ஏற்கனவே எங்கோ நுகர்ந்து இருக்கிறேன். எனக்கு மிகவும் பரிச்சியமான வாசனை அது. எப்போது என்று தெரியவில்லை. எந்த ஜென்மத்தில் என்று தெரியவில்லை. அது தான் என்னை அவனோடு இந்த ஜென்மம் முழுக்க இழுத்து சென்று கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை- those words impressed me alot. keep rocking man
"எவ்வளவு அழகு டா நீ. உன்னை மட்டும் ஆண்டவன் ஏன் இவ்வளவு பேரழகனா படைச்சான்? ஒவ்வொரு முறை ரயிலில் நீ என் மீது மோதும் போதெல்லாம் உடம்பு அப்படியே பத்திக்கும். தடுமாறி நீ என்னை தொடும்போது தட தடன்னு என் மேல ரயில் போற மாதிரி இருந்தது. நீ சாதரணமா தான் என்னை பார்த்தாய், நான் எப்படிநொறுங்கி போனேன் தெரியுமா? வெளிய மட்டும் தான் திடமா ரயில் கம்பியை பிடிச்சு கிட்டு இருந்தேன். ஆனா உடம்பு உள்ள ஒவ்வொரு பார்ட்டா கழண்டு விழுந்திச்சுடா. உன் ரெண்டு கண்ணும் அப்படியே தீ பந்தம் மாதிரி ஜெகஜ்ஜகன்னு எரியுது. அதில் என்ன பார்த்தேன் தெரியுமா? அதில் தாண்டா என் மீதி ஆயுளையும் பார்த்தேன்..!!"//
//புத்தகத்தின் முகப்பை வைத்து அதன் மதிப்பை சொல்லி விட முடியாது . முகப்பு வேறு மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளேயும் ஒரு இனிய வியப்பு மறைந்து இருக்கும். புத்தகத்தின் உள்ளே புதைந்து கிடக்கும் சுரங்கங்கள்அட்டையில்தெரிந்து விடுமா என்ன? புத்தகத்தை ஏற்கனவே படித்த ஒருவர் பரிந்துரைத்தால் உடனே படிக்க வேண்டும்என்றஆவல் பிறக்கும்.இறங்கி பார்த்தால் தானே கடலின் ஆழம் கண்டறிய முடியும்.அது போல்திறந்து படிக்க வேண்டும்.வரிக்கு வரி படித்த பிறகு தான் அது என்ன புத்தகம் என்று அறிந்து கொள்ள முடியும். அது தரும் செய்திகளையும் அது தரும் அனுபவங்களையும் வைத்து தான் அந்த புத்தகம் மனதுக்கு மிக நெருக்கமாக அமையப்பெறும். அதற்கு முன்பே நிராகரிக்கலாமா என நான் கையில் சுருட்டி வைத்து இருந்த புத்தகம் என்னை கேட்டது. ஆறடிக்கும் குறைவான உயரத்தில் இருந்த அந்த புத்தகதை திரும்பி பார்த்தேன்.// migavum rasithu padithaen..! Azhagaana sledai..!
//அவனுக்குஆன்மீகத்தில்அபாரநம்பிக்கை.நிறையகடவுள்,முன்ஜென்மவினைகள்,கோவில்கள்எனநிறையசொற்பொழிவாற்றிகொண்டுவந்தான்// felt like reading about me..!