Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதல் தோல்வியா..?


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
காதல் தோல்வியா..?
Permalink   
 


தம்பி நில் 
கண்ணில் ஏன் அடை மழை ..
ஒஹ் ..

காதலில் தோற்றுவிட்டாயா ?
சரி ..
நான் உன்னை தேற்றட்டுமா ?

எனக்கென்ன உன் வலி தெரியும் என்கிறாயா ?

தம்பி 

நீ காதலில் தோற்றதால் காதலியை இழந்தவன் 
நான் தோற்றதால் வாழ்க்கையை இழந்தவன் 

இப்போது சொல் நான் தேற்றலாமா ?

முதலில் கேள்விகளுக்கு பதில் சொல் ...

உனக்கு தேவை காதலியா இல்லை காதலா ?

காதல் போதும் என்றால் அவள் போனதிற்கு ஏன் அழுகிறாய் ?
நீ நேசிக்க உலகமே இருக்கிறதே ...

அவள் தேவை என்கிறாயா ?
காதல் மறந்த அவளை இனி தேடுவதற்கு வேறு உடல் பார்க்கலாமே ..

சரி 

என்ன சொல்லி பிரிந்தாள்?

உன்னிடம் பணமில்லை என்றாளா ? விடு 
பணம் கொட்டும் எந்திரம் மட்டுமே கணவனாக முடியாது என காலம் அவளுக்கு சொல்லித்தரும் ..

அழகில்லை என்றாளா ? விடு சதையும் நிறமும் பருவத்தோடு பறந்து போகும் என நரைக்கும்போது புரியும் அவளுக்கு ..

அவள்மேல் நீ கொட்டிய பாசம் போதவில்லை என்றாளா ?
விடு ,
பாசத்துக்கு அளவுகோல் பெண்ணின் பக்கத்துக்கு பக்கம் மாறும் .

இன்னொருவனை பிடிக்கிறது என்றாளா ?

சந்தோஷமாய் விலகு ,
நாளை அவனையும் தாண்டி அவனி தேடுவாள் .

பெற்றோர் பாசம் தடுக்கிறது என்றாளா ?
விடு ,பெண்ணுக்கு கணவன் அடுத்த தகப்பன் என புரியாததை வைத்து என்ன செய்ய போகிறாய் ?

கல்வியில் நீ குறைச்சல் என்றாளா ?
வாழ்க்கையும் கல்வியும் வேறு வேறு என்ற வாழ்க்கை கல்வி புரியாதவள் 
விடு 
உயிரென சொன்னாளா ?
உணர்வோடு உடலையும் பகிர்ந்துகொண்டாளா ?
உறவென்றால் நீமட்டும் என உறுதியாய் இருந்தாளா ?
எப்படி மறந்தாள் என புரியவில்லை என்கிறாயா ? 
தம்பி இயற்கையை மறந்துவிட்டாயா ?
ஆணுக்கு உடல் மட்டும் பலம் மனது நொடியில் உடையும் 
பெண்ணுக்கு மனது பலம் உடல் எளிதில் வளையும் 
நீ மனதை தொடவில்லையே ...

எந்த சமாதானமும் ஏற்கவில்லையா நீ ?

என்ன செய்யபோகிறாய் ?

குடிக்கவா ?
செய் .. குடித்து குடித்து நீ எடுக்கும் வாந்தியோடு அவள் நினைப்பும் வெளியேறிவிடும் என்றால் குடி..

கணையம் அழியும் .. வெள்ளணுக்கள் செத்துப்போகும் ..
இருதயம் தூங்க நினைக்கும்...

புகைக்க போகிறாயா ?
புகையோடு சேர்ந்து அவளும் நினைப்பும் வான் போகுமா ?
நுரையீரல் வெந்துபோகும் .
எலும்பு வலுவிழக்கும் ,காசம் வரும் ..

தற்கொலையா ..?
தாராளமாக செய் ..
பெற்று வளர்த்தது பெண்ணுக்காய் செத்ததாய் பேசுவாரே தவிர காதலை சொல்ல ஆளில்லை இங்கே ..

முதலில் கேள் ..
உன்னையே நீ காதலிக்காமல் அழித்துகொள்ளும்போது இன்னொரு பெண்ணை எப்படி உன்னால் காதலிக்க முடியும் ? 

அந்த அனுபவமும் சேர்த்து இன்னொருத்தி மேல் பொழிய முடியாதா ?

போ ..
அவள் நினைவை அதிகப்படுத்து ..

இன்னும் அழு ..

மரத்துப்போகட்டும் 

வாடா ...

வெளியே பார் ...
வா.. 

உன்னால் வெல்லப்படத்தானடா இந்த உலகம் மாயனை தாண்டியும் நிற்கிறது .....
வென்றெடுக்கலாம் வா ....

 

::நன்றி:காலில்லா கவிதைகள்::



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உன்னையே நீ காதலிக்காமல் அழித்துகொள்ளும்போது இன்னொரு பெண்ணை எப்படி உன்னால் காதலிக்க முடியும் ? ...nice words...
வெளியே பார் ...
வா..

உன்னால் வெல்லப்படத்தானடா இந்த உலகம் மாயனை தாண்டியும் நிற்கிறது .....
வென்றெடுக்கலாம் வா ... great confident giving words...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink   
 

so nice...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard