Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


                                                                                    மச்சக்காரன்-கதை

                                                                                           (இது அந்த மச்சம் இல்லை) 

     

            பாலத்தின் நடுபகுதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி சரணின் தோள் மீது கை வைத்து அழுத்திய படி இறங்கி கைப்பிடி சுவற்றிற்கு அருகில் ஓடினான் கார்த்தி. அங்கிருந்து பார்க்கும் பொழுது நீலத்திரை கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் நாகை மீன்பிடி துறைமுகமும், அங்கு அழகுற வரிசை படுத்தி நிற்க வைக்க பட்டிருக்கும் விசைப்படகுகளும் கண்ணுக்கு விருந்து வைத்தன.

           வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாட்களில் அதிகம் தொலைகாட்சிகளில் காட்டப்படும் அல்லது

அதிகம் பேசப்படும் நாகை அக்கரைபேட்டையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டு தான் கடலின்

கவின்மிகு காட்சியை பார்த்து கொண்டிருக்கிறான் கார்த்தி.

 

 நம் வாழ்க்கையில் எத்தனை முறை பார்த்ததாலும் அலுக்காத சில விஷயங்களில் கடலுக்கு என்றுமே முதலிடம் உண்டு. அதுவும் மேற்சொன்ன பாலத்தின் மீது நின்றுகொண்டு பார்க்கும் பொழுது மனதை பறிகொடுக்காதவர் இருந்தால் அவர்களுக்கு அடிபடையில் எதோ ஒரு கோளாறு இருப்பது உறுதி.

 “இந்த இடத்துல நின்னு இதோட லட்சித்தி ஒருதடவையாவது இதேமாதிரி பாத்திருப்ப அப்டி என்னதான் இருக்கோ?” என்று தன் ஆசை காதலனை செல்லமாக கடிந்து கொண்டபடி வண்டியை நிறுத்தி விட்டு அருகில் வந்தான் சரண்.

“சும்மாவா சொன்னாங்க முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவின்னு” எதுமே நமக்கு ரொம்ப கிட்ட இருந்தா அதோட மதிப்பே தெரியாதுடா........... எப்பவாவது பாக்குறவங்களுக்குதான் அதோட மதிப்பு தெரியும் என்று சரணை பார்த்து கூறி விட்டு மீண்டும் விரிநீரின் அழகை தன் விரிந்த விழிகளால் ரசிக்க தொடங்கிவிட்டான் கார்த்தி.

கரையில் நின்று ரசிப்பவர்களுக்கு பலவித ஆச்சர்யங்களை கொடுக்கும் கடல், நித்தம் நித்தம் பலவித இன்னல்களுக்கு இடையில் சான் வயிற்றிற்காக ஊன் உறக்கம் இன்றி உழைக்கும் மீனவர்களுக்கு அதே ஆச்சர்யங்களை தருவதில்லை. எனவே அத்தகைய மீனவர்களில் ஒருவனான சரணுக்கு மேற்குறிப்பிட்ட காட்சி ஆச்சர்ய படுத்தாததில் எந்த வித வியப்பும் இல்லை!.

 

சரி…..!! காதல் பறவைகள் இரண்டும் கடலின் அழகை ரசித்து முடிப்பதற்குள் இவர்களை பற்றிய சிறு விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்.

 

                                                                                --தொடரும்.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


“சும்மாவா சொன்னாங்க முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவின்னு”//
கேள்விப்படாத பழமொழி

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எங்கள் காவிரியின் புகழ்பாட, இன்னொரு கலைஞனும் வந்துவிட்டான்.... மிக்க மகிழ்ச்சி...
அக்கரைபேட்டை, அடிக்கடி சிங்கள ராணுவத்திடம் சித்திரவதை படும் மீனவ கிராமம் அது... நல்ல தொடக்கம்....

இரட்டை குதிரை சவாரி என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்.... இரண்டு கதையையும் கவனமா கையாளுங்க...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

nalla thodakkam aana kadhaiya innum konjam elaboratea type panni irukkalam

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

முதற்கண் அனைவருக்கும் நன்றிகள்!!

திரு அன்பை தேடி! அவர்களுக்கு.... 

                                                 மேற்கண்ட பழமொழி டெல்ட்டா வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்த படும் ஒன்று. இதையே திருவாரூர், சிதம்பரம் பகுதிகளில் வீதியிலே தேர் ஓடினாலும் விடியாமூஞ்சி பாக்காது என்று வழங்குவார்கள்.

திரு குருஜி! அவர்களுக்கு.... 

                                         பேருவகையாக இருக்கிறது என்னையும் கலைஞனென்று அங்கீகரித்தது. தங்களின் வாழ்த்துகள் துணை இருக்கும் பொழுது எனக்கு எந்த சிரமமும் இருக்காது.

திரு ஷ்யாம்! அவர்களுக்கு....... 

                                      வரவேற்பு இருக்குமா என்று சந்தேகித்ததால் தான் குறைவாக பதிவிட்டேன்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

மச்சக்காரன் கதை தொடர்ச்சி 

நாகபட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருக்கும் கார்த்தியின் தந்தை கரூரில் இருந்தது  

ஒழுங்கு நடவடிக்கை காரணமாகமாற்றலாகி இங்கு வந்து ஆறுமாதங்களாகி விட்டது. பொறியியல் பட்ட தாரியான கார்த்திக்கு அவன் வேலை பார்த்த உர

தொழிற்சாலை சூழல் ஒத்து கொள்ளாததால் அந்த வேலைக்கு முழுக்கு போட்ட தருணத்தில் தான் மேற்சொன்ன மாற்றல் அரங்கேறியதால் கார்த்தியும்  தாய்

தந்தையரோடு நாகை வந்து தங்கும் சூழல் உருவாயிற்று. அமைதியான,அழகான கரூரிலிருந்து புதிதாக குடிவந்திருக்கும் நாகை கொஞ்சம் கூட மனதை கவரும்

வகையில் இல்லை என்றும் வெளியில் செல்ல துணையாக நண்பர்கள் இல்லாததாலும் வந்த புதிதில் எங்குமே செல்லாமல்

வீட்டிலேயே அடைந்து கொண்டு முகநூல் மூலம் நண்பர்களுடன் உரையாடி கொண்டும் வேலை தேடி கொண்டும் இருப்பான் கார்த்தி.

எங்காவது வெளிமாநிலத்தில் சென்று தங்கி அங்கேய பணியாற்ற வேண்டும் என்பதுதான் கார்த்தியின் கனவு.  அதற்காக இணையத்தின் மூலமாக

அனைத்து பகீரத பிரயத்தனங்களையும் மேற்கொண்டும் இருந்தான்.

 

இப்படியாக பட்ட நாட்களில் ஒருநாள்தான் பெரும்பாலும் அசைவத்தை விரும்பாத கார்த்தியின் வீட்டிற்கு வேளாங்கண்ணிக்கு நேர்த்திகடன்  நிறைவேற்ற சென்ற

கார்த்தியின் அத்தை குடும்பம் ஒருநாள்  தங்கும்  முடிவுடன் திடீரென்று வந்ததது.

அன்று மனுநீதி நாள் என்பதால்

“அம்மா என்ன கேக்குறாலோ கிட்டருந்து வாங்கி குடு தம்பி.......”  என் தங்கச்சி நல்லா சாப்ட்டு போகட்டும்

 என்று கூறி விட்டு எப்போதும் செல்லும் நேரத்தை விட முன்கூட்டியே சென்றுவிட்டார் கார்த்தியின் தந்தை. அத்தை மகள் ஸ்ரீவதிக்குதான் கார்த்தியை மனம்

முடிக்க வேண்டும் என்று அரசல் புரசலாக பேசி கொள்ளுவதாலும் அதையே சாக்காக வைத்து அவள் அடிக்கடி இவனிடம் வழிவதும் கார்த்திக்கு பிடிக்காத

ஒன்று. அதனாலேயே பெரும்பாலும் இவர்களின் வருகையை விரும்பாதவன், தாயின் நச்சரிப்பின் காரணமாக நாம் தொடக்கத்தில் பார்த்த மீன்

பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்க சென்ற பொழுதுதான் முதன் முதலாக சரணை பார்த்தான். 

 

ஏன? மீன் வாங்க நேராக அங்குதான் செல்ல வேண்டுமா,,,? கடைதெருவில் வாங்க முடியாதா,,,,,,? என்று நீங்கள் கேக்கலாம். கார்த்தியின் தாய்க்கு கிடைத்த

புது நட்பான பக்கத்து வீட்டு பத்மாதான் 

“நாம நேரா அக்கரபேட்டக்கி போன கொஞ்ச விலையிலேயே நெறைய மீன் வாங்கலாம். எங்கூட்டு காரர்லாம் அங்கதான் போய் வாங்குவார்’”

என்று ஆலோசனை வழங்கியவள்.

ஆனால் அவள் கூறியது போல அங்கு மீன் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை கார்த்திக்கு.

 

நேரம் காலை எட்டுமணி என்பதால் அதிகாலையிலேயே நாட்டு படகுகளில் சென்ற மீனவர்கள் அபோழுதுதான் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு நாட்டு படகிலும் படகுக்கு சொந்தகார மீனவர் ஒருவரும் கூலிக்கு பணியாற்றும் ஐந்தாறு மீனவர்களும் கடலுக்குள் செல்லுவது வழக்கம்.

வழக்கத்திற்கு மாறாக இன்று அதிக பாடு விழுந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் கூடிய ஆரவரங்களுக்கு இடையே ஒரே சத்தமாகவும் ஏராளமான கூடை சுமந்த

பெண்களுடனும், வியாபாரிகளுடனும் காட்சி அளித்தது அந்த இடம்.  

கடற்கரையோரம, வலையில் சிக்கியிருக்கும் மீன்களை மீனவர்கள் தரம்பிரித்து கொண்டிருந்தனர். தரம் பிரித்த மீன்களை தங்கள் வீட்டு பெண்மணிகள்

இருக்கும் இடத்தில் வந்து கொட்ட, தொடர்ந்து அந்த பெண்கள்

"துள்ளுகெண்ட ஏறனறூ... எரநூறு.....,"

"பார நானுறு..... நானுறு......"

 "கோலா கூட நூறு..... நூறு........." என்று வகை வகையாக ஏலம் போட.... வாங்க வந்த பெண்கள் கூடைகளுடன் ஏலம் எடுத்து கொண்டு இருந்தனர். அந்த

பரபரப்பான சூழலில் யாரிடம் மீன் வாங்குவது?, யாரை பார்ப்பது? என்று குழம்பி தவித்த கார்த்திக்கு பிறகுதான்  மீன் வாங்க வந்திருக்கும்

பெண்களுக்கு தெரிந்தவர்கள் மட்டும் அங்கு மலிவு விலையில் மீன் வாங்கி கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அப்படி யாரையும் இவனுக்கு தெரியாதால்

தவித்து போய் நின்ற பொழுதுதான் அருகில் நிற்கும் ஒரு பெண்கள் கூட்டத்தில் மீன்களை கூடையில் சுமது  வந்து கொட்டினான் சரண்.

 

காசை கொடுத்து காய்ந்து காய்ந்து கட்டுடல் மேனிக்காக உடற்பயிற்சி நிலையத்தில் தவம் கிடக்கும் இன்றைய இளைஞர்களை போலல்லாமல்

உழைத்து உழைத்து உரமேறி கிடந்தது சரணின் உடல். அவன் அகன்ற தோளும் விரிந்த மார்பும், முறுக்கேறி புடைத்து நிற்கும் நரம்புகளை தாங்கிய கரங்களும்,

கறுத்த நிறமும், கடைந்தெடுத்த முகமும், கார்த்தியை கவரவே வந்த வேலையை மறந்து சரனை சைட் அடிக்க தொடங்கி விட்டான் கார்த்தி. 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

                                                                             -தொடரும்



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

தமிழ் சினிமாவில் தான் இது கடற்கரை காலம் என நினைத்தேன். இங்கும் ஓர் கடல் சார்ந்த கதை. நல்ல ஆரம்பம்.

//முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவி// வீட்டு முற்றத்தில் காவிரி பாய்ந்தாலும் குளிக்க மாட்டாள் மூதேவி.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

மீன் வியாபாரம்... நல்லாவே... களை+கல்லா கட்டுதுன்னு நினைக்கறேன்... வாழ்த்துக்கள்...

துள்ளு கெண்டைன்னா... கெண்டைல ஒரு வெரைட்டியாங்க?? Coz... கெண்டை மீன்.. நன்னீர் வகையறா...!

எங்க ஊர் மீன் பிடித்துறைமுகம் ஞாபகத்துக்கு வருது... ஆனா என்ன... விடியறதுக்கு முன்ன... 4 ~ 5.30 தான்... பயங்கர பிஸியா இருக்கும்... 6 மணிக்கு ஈயாடும்...

நல்ல கதை நகர்வு... தொடர்ந்து கதைங்க.. :)

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

உழைத்து உழைத்து உரமேறி கிடந்தது சரணின் உடல். அவன் அகன்ற தோளும் விரிந்த மார்பும், முறுக்கேறி புடைத்து நிற்கும் நரம்புகளை தாங்கிய கரங்களும்,

கறுத்த நிறமும், கடைந்தெடுத்த முகமும், //

கருப்பு தான் என்னைக்குமே அழகு

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கறுத்த நிறமும், கடைந்தெடுத்த முகமும், கார்த்தியை கவரவே வந்த வேலையை மறந்து சரனை சைட் அடிக்க தொடங்கி விட்டான் கார்த்தி. ...சினிமாவில் heroin அறிமுகம் மாதிரி அட்டகாசமான intro...very nice narration




__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

முதற்கண் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் ! நன்றி கலந்த வணக்கங்களும்.!

தொடரட்டும் வாழ்த்துகள்.....

திரு ரோதீஸ் அவர்களுக்காக: துள்ளு கெண்டை என்பது உவர்நீர் வகை மீன்தான், நமக்கெல்லாம் செங்காளை மீன் அல்லது செங்காரா மீன் என்ற பெயரில் விற்பனை செய்ய படுகிறது. 

உண்பதற்கு சுவை மிகுந்ததாகவும் 

பார்ப்பதற்கு சிவந்த நிறத்திலும் இருக்கும். முட்களும் குறைவாக இருக்கும். மீன் விரும்பிகள் யாரும் இந்த மீனை தவிர்க்க முடிந்திருக்காது ஆனால் மீன் பிடி தொழிலாளர்களும் அதனை சார்ந்தவர்களும் இதனை துள்ளு கெண்டை என்றுதான் வழங்குகிறார்கள்.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

//முதற்கண் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் ! நன்றி கலந்த வணக்கங்களும்.!

தொடரட்டும் வாழ்த்துகள்.....

திரு ரோதீஸ் அவர்களுக்காக: துள்ளு கெண்டை என்பது உவர்நீர் வகை மீன்தான், நமக்கெல்லாம் செங்காளை மீன் அல்லது செங்காரா மீன் என்ற பெயரில் விற்பனை செய்ய படுகிறது.

உண்பதற்கு சுவை மிகுந்ததாகவும்

பார்ப்பதற்கு சிவந்த நிறத்திலும் இருக்கும். முட்களும் குறைவாக இருக்கும். மீன் விரும்பிகள் யாரும் இந்த மீனை தவிர்க்க முடிந்திருக்காது ஆனால் மீன் பிடி தொழிலாளர்களும் அதனை சார்ந்தவர்களும் இதனை துள்ளு கெண்டை என்றுதான் வழங்குகிறார்கள்.//

தலைவர் பெரிய ஆராய்ச்சியே நடத்த்யிருப்பார் போல

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

Very interesting frnd....
///காதல் பறவைகள் இரண்டும் கடலின் அழகை ரசித்து முடிப்பதற்குள்////
naan kadhal paravaigalai rasika todangi vitten.....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@chathero.....
//முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவி// வீட்டு முற்றத்தில் காவிரி பாய்ந்தாலும் குளிக்க மாட்டாள் மூதேவி//
thanks for posted the meaning chathero.....first enaku puriyala...... ipo ok..... nice one.... ha ha ha...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

மச்சக்காரன் - என்றால் மீனவன் என்று தானே அர்த்தம்.
அதன்படி கதையும் கடலும் கடல் சார்ந்த இடமுமாக களம் கொண்டிருக்கிறது.

சரணின் அறிமுகம் நல்ல ஆரம்பம்.

தொடருங்கள் நண்பா.

அரைக்கண் பார்வை அல்ல முழுக்கண் பார்வையும் உங்கள் கதை மீது பதித்துவிட்டேன்.

சரண்-கார்த்தியை பிரித்துவைத்து விளையாட்டு காட்டினால் நெற்றிக்கண் பார்வையையும் வைத்துவிடுவேன்.


__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

திரு chathero2006 அவர்களுக்காக : 

                                               சரியான விளக்கம் தான் ஆனால் வெறும் குளிப்பது மட்டும் என்று பொருள் பட்டு விடாது நண்பரே!

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஐப்பசி திங்கள் முதல் தேதியிலிருந்து துலா உற்சவம் நடைபெறும்,

மாதத்தின்  முப்பதாம் நாள் கடைமுக தீர்த்தவாரி (முழுக்கு) காவிரிக்கரையில் (துலாகட்டம்)நடைபெறும்,

ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டதில் நீராடினால்

பாரதத்தின் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம், கரண்ட் பில்லகூட கடைசி நாள்லதான நாம கட்டுவோம்!?, அதே போல கடைசி நாள் தான் அதிகம் பேர் நீராடுவாங்க

அன்றைக்கு இங்கு உள்ளூர் விடுமுறையுடன் சிறப்பாக கொண்டாட படும், இந்த வைபவத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து நீராடினாலும் 

மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களில் சிலர் வந்து வேடிக்கை பார்த்து விட்டு நீராடாமல் செல்லுவார்கள் . அதற்குதான் 

"முத்தத்துல காவிரி முழுவ மாட்டா மூதேவி"  என்றார்கள்

 

திரு பிரிட்ஜெர் அவர்களுக்காக : 

                        வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே! மச்சம் என்றால் மீன் அதனால் உங்கள் கூற்று சரிதான். வாழ்த்துகள் தொடரட்டும்.



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

story is super,,,
sorry for reading this story in late time,,,little busy with studies so no way to use online,
waiting for ur new post....♥..♥..♥

மச்சம் என்றால் மீன் i guessed the meaning but now u confirmed

__________________

 

 I-Feel.jpg



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

nalla irukku nanba. . . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

nalla pogudhu brother continue pannunga

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

மச்சக்காரன் - கதை தொடர்ச்சி 

     மேலுமிரண்டு முறை சென்று வந்து மீன்களை கொட்டியபின் கீழே அமர்ந்து நல்ல மீன்களை தரம் பிரித்தகொண்டிருந்த சரணுக்கு சிறிது நேரம் கழித்ததுதான் தெரிந்தது அவனை ஒருவன் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பது. “பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல முதல் பார்வையிலேயே கார்த்தியை புரிந்து கொண்ட சரன், தொடர்ந்த பார்வை படலங்களுக்கு முற்று புள்ளி வைத்து, அவன் பையுடன் வந்திருப்பது மீன் வாங்கதான் என்பதை அறிந்தவனாய் மெல்ல சென்று பேச்சு கொடுத்தான். பின் அவனுக்காக மலிவு விலையில் மீன் கொடுத்தான், பின் கைபேசி எண் கொடுத்தான் அவன் சென்ற பின் அவனிடம் அவன் மனதையும் கொடுத்தான். காற்று வாங்க போனவன் கவிதை  வாங்கியதை போல மீன் வாங்க போன கார்த்தி ஆங்கொரு ஆண் வாங்கி வந்து விட்டான்.

. தொடர்ந்த பல பேச்சுகளும், மறைமுக உறவுகளும், அவர்களுக்கு இடையே காதலை வளர்க்க, நண்பர்கள் என்ற போர்வையில் அவர்கள் காதலிக்க ஆரம்பித்து இன்றோடு ஐந்து மாதம் ஓடிவிட்டது. இந்த ஐந்து மாத காலத்தில் சரணுக்கு கார்த்தியை பிடித்ததை விட சரணின் தங்கை ஈஸ்வரிக்குதான் கார்த்தியை மிகவும் பிடித்து விட்டது. எப்போது பார்த்தாலும் கார்த்திண்ணா.........!!. கார்த்திண்ணா..........!! என்று அவள் உரிமையுடன் அழைப்பது இவனுக்கும் பிடிக்கும்.

வாழ்வளிக்கும் கடல் மாதாவே சாவளிக்கும் சவக்குழியாய் மாறி  சுனாமி என்ற பெயர் தாங்கி கடலோர மக்களை காவு வாங்கிய பொழுது சரணும் ஈஸ்வரியும்தான் அவர்கள் குடும்பத்தில் தப்பித்தனர். உலகில் தாய்ப்பாசத்திற்கு இணையான பாசம் தங்கை பாசம். சரணின் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரி தனக்கு இணையாக தன் அண்ணன் மீது கார்த்தியும் பாசம் காட்டுவதால் தான் கார்த்தியையும் ஓரு அண்ணனாக ஏற்று கொண்டிருந்தாள்.கடந்த ஒரு மாதமாக அமலில் இருக்கும் தடைக்கால மறியலால் சரண் அதிகம் பாடுக்கு செல்லமல்  கார்த்தியுடன் சுற்றி வருகிறான்.

 தற்பொழுது மீன்கள் இனபெருக்க காலம் என்பதால் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கு நாற்பத்தி ஐந்து நாட்கள் அரசு தடை விதித்துள்ளது. இந்நாட்களில் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், புது வர்ணம் தீட்டவும் பயன்படுத்தி கொள்வர் அதனதன் உரிமையாளர்கள். புதிதாக விசைப்படகு கட்டி கொண்டிருப்பவர்கள் தடைகாலம் முடியும் போது கடலில் படகை இறக்கிவிடும் முடிவோடு முனைப்பாக செயல்படுவர். விசைப்படகில் ஊதியதிற்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலை கட்டுவது, வலைக்கு செல்வதுமாக (நாட்டு படகில் மீன்பிடிக்க செல்வது) இருப்பர், வெல்டிங் தெரிந்தவர்கள் படகு கட்டும் சாலைகளுக்கு சென்று வேலை பார்ப்பதும் உண்டு. வியப்படைய வேண்டாம்!!, இன்றைய மீனவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் டிப்ளமா அல்லது ஐடிஐமுடித்தவர்கள்தான்.  வருமானம் மிகையாக கிடைப்பதால் வேறுவேலைகளுக்கு செல்லாமல் கடலில் பாடுக்கு செல்கின்றனர். வேறு வேலைகளுக்கு செல்வோரும் உண்டு. ஏன்? நமது சரண் கூட மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தவன்தான்.

சரி பாலத்தின் மீது நிற்கும் காதலர்கள் எதோ பேசிகொள்வது போல் தெரிகிறது வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.!!

“பாத்தது போதும் சீக்கிரம் கெளம்பு வயிறு வேற பசிக்குது, ஈசு உனக்கு புடிச்ச வட்லாப்பம் செஞ்சி வெச்சிருக்கணு போன் பன்னுணுது”

 என்று துரித படுத்திய சரணின்  கைபேசி அழைத்தது. எடுத்துபார்த்த பொழுது திரையில் ராஜ், காலிங் என்று ஒளிர்ந்ததால். அதுவரை சரணின் கைகளை தழுவி கொண்டிருந்த செல்போன் இப்போழுது அவனது காதை தழுவி கொண்டது.

  “ ஹலோ...... சொல்லு மச்சான்......”

“ எங்கடா இருக்க முக்கியமான விஷயம் பேசனும்டா”

“ம்ம்ம்..... இங்கதாண்டா பாலத்துகிட்ட இருக்கோம் நானும் கார்த்தியும் ஏன்டா என்ன விஷயம்”

“இல்ல மச்சான் ஒரு ஹெல்ப் பண்ணனும்டா........ உன்னால முடியுமா தெரியல.....!!!!”

“சொல்லாம எப்டிடா தெரியும் சொல்லு முடிஞ்சா செய்யிறன். அத்த எப்டிடா இருக்கு.?“

“ம்ம் நல்லாருக்குடா........ ரெண்டு வாரமா அதுக்கு ஆஸ்பத்திரி செலவு அது இதுன்னு ஒன்றலட்சம் கிட்ட தட்ட செல்வாயிட்டுடா..... இப்ப போட்டுக்கு ராடார், நோய்சர் (ஆமைக்கூட்டங்கள் வலையில் சிக்கி விடாமல் விரட்டும் சாதனம்) வக்கிறது, வயரிங் செலவுன்னு பாக்கி வேலக்கி சுத்தமா காசு இல்லடா..... மறியல் முடிஞ்சதும் போட்ட ஏறக்குறது கஷ்டம் போல இருக்குடா........ அதான் உனக்கு தெரிஞ்ச இடத்துல எங்கியாவுது ஒரு ரெண்டு லட்சம் பொரட்டி குடுக்கமுடியுமா......னு கேக்கலாம்னு........?!!!!”

 “நான் எங்கடா பொரட்டுறது? என்று சற்று யோசித்தவன் சரிடா.......... ஈசு கல்யாண செலவுக்குன்னு ஒரு அஞ்சு லட்சம் பேங்க் ல போட்டு வெச்சிருக்கன். அதுல வேணா எடுத்து தரன்டா..... உன்னால முடியிரப்ப குடு போதும்.” என்று இன்னும் சிறிது நேரத்தில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.

தன்காதலனின் பேச்சை வைத்தே ஒருவாறு கணித்த கார்த்தி

“யாரு தங்கம்!!........ராஜியா.......? என்று சரியாக கேட்டான்

“ஆமாண்டா........ போட்டு செலவுக்கு பணம் வேணுமாம் அதான்......... நாளைக்கு பேங்க்ல போய் எடுத்துகுடுக்கணும்”

“கல்யாணத்துக்குனு வெச்சிருக்குற பணத்த யோசிக்காம குடுக்குறியே.... ஒரு வேளை சமயத்துல அவன் தருலனா என்னடா.....பண்னுவ?

"ஆமா......!! இப்ப என்ன நாளா வெச்சிருக்கு அடுத்த வருஷம் தானடா....... கல்யாண பேச்சே தொடங்கணும். அபடியே அவன் தரலைனா நான் என்ன செத்தா போ போறான் அதுக்குள்ள சம்பாரிச்சிட மாட்டனா.....? என்று கேட்டவனின் கன்னத்தில் பொளேரென ஒரு அறை விழுந்தது."



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

கையை உதறி கொண்டே

“உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புத்தியே வராதா..? என்ன டென்ஷன் ஆக்கி பாக்கலைனா உனக்கு தூக்கம் வராதா.......?”

 என்று கூறி விட்டு கோபத்துடன் நடையை கட்ட ஆரம்பித்து விட்டான் கார்த்தி. கார்த்தியை அடிக்கடி இப்படித்தான் உசுப்பேத்தி ரசிப்பான் சரண். இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை மூண்டுவிடும். சரி இவனுங்க இப்ப சமாதானம் ஆக இன்னும் கொஞ்சம்நேரம் ஆகும். அதுக்குள்ள போனவாரம் இதே காரணத்தால் நடந்த ஒரு சிறு சண்டையை பற்றி கூறிவிடுகிறேன்.

சற்று முன்பு போனில் பேசினானே ராஜ் அவன் சரணின் நண்பன், தனது தந்தை காலத்தில் சொந்தமாக ஐந்தாறு விசைப்படகு வைத்திருந்த குடும்பம். ஆழிப்பேரலையின் போது அந்த படகுகள் எல்லாம் சிதைந்து விட்டது. அந்த கவலையிலேயே அவனது தந்தையும் போய் சேர்ந்து விட்டார். நன்றாக வாழ்ந்த குடும்பம் அன்றாட வாழ்விற்கே அல்லாடிய பொழுதுதான் சொந்தமாக விசைப்படகு கட்டுவது என்ற குறிக்கோளுடன் சிறுக சிறுக பணம் சேர்த்து லட்ச கணக்கில் செலவு செய்து படகு கட்டி வருகிறான் இன்னும் இரண்டு வாரத்தில் கட்டுமானம் முடிந்து கடலை முதல் முறை பார்க்க இருக்கிறது அந்த புதிய படகு. இந்நிலையில் சென்றவாரம் ஏற்கனவே நீரிழிவால்  பாதிக்க பட்டிருந்த ராஜின் தாயாருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அறுவை சிகிச்சைக்காக அப்போலோ வில்  அனுமதிக்க பட்டிருந்தார். அவரை காணும் சாக்கில் சரனும் கார்த்தியும் சென்னைக்கு சென்று அறை எடுத்து தங்கி நன்றாக ஊர் சுற்றி பார்த்து  காதலாகி கசிந்துருகி உரையாடி கொண்டிருக்கும் பொழுது

     “கார்த்தி என்ன ஏன்டா நீ இவ்ளோ லவ் பண்ற.......? நான் திடீர்னு உன்ன விட்டுட்டு போய்ட்டா.........? என்னடா பண்ணுவ,..........?”

என்று கேட்டான் சரண்.

“இப்புடி மொட்டயா கேட்டா எப்புடி....? விட்டுட்டு எங்க போவ......? என்னய ஏமாத்திட்டு வேற எதாவது ஜிகிடிய கூட்டிகிட்டு ஓடிடுவியா......?”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி அப்டிதான் வச்சுகியேன்.....”

“ஓத வாங்க போறான் பாரு ஒருத்தன்....!!! அப்டியே நீ ஓடுனாலும் என்ன தவிர வேற ஒருத்தனும் உன்னைய ரெண்டு நாளுக்கு மேல வெச்சுக்க மாட்டான்”  நக்கலாக சொல்லிவிட்டு சிரித்தான் கார்த்தி.

“சரி அப்ப அதுவேணாம், நான் செத்து போயிட்டா என்ன பண்ணுவ......?”

இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி அருகில் பழம் வெட்ட வைத்திருந்த

கத்தியை எடுத்து தனது உள்ளங்கையில் சரேலென கிழித்தான்..... ரத்தம் அதிலிருந்து பீறிட்டு கிளம்பியது.

 

                                                                    -தொடரும் 

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நோய்சர்...puthu thagaval neengal peenvargal vaalkai patri alagaka solrenga;...ungal eluthu ungaloodu pesuvathu pool iruku...iruvar pesikolvathu romba yatharthama iruku.... than thangaikaga panam serkum saran mel mariyathai varukirathu...iruvarkum nalla alkaiya kodenga please...waiting for the next...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink   
 

Super ah poguthu boss

__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

romba unarchi poorvamana kadhal pola please pirichidathinga

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

கதையை ஏன் இவ்வளவு வேகமா நகர்த்துறிங்க?.... கடலில் போகும் ஸ்டீமர் போல, அல்லாமல் ஆற்றில் போகும் படகு போல இருப்பதுதான் காதல் பயணத்துக்கு சிறப்பாக இருக்கும்... ஆனாலும், இந்த வேகம் நன்றாகவே இருக்கு.... தொடருங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

என்னை போன்ற புதிய வரவுகளை தாட்சண்யம் இன்றி பாராட்டும் அனைத்து 

நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

திரு சாமரம் அவர்களுக்கு!!

                                  கதையை கதையாக பார்க்காமல் அதனை ஒரு வாழ்வாக கருதும் தங்களை போன்ற வாசகர்கள் கிடைத்தது நான் செய்த  பாக்கியமாக 

கருதுகிறேன். தொடரட்டும் தங்கள் வாழ்த்துகள்

 

திரு குருஜி அவர்களுக்கு !!

                                 பாராட்டுகளுக்கு நன்றி, கதையின் எதிர்வரும் பகுதியில்  எதிர்பாராத திருப்பம் ஒன்று இருக்கிறது. அதற்காகத்தான் கொஞ்சம் வேகத்துடன் செல்ல வேண்டியுள்ளது

கொஞ்சம் பொறுத்தருள்க. தொடர்ந்து தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்யுங்கள். அப்பொழுதுதான் எனக்கு குளுக்கோஸ் சாப்பிட்டது போல இருக்கும். 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி ராஜ்குட்டி.

"முன்னே, பின்னே"-நு கதை நல்ல போகுது. மீனவர் விஷயங்களில் தாங்கள் குறிப்பிடும் பல சொற்கள், எனக்கு புதியதாய் உள்ளது. கதையோடு அவற்றையும் கற்றுக் கொள்கிறேன்.

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

    மச்சக்காரன் கதை தொடர்ச்சி

 

         ரத்தம் வழிய வழிய வலியால் துடித்த படி இப்புடி கிழிச்சுகிட்டு செத்துடுவண்டா....? நீ இல்லாத என் 

வாழ்க்கைய என்னால நெனச்சு கூட பாக்க முடியாதுடா.. என்று கண்ணீர் மல்க

கூறி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

.அதன் பின் அவனை நாகை வருவதற்குள் சமாதன படுத்தவே சரணுக்கு நேரம் போத வில்லை. விளையாட்டாக கேக்க போய் வினையாக முடிந்ததை எண்ணி சரணுக்கு வருத்தம் என்றாலும் தன் மீது உயிரையே வைத்திருக்கும் கார்த்தியை எண்ணி பெருமையாக இருந்தது.

 

      எவ்வளவு கோபமிருந்தாலும் சரண் தனது இரும்பு கரம் கொண்டு கார்த்தியின் இடுப்பை அணைத்தால் அதில் 

சொக்கி அனைத்தையும் மறந்து விடுவான் கார்த்தி. இதேபோன்ற நிகழ்வொன்றை நாம் பேசிகொண்டிருக்கும்

இவ்வேளையில் நமக்கு தெரியாமல் சரண் நடத்திவிட்டதால் இருவரும் சமாதனம் ஆகி வண்டியில்

ஏறி படகு கட்டும் தளத்திற்கு விரைந்தனர்.

       தடைக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கார்த்தியின் வீட்டிற்கு ஒரு கடிதம்

வந்தது... அதனை வாங்கி பார்த்த கார்த்தியின் தந்தைக்கு முகமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியில் ஆயிரம்

வாட்ஸ் பல்புகள் எறிந்தன.......!!! ஆனால் தற்பொழுது கார்த்தியும் சரணும் படகு கட்டும் தளத்தில் ராஜ்குமார்

அக்கரைபேட்டை என்று தேசியக்கொடி போன்று மூவர்ணத்தில் எழுதப்பட்ட ராஜின் புதியபடகின் அருகில்

நின்று கொண்டு எதையோ படு தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்தனர் அதில் ராஜ் யின் முகம் மட்டும்

சற்று கவலையுடன் இருந்தது.

 

“இதுக்கு போய் ஏண்டா வருத்த படுற...... ரெண்டுநாள்தான....!!! “ என்று கேட்டான் சரண்.

 

“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற.. இவ்ளோ நாளா கஷ்ட்ட பட்டு கடன உடன வாங்கி போட்ட கட்டுனா......

கடல்ல இறங்குற நாள்ல போய் எவ்ளோ பிரச்சன இருக்குறப்ப டீசல் விலையேறுனதுக்காக ஸ்ட்ரைக் பண்ண

போறங்குரானுகளே இது நியாயமாடா......?” என்றான் ராஜ்.

 

“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற....? இதுமாதிரி எதாவது பண்ணத்தான் நம்ம கவர்மெண்ட்க்கு புரியும் இதுவும் நல்லதுதான்னு நெனச்சிக்க.” இது கார்த்தி.

 

“இல்ல கார்த்தி... இந்த ஸ்ட்ரைக்லாம் வேலைக்கு ஆவாதுடா......போட்டுக்கு போறவன் வேலைநிறுத்தம்

பண்ணுனா....... வலைக்கு போறவன் (நாட்டு படகு மூலம் மீன் பிடிக்க செல்வது) புடிக்கிற மீன் கெடைகிறதால

நம்மளோட ஸ்ட்ரைக் தடம் தெரியாம போய்டுது. இதுக்காக தீர்வு கெடைக்கிற வரைக்கும் வலைக்கு போவாம

இருந்தா வயித்துக்கு என்ன பண்றது....? எல்லா போராட்டத்தையும் ஒருங்கினைக்கிறதுக்கு ஒரு ஆள்

இல்லைனா எல்லாம் வீண் வேலைதான்....... எங்க பிரச்சனைக்காக போரடுறதுக்காக

ஒரு தலைவர்னு யாருமே கெடயாது, அதுமாதிரி யாராவது இருந்து எல்லா மீனவர்களையும்

இணைச்சு போரடுனாதான் டீசல் பிரச்சனயிலேருந்து, சிலோன்காரண்ட்ட அடிவாங்குறது வரைக்கும்

தீர்வு கெடைக்கும்” மடைதிறந்த வெள்ளம்போல பேசிய தன் காதலனின் சமூக விழிப்புணர்வு வார்த்தைகள்

கேட்டு பெருமித பட்டான் கார்த்தி.

 

“சரி மாமா..... நாளன்னைக்கு போட் மொத வலைக்கு போவும்போது நீயும் வேலைக்கு வரணும் நீ

இருந்தா எனக்கு எல்லாமே நல்லதா நடக்கும்டா என்று சரணை பார்த்து ராஜ் கூறும் போது கார்த்தியின்

செல்போன் ஒலித்தது.

“சொல்லுங்கப்பா.......”

 

“கார்த்தி எங்கருந்தாலும் உடனே வீட்டுக்கு வாடா...ஒரு சந்தோசமான விஷயம் காத்திருக்கு.” என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தார் அவர்

வீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த கார்த்தியிடம் மேற்சொன்ன கடிதம் தரப்பட்டது. பிரித்து படித்தான்.

 

     அவன் எப்பொழுதோ எழுதிய ரயில்வே தேர்வில் வென்று விட்டதாகவும் இன்னும் இரண்டு வாரத்தில்

நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அகமதாபாத்தில் பணியேற்க வேண்டும் என்று கடிதம்

வழங்கிய செய்தி கார்த்தியின் தலையில் இடியாக இறங்கியது.தாய் தந்தையருக்காக பொய்யாக

மகிழ்ச்சி காட்டி உடனே சரணை காண புறபட்டான் கார்த்தி.

 

    கடிதத்தை சரணிடம் காட்டிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் கார்த்தி.

“ஹேய்ய்ய்ய்........இந்த வேலைக்கு போனா.......என்னோட இருக்க முடியாதுன்னு வருத்த படுரியா.....?” இதுக்கு வருத்தப்பட என்னடா இருக்கு?” என்று கேட்டான் சரண்

 

“அப்பனா........நான் போனா உனக்கு கவலை இல்லையா?”

 

“அப்பனா..... எனக்காக இந்த வேலைக்கு போகாம இருக்க போறியா,?”” அடிவாங்குவ.... உங்கப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரயும்ல.....?”

 

“அதுக்காக என்னோட ஆசா பாசத்தலாம் வெருக்கனுமா நீ இல்லாம நான் எப்டிடா இருப்பன்...? அங்க போய்ட்டா நாம இப்ப இருக்குற மாதிரி பேச முடியாது பழக முடியாதுடா?”

 

“தங்கம் புரிஞ்சிக்கடா... எனக்காகடா....ஒரு வருஷம்தான் அதுக்குள்ள ஈசுக்கு ஒரு நல்ல மாப்புளையா பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துடுவண்டா... அப்புறம் கண்டிப்பா..... உன்கிட்ட வந்துடுவண்டா.....!!!!!!!! நாம அப்புறம் ஒன்னாவே இருக்கலாம் டா.... வேணா வெளிநாடு கூட போய்டுலாம்டா...எனக்காக இந்த வேலைக்கு நீ போடா..!!” என்று ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான்.

“அடுத்த வாரம் கழிச்சு சென்னைக்கு செர்டிபிகேட் காட்ட நாம் ரெண்டு பேரும்தான் போகணும் புரியிதா..? என்றுகூறி விட்டு இல்லத்திற்கு சென்றான் கார்த்தி.

 

அன்றிலிருந்து இரண்டாம் நாள் தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கடலுக்குள்சென்று கொண்டிருந்தன....புதிய படகுகள் எல்லாம் புதுமணப்பெண் போல அலங்கரிக்க பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தயாராக இருந்தது.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

              ஐஸ் பெட்டிகள், உணவு பொருட்கள், டீசல் கேன்கள், உடைகள், வலைகள் 

என்று அத்தியாவசியபொருட்களை ஏற்றி கொண்டு குறைந்தது பத்து பணியாளர்களையும் கூடுதலாக ராஜியும், சரணையும்

ஏற்றி கொண்டு கரைக்கு விடை கொடுத்து மூவர்ண்ண கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டு கடலுக்குள் தன் முதல் பயணத்தை துவங்கியது ராஜின் புதிய

படகு. கரையில் இருந்து தன் காதலனுக்கு கையசைத்து வழியனுப்பினான் கார்த்தி. கரை மறையும் வரை காதலன் நின்ற திசையை நோக்கி கொண்டிருந்த

சரண் தன் செல்போனில் அலைவரிசை கிடைக்கும் வரை கார்த்தியிடம் பேசிகொண்டிருந்தான், இவனை போல மற்ற பணியாளர்களில் சிலரும் போனில் பேசிய

படி இருந்தனர் சிலர் உறங்கி கொண்டு இருந்தனர்..

 

        எங்கும் நீர்! எதிலும் நீர்! என்ற நீல கடலில் குறிப்பிட்ட தொலைவுகளில் பல விசைபடகுகள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். மீன்பிடி தடைகாலம் 

தற்பொழுதுதான் முடிவடைந்திருப்பதால் மத்திய பகுதிகளில் மீன்குஞ்சுகள் கூட்டம் கூடமாக நீந்தி கொண்டிருந்தை படகின் அடிபகுதியில் பொறுத்த

பட்டிருக்கும் கருவிகள் காட்டி கொண்டிருந்தன.... பெரியமீன்கள் கூட்டம் எல்லாம் மன்னார் வளைகுடா பகுதியில்தான் இருக்கும் என்பதால் முதல் நாள்

முழுவதும் வலையை கடலுக்குள் இறக்காமல் மன்னர் வளைகுடாவின் தொடக்க பகுதியான ஜெகதாபட்டினம் வரை விசை படகுகள் சென்றன.

அங்கிருந்து வலையை இறக்கி தெற்கு நோக்கி பயணித்தால் பாடு அதிகமாக இருக்கும் என்பது அனைத்து மீனவர்களும் அறிந்த ஒன்று. அவ்வகையில் நம்

படகிலிருந்தும் வலைகள் இறக்க பட்டு விட்டன....வலை முழுவதும் மீன் நிரம்ப இன்னும் மூன்று மணிநேரமாவது ஆகும் இதுதான் பணியாளர்களின்

கடைசி ஒய்வு. வலை நிரம்பினால் மேலே இழுத்துவிட்டு அடுத்த வலையை இறக்க வேண்டும். பின் அகப்பட்ட மீன்களை தரம் பிரித்து குளிர்பெட்டிகளில்

டைத்து சேமிக்க வேண்டும் அதற்குள் அடுத்த வலை நிரம்பி விடும்.... உட்கார கூட நேரம் இருக்காது!

 

         தடைகாலம் தற்பொழுதுதான் முடிந்ததால் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்திருந்தன.. மூன்று நாட்கள் விடாமல் உழைத்ததால் அனைவரும் உடல் 

சோர்வடைந்து காணப்பட்டனர்.

சரணுக்கு கையெல்லாம் ஊறி இருந்தது உடல் உறக்கத்தையும், உள்ளம் கார்த்தியையும் தேடியது.. இப்பொழுது இறக்கியுள்ள வலைதான் கடைசி வலை.

இதோடு கரைக்கு திரும்ப வேண்டியதுதான் என்ற கட்டத்தில் சிறிது ஒய்வு நேரம் கிடைத்தது சரணுக்கு. படகின் முனை பகுதிக்கு சென்று அமர்ந்து கொண்டான்.....

 

         கண்கள் சற்று அயல முற்பட்டது ஆனால் மனமோ கார்த்தியை பார்க்க விரும்பியது சட்டென சட்டை பையில் கையை விட்டான். அங்கு ஒளிந்திருந்த 

செல்லுக்கு விடுதலை கொடுத்து அதில் சேமிக்க பட்டிருந்த கார்த்தியின் புகைப்படத்தை பார்த்தான்........ மனதுக்கு இதமாக இருந்தது.....

உடனே அவனை கட்டி அணைக்க வேண்டும் போல இருந்தது. அந்த செல்போனையே கார்த்தியாக எண்ணி நெஞ்சில் அனைத்து கொண்டான் கண்கள் மூடியிருந்தும்

ஓரங்களில் ஈரம் கசிந்ததது. கரைக்கு திரும்பியதும் கார்த்தியுடன் சேர்ந்து சென்னை செல்லயிருப்பதை எண்ணி மனதிற்குள் சுகபட்டான். ஆனால் இந்த

சுகத்தை மேலும் அனுபவிக்க விடாமல் “கடார்” என்று படகின் மீது எதோ மோதும் சத்தம் கேட்டது....

                       -தொடரும்



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அநேகமாக இலங்கை கடற்படையின் வரவாக இருக்குமென நினைக்கிறேன்.... நீங்கள் அவசரப்படுத்தியதற்கான காரணம் இப்போ புரியுது.... நல்ல போக்கு, தொடருங்கள்....

இந்த மீனவர்கள் பற்றி நான் ஒன்னு சொல்லணும்.... சில நேரங்களில் அவங்க செயல்பாடு எரிச்சல் ஊட்டும் விதமாக இருக்கும்... ஏன் அவங்களுக்குள் ஒற்றுமை இல்லைன்னு எனக்கு புரியல.... இலங்கை கடற்படையால் அதிகம் பாதிக்கப்படுவது டெல்டா மாவட்டங்கள், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்து மீனவர்கள்தான்.... இதனை தென்மாவட்ட மீனவர்களோ, வடமாவட்ட மீனவர்களோ பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள்... அதே போல கூடங்குளம் விஷயத்திற்காக போராடுவது நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்ட மீனவர்கள் மட்டுமே.... ஒருவேளை கூடங்குளம் பிரச்சினையையயும், இலங்கை கடற்படை பிரச்சினையையும் ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்றாக அணுகி போராடி இருந்தால், என்றைக்கோ எல்லா பிரச்சினைகளுக்கும் விடிவு கிடைத்திருக்கலாம்.... நான்கு மாடுகளாக நம்மவர்கள் பிரிந்திருக்க, சூழ்ச்சியான சிங்கம் நம்மவர்களை அழித்துக்கொண்டு இருக்கிறது.... இந்த நிலைமை எப்போது மாறுமோ?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

அடகடவுளே... என்னவாயிற்று...??

//ஒன்றாக அணுகி போராடி இருந்தால், என்றைக்கோ எல்லா பிரச்சினைகளுக்கும் விடிவு கிடைத்திருக்கலாம்....// கிடைத்திருக்கும். ஹ்ம்ம்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

மிக அருமையான கதை... தொடங்கிய உடனேயே திடீர் திருப்பங்களும்....

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அடக்கடவுளே... நம்ம விஜய் சொல்ற மாதிரி.. "ஆயுபோவன்.. வெல்கம் டூ ஸ்ரீலங்காவா?"

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

awesome narration. . . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

அருமையான களம், கதை.. உங்கள் படைப்பு ஒவ்வொன்றிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது.. நுணுக்கமான தகவல்களுடன் கதை எழுதுவதால் வாசிப்பவர்களும் கதையின் போக்குடன் பயணிப்பது எளிதாகிறது.. அதிர்ச்சிகள் இப்போதுதான் ஆரம்பிக்கின்றன என நினைக்கிறேன்.. உங்கள் குருநாதரைப் போல கொலைகாரராய் இராமல் கொஞ்சம் கனிவுடன் இருக்க வேண்டுகிறேன்.. அழகான இளைஞர்கள் துன்பப்பட்டால், என்னால் தங்கிக் கொள்ள முடியாது...

__________________

gay-logo.jpg

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


Coincidence-ஆ என்னன்னு தெரியல.. இன்னிக்கு செய்தியிலயும்.. மீனவர் பிரச்சனை பத்தி பாத்தேன்.. கதைக்கோசரம் படகேறி அனுபவப்பட்டீங்களா? Your attention to details is just mind blowing!

நானும் தான் coastal town.. மீனவ நண்பர்கள் தம்பி மூலமாக அறிமுகம் உண்டு... அவ்வப்போது.. அழைப்பின் பேரில்... அவர்கள் வீட்டிற்கு சென்று... இறாலோ.. நண்டோ.. வாங்கி வந்த அனுபவமும் உண்டு.. ஆனா ஒரு நாளும்.. அவங்க பொழப்ப பத்தியெல்லாம்.. கேட்டதில்ல.. 

தவிர.. msvijay சொல்லியிருந்த மாதிரி.. இலங்கை அச்சுறுத்தல் எங்கள் தென் பகுதி மீனவர்களுக்கு இல்லையென்பதால்.. அவர்கள் (நானுமே) அதில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகத் தோன்றவில்லை.. இனி திருத்திக் கொள்ள வேண்டும்.. 

நல்லதொரு ஆக்கம் ராஜ்குட்டி.. வாழ்த்துக்கள்!!!! smile



-- Edited by Rotheiss on Wednesday 31st of July 2013 11:01:24 AM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
RE: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

திரு குருஜி அவர்கள்: தங்கள் கூறுவதும் சரிதான்

@ chathero2006,tirupurbabu,Rotheiss,Prabhujp அனிவருக்கும் எனது நன்றிகள்

திரு அர்விந்த் அவர்களுக்கு: பாராட்டுகளுக்கு நன்றிகள். குருநாதர் வழியில் செல்வதுதான் ஒரு 

சிஷ்ய பிள்ளைக்கு அழகு.!!? தொடரட்டும் வாழ்த்துக்கள்



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

மச்சக்காரன் கதை தொடர்ச்சி

இந்த பகுதி மனதை சங்கட படுத்தும் வகையில் இருந்தால் வாசகர்கள் சற்று விவேகத்துடன் செயல் படவும்.

 

ஆனால் இந்த சுகத்தை மேலும் அனுபவிக்க விடாமல் “கடார்” என்று படகின் மீது எதோ மோதும் சத்தம்

கேட்டது....

 

பாறை ஏதும் மோதி விட்டதா.... என்று எண்ணி திடுக்கிட்டு எழுந்த பொழுது சக ஊழியர்கள் அனைவரும்

கைகளை உயர்த்தி கொண்டு நிற்பது தெரிந்தது..

 

அதிர்ச்சியுடன் அவர்கள் நோக்கிய திசை நோக்கும் பொழுது அங்கு,

இலங்கை கடற்படை ரோந்து படகுகள் இரண்டு அவர்களை சுற்றி வளைத்திருக்க

ஒரு படகு இவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது. சுற்றி வளைத்திருக்கும் படகுகளில் இருக்கும்

சிங்கள வீரர்களின் கரங்களில் வீற்றிருந்த துப்பாக்கிகள் துப்பிய மேலும் சில குண்டுகள் படகில் 

மீண்டுமொருமுறை “கடார் “கடார் என்றுஓசையுடன் மோதிய இடத்தில் இருந்த தகரம்

பொத்து கொண்டு கடல்நீர் படகினுள் குடியேற துவங்கியது!!. அதை பார்த்த ராஜின் கண்நீர் வெளியேற

துவங்கியது.!! அதற்குள் அந்த படகு நெருங்கி வர அதிலிருந்த ஒரு சிங்கள வீரன் ஒருவன் சிங்களத்தில்

எதோ கத்தும் குரலில் கூறினான்

 

ஓயாட்ட சிறிலங்கன் ஆண்டுவ போட்டிங் லைசன்ஸ் தியனுவாத? –

(உங்களிடம் இலங்கை எல்லைக்குள் படகோட்ட அனுமதிப்பத்திரம் உள்ளதா?)

 

ஒயாட்ட ஆதார பலாபத்திர தியனுவாத?

(உங்களிடம் வாகனத்திற்கான வரிப்பத்திரம் உள்ளதா?)

பின் தமிழில் பேச துவங்கினான்.

 

“உங்கட ஆளுகளுக்கு எத்தன தரம் சொன்னாலும் விளங்காதா..?” நீங்க அனைத்து பேரும் இந்திய

 

எல்லைய தாண்டி இலங்கை எல்லைக்குள்ள ஊடாயிட்டிங்க. உங்கட அனைவரையும் இலங்கையின்ட

கடற்காவல் படை கைது செய்யிது மரியாதையா சரணடயிங்க இல்லையிண்டா சுட்டு பிடிக்க

வேண்டி வரும்”.

 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

என்று அந்த ஆர்மிக்காரன் சொல்லி முடிக்கும் பொழுது, அனைவரும் பரிதவிக்கும் வேலையில்

சற்றும் யோசிக்காமல் சரண் மட்டும் படகின் ஓட்டுனர் அறைக்குள் நொடி பொழுதில்

நுழைந்து அங்கு எதையோ சோதித்து விட்டு திரும்ப வெளியில் வரும்பொழுது கடற்படை வீரர்கள்

அனைவரும் இந்த படகிற்கு தாவி இருந்தனர். மிகுந்த எரிச்சலுடன் அதிலொருவன்

சரணை ஓங்கி ஒரு அறை விட்டான்.

“எங்கேயடா போன?”

 

“எங்க ராடார் ல இன்னும் அஞ்சு நாட்டிகல் மைல் தாண்டுனாதான் இலங்கை எல்லை இருக்குனு சொல்லுது நீங்க எங்கள அரெஸ்ட் பண்றது தப்பு.

என்று கூறி முடிப்பதற்குள்” அருகில் இருந்த சிங்களவன் ஒருவன் “என்னடா அதிகமா பேசுற?

நெருங்கி வந்துட்டிங்கல்ல? அப்புறமென்ன? என்று பேசிக்கொண்டே தன் கையில் இருந்த

துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்த அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டா சிறிதும் ஈவு இறக்கம்

இன்றி சரணின் நெஞ்சை துளைத்து கொண்டு வெளியேறியது. ரத்த வெள்ளத்தில்

கீழே சாய்ந்தவனை தாங்க முற்பட்ட ராஜின் தோளில் ஒரு குண்டு சென்று பதுங்கி கொண்டது.

இதற்குள் குதிகால் நனையும் அளவிற்கு படகில் நீர் புகுந்ததால் மாண்டு போனதாக கருதிய

சரணையும் ராஜையும் மட்டும் விட்டு விட்டு ஏனைய மீனவர்களை கைது செய்து ஏற்றி கொண்டு,

நான்கு நாட்களாக உயிரை வெறுத்து பிடித்த மீன்களை பெட்டிகளோடு தூக்கி கொண்டு,

வலைகளை அறுத்து சின்னாபின்னமாக்கி விட்டு சிங்கள வீரர்கள் சென்று விட்டனர்.

இதே நிகழ்ச்சி அங்கு மேலும் சில படகுகளுக்கும் அரங்கேறியது. 

சிறிது நேரத்தில் வலியால் துடித்த படி கண்விழித்த ராஜூ இடுப்பளவு தண்ணீர் படகில்

இருப்பதை உணர்ந்தான் பின் அருகில் பிணமாக சரண் செத்து மிதப்பது கண்டு அதிர்ந்தான்,அழுதான்.

இன்னும் சிறிது நேரத்தில் கடலில் மூழ்கி இறக்க போகிறோம் என்ற வேதனையை விட சரணின்

மரணம்தான் அவனை வாட்டியது. தண்ணீர் தோளளவு வரும்பொழுது “கடல் புறா காரைக்கால்

என்று எழுத பட்டிருந்த படகு அவரகளை நெருங்கியது. நிலைமையை உணர்ந்த காரைக்கால்

மீனவர்கள் ராஜுவையும் சரணின் உயிரற்ற உடலையும்

ஏற்றி கொண்டு நாகை நோக்கி பயணமானார்கள்.

 

ஆசையாசையாய் பார்த்து பார்த்து கட்டிய புதுபடகு கடலில் மூழ்கிய காட்சிதான்

ராஜுவிற்கு கடைசியாக தெரிந்தது. பின் அதிக ரத்த போக்கால் மயக்க

நிலையை அடைந்து விட்டான்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

மறுநாள் காலை எப்பொழுது தான் ஆசை நாயகன் வருவான், வந்த உடன்

அவனை கூட்டி கொண்டு சென்னை போகும் போது என்ன என்ன செய்யலாம்

என்று யோசித்து கொண்டே டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டிருந்த

கார்த்தி செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் “சற்று முன் : இலங்கை கடற்படை அட்டூழியம்;

நாகை, காரைக்கால்,ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் சுட்டு கொலை, ஐம்பதுக்கும் அதிகமானோர்

கைது, வலைகள், படகுகள் சூறையாடல் என்ற செய்தியை கண்டு அதிர்ந்தான். பின் அவசர

அவசரமாக  வெளியேறிய பொழுது அதுவரை தூறி கொண்டிருந்த வானம் அடித்து பெய்ய

துவங்கியது. மழையில் நனைந்து கொண்டே வண்டியை செலுத்தியவனுக்கு இதயத்தின்

ஓசை இடி போல காதுக்கு கேட்டது, பழைய பேருந்து நிலையத்தை தாண்டும்

பொழுது பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தென்பட்டது

 

“ஐயோ..... நெல்லுகட மகமாயி என் தங்கத்துக்கு ஒன்னும் ஆயிருக்க கூடாது அவன் நல்ல

படியா வந்திருக்கணும், “ என்று பிடித்த தெய்வம் பிடிக்காத தெய்வம் என

அனைத்து தெய்வங்களுக்கும் கோரிக்கை விடுத்த படி துறை முகத்தை அடைந்தான்.

நகரே பரபரப்பாக இருந்தது. துறைமுக அலுவலக வளாகத்தில் கூட்டம்

கும்மி அடித்தது உயிரை கையில் பிடித்து கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான்.

 

அங்கு தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்த ஈஸ்வரி, கார்த்தியை பார்த்ததும் “அண்ணே!

அனாதயாயிட்டன்னே!!! அண்ணன் நம்மாள விட்டு போய்ட்டுன்னே....!!

என்று ஓடி வந்து கார்த்தியை கட்டி பிடித்து கொண்டு அழுதாள்.

 

அதிர்ந்து நின்ற கார்த்திக்கு அழுகை கூட வரவில்லை!! பின் போய்டியாடா? என்ன

விட்டு போய்ட்டியாடா......? கேட்டமாதிரியே போய்ட்டியாடா? இனிமேல் நான் என்னடா பண்ண

போறன்? என்று அங்கு கிடந்த கல்லும் கரையும் படி கண்ணீரை கொட்டி தீர்த்தான். நம்மை விட

அதிக நீரை மண்ணுக்கு தருகிறான் என்று வானம்

நினைத்ததோ என்னவென்று தெரியவில்லை பெய்த மழை கூட நின்று விட்டது.

வெட்டுக்கத்தி போல கடலுக்குள் சென்று இப்பொழுது கட்டுத்துணியால் சுற்ற பட்டிருக்கும் சரணின்

முகத்தை மண் மூடும் வரை கண் மூடாமல் பார்த்து கதறி விட்டு தன் உயிரை உதறி விடும்

நோக்கத்தில் கடைசியாக ஈஸ்வரியை பார்க்க காதலன் வாழ்ந்த கனவு மாளிகை நோக்கி சென்றான்.

இவனை கண்டதும் ஈஸ்வரி மீண்டும் ஓடி வந்து கட்டியணைத்து அழுதாள்.

 

“கார்த்திண்ணே...... எனக்கு இனிமே யாருண்ணே இருக்கா? “ எனக்கு ஒரு பாசாலம்

வாங்கி குடுண்ணே நானும் செத்து போயிடுறன்

 

இந்த வார்த்தை கார்த்தியின் காதுகளில் சுடுநீரை ஊற்றுவது போல இருந்தது.

இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு தானே அவ்வளவு கஷ்ட்டபட்டான் இப்ப இவள

நிராதரவா விட்டுட்டா என் சரண் என்ன பத்தி என்ன நெனைப்பான். என்று மனதிற்குள் நினைத்தவன்

ஈஸ்வரியை வண்டியில் ஏற்றி கொண்டு வீடு நோக்கி விரைந்தான். போகிற வழியில் அவுரிதிடலில்

இலங்கை கடற்படைக்கு எதிராக பிரமாண்ட உண்ணாவிரத போராட்டம் துவங்க பட்டிருந்தது.

அங்கு எதிர்பட்ட அவனது தந்தையிடம் ஈஸ்வரியை ஒப்படைத்து

 

“இன்னைலருந்து உங்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள். வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்

தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டியது என் பொறுப்பு “

 

என்று கூறி விட்டு உண்ணாவிரத பந்தலுக்கு சென்று அங்கு வைக்க பட்டிருந்த ஒலி வாங்கியில்

இலங்கை ராணுவத்தையும், இந்திய அரசாங்கத்த்யும் கண்டித்து பேச துவங்கினான். சரணை இழந்த

வெறியும், அப்பாவி மீனவர்கள் மீது இருக்கும் பரிதாபமும், காதலனை பறித்த கயவர்களின் மீதுள்ள

கோபமும் வீரியம் மிகுந்த சொற்களாய் வெளிபட்டது. அவனது பேச்சு இன்று காற்றில் கரையலாம்;

ஆனால் அது ஆதிக்கத்தின் கதவை உடைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மணிப்பூருக்கு ஒரு இர்ரோம் ஷர்மிளாவை போல, தண்டகாரண்யத்துக்கு ஒரு மேத்தா பட்கர் போல,

இடிந்த கரைக்கு ஒரு உதயகுமார் போல நசுக்கப்படும் மீனவர்களுக்கு சரண் ஆசை பட்டது போல

ஒரு கார்த்தி கிடைத்து விட்டான். வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள்

முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?

 

                   -நிறைந்தது



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அழுத்தமான முடிவு. எதிர்பார்க்கவில்லை... Superb buddy! Hats off!

__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

காதலா ! ஐ மீன் ராஜ் குட்டி காதலா!.. சான்சே இல்லை..
சரண் - கார்த்தி அருமையான பாத்திரப்படைப்பு.

எளிமையான மனதை கொள்ளை கொள்ளும் நடை. அதே சமயம் அழுத்தமான வரிகள் .சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லும் நயம்.

//எவ்வளவு கோபமிருந்தாலும் சரண் தனது இரும்பு கரம் கொண்டு கார்த்தியின் இடுப்பை அணைத்தால் அதில் சொக்கி அனைத்தையும் மறந்து விடுவான் கார்த்தி.// - இந்த வரிகள் காதல் வயப்பட்ட மனதின் துடிப்பை எடுத்துக்காட்டினால்..

கடைசி வரிகளோ, " வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள் முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?" - காதலனின் இழப்பை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது.. இழப்பு தரும் வலி எத்தகைய எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை துல்லியமாக சொல்லி இருக்கிறீர்கள்.

உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன் காதலா.


__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சிங்கள வீரன்////
இந்த வார்த்தையை பயன்படுத்தாதிங்க ராஜ்..... நிராயுதபானியின் முன்பு ஆயுதம் காட்டி மிரட்டும் கோழைக்கு பெயர் வீரனா?.... சிங்கள கடற்படையை சேர்ந்தவன் என்று சொல்லலாம், அல்லது காடையன் என்று சொல்லுங்க.....

சிங்கள வார்த்தைகளை எங்க புடிச்சிங்க?.... சின்ன விஷயமானாலும் உங்கள் மெனக்கடல் பாராட்டிற்குரியது....

////இலங்கை கடற்படை அட்டூழியம்;

நாகை, காரைக்கால்,ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் சுட்டு கொலை, ஐம்பதுக்கும் அதிகமானோர்

கைது, வலைகள், படகுகள் சூறையாடல்////
இந்த வழக்கமான செய்திக்கு பின்னால் இருக்கும் ஆயிரம் வலிகளை உங்களின் இரண்டு பத்தி சுருங்க சொல்லிவிட்டது......

மனதை கனமாக்கிய முடிவு, ஆனால் இதுதான் நிஜம்... நித்தமும் நாம் பார்த்து கடக்கும் நிஜம்....
எல்லா போராட்டம்களுக்கும் ஒருகாலத்தில் கிடைக்க இருக்கிற விடியலின் மீதான நம்பிக்கையில் நானும் இருக்கிறேன்....

சிறப்பான முயற்சி, அழகான நடை.... நல்ல விதமான சொல்லாடல்கள், வழக்கு மொழிகளை சிறப்பாக கையாண்டு உள்ளீர்கள்... உங்கள் பயணம் இன்னும் வெகுதூரம் செல்ல எனது வாழ்த்துகள்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

manam satru kanakirathu intha niraivu paguthiyai padikkum pothu. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

manam satru kanakirathu intha niraivu paguthiyai padikkum pothu. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

good ending aana kaarthi pavam vali avanukkulla kalam poora irukkum

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

Cant control my tears .no words...படித்துவிட்டு மனசு ரொம்ப கஷ்டமாகிவிட்டது ...கார்த்தி உணர்ச்சிவசப்பட்டு விபரீத முடிவு எடுக்காமல் நல்ல முடிவு தந்தது அருமை...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

story ending ipdi varum nu konjam kuda ninaikala,,,,,☺♥☺but super ending

__________________

 

 I-Feel.jpg



புதியவர்

Status: Offline
Posts: 25
Date:
Permalink   
 

nice........ super ending......... :)

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard