Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காலில்லா கவிதைகள்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
காலில்லா கவிதைகள்
Permalink   
 


இங்கு பதியப்படும் கவிகள் அனைத்தும் காலில்லா கவிதைகள் என்ற புனைபெயர் கொண்ட ஒருவரால் எழுத்தப் பட்டவை

 



__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

காத்திருக்கிறேன்
அந்த கவிதைகளை காண...!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மனைவி வேண்டும் ..


நொடிக்கொரு முத்தம் தந்து சேர்த்தணைக்க வேண்டாம்
நான் சேர்த்தணைத்து சிலாகிக்கும் போது சிணுங்காத மனைவி போதும் ..

பிராய்டின் தத்துவத்தை பிழையில்லாமல் சொல்ல வேண்டாம்
கலங்கி நிற்கும் கனம்களை கண்டுகொள்ளும் மனைவி போதும்

என் வெற்றிக்கெல்லாம் வாளாக வேண்டாம்
தோல்வியின் துயருக்கு கேடயமான மனைவி போதும்

என் நோவுகளுக்கு நோம்பிருக்க வேண்டாம்
மருந்தின் நேரத்தை நினைவு கூறும் மனைவி போதும்

வெள்ளை தோலில் வெண்ணிலா வேண்டாம்
என்னை போலவே தமிழ் நிறம் போதும்

தேனாய் பேசி தித்திக்க வேண்டாம்
இரண்டொரு வார்த்தைகள் இனித்தால் போதும்

அமிர்த உணவை அள்ளித்தர வேண்டாம்
பழையதிர்க்கு மிளகாய் கிள்ளி தந்தால் போதும்.....

மணியம்மை வேண்டாம் செல்லமாளும் வேண்டாம்
மனதிர்க்கிதமாய் எனக்கு மனம்கொத்திபோதும் ....

கட்டிக்கொண்டு வரவே வேண்டாம்
நான் பிட்டு தந்ததை பேணினால் போதும் ...



//இத அப்படியே உல்டா பண்ணி,மனைவிக்கு பதிலா வேற ஏதாவது போட்டு பயன்படுத்திக்கோங்க

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

என்ன தாண்டா நடக்குது ...

என்னதாண்டா நடக்குதிந்த இன்பத்தமிழ் நாட்டுல எழுதக்கூட கூசுதுடா வெக்க கேட்ட ஏட்டுல ...

படிக்க போற பள்ளிக்கூடம் தனியாரா போச்சுது
போதை பாட்டில் பொரிகடல கவர்மெண்டே விக்குது

கோடி ரூவா ரோடெல்லாம் ஒத்த மழைக்கு மெதக்குது
கொடிகம்பம் மட்டுமிங்கே புயல தாண்டி நிக்குது

சாதிமதம் கொடுமையின்னு மேடையேறி பேசுது
சாதிக்கொரு சங்கம் வச்சு கலவரத்த மூட்டுது ...

மூணு போகம் வெளஞ்ச மண்ணு மலடாக நிக்குது
மரத்தஎல்லாம் வெட்டிபுட்டு மழைய பாத்து ஏங்குது

எம்ஜிஆரு காதலிச்சா காசக்குடுத்து ரசிக்குது
இவன் புள்ள காதலிச்சா மானம் போச்சுன்னு குதிக்குது

ஆங்கிலம் தான் அறிவுன்னு ஊரு சனம் நம்புது
அம்மாவ மம்மி னா புல்லரிச்சு போகுது

ரஜினி காந்து பொறந்தநாள கூத்தடிச்சு பேசுது
பாரதிக்கும் பொறந்த நாலு அன்னைக்குத்தான் மறக்குது

மோடிவித்த காட்டுனாலும் ஓடி வந்து பாக்குது
சக மனுஷன் ரோட்டில் கிடந்தா சீண்ட பயந்து ஓடுது

இன்டர்நெட்டு ஈமெயிலு நடப்பு வட்டம் பறக்குது
அடுத்த வீட்டில் யாரிருக்கா,கேள்வி கேட்டா முழிக்குது

சொந்த பந்தம் பேசிபழக நேரமெல்லாம் இங்கில்ல
நமீதாக்கா மச்சான் ன்னா நெரஞ்சுருச்சு வீட்டுல ...

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@அன்பைத்தேடி
மற்றதெல்லாம் சரி... வெள்ளை தோலில் வெண்ணிலா வேண்டாம்
என்னை போலவே தமிழ் நிறம் போதும்...இதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க...வெள்ளாவி வெச்ச கலர் தான் தேடுவாங்க....
...இன்டர்நெட்டு ஈமெயிலு நடப்பு வட்டம் பறக்குது
அடுத்த வீட்டில் யாரிருக்கா,கேள்வி கேட்டா முழிக்குது...இதை கண்டிப்பாக ஒத்துக்கணும்...நானும் இதை அடிக்கடி நினைப்பேன் ...thnks for sharing...


__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

superb kavithai
@samram
u r crect .

__________________

praveen

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard