Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓரினசேர்கை மீதான வன்கொடுமைகள்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
ஓரினசேர்கை மீதான வன்கொடுமைகள்
Permalink   
 


ஓரினசேர்கை மீதான வன்கொடுமைகள்

 
உலகில் அதிக ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மையினர் யார் என்று தெரியுமா ? யூதர்கள். கண்டிப்பாக இல்லை. இஸ்ரேலில் யூதர்கள் தான் பெரும்பான்மையினர். இஸ்லாமியர்களா ? உலகில் இருபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஒரு வேளை தமிழர்கள். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு பிரச்சனையில்லையே !! கருப்பு இனத்தினர். அவர்களும் இல்லை. ஆப்பிரிக்கா நாடுகளில் பெரும்பாலான பகுதியில் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் தான் ஆள்கிறார்கள். பின்பு எந்த சிறுபான்மையினர் எல்லா பகுதியிலும் ஒடுக்கபடுகிறார்கள். சந்தேகமே இல்லை. எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், இனமாக இருந்தாலும் எல்லா பகுதியிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் ‘ஓரின சேர்கையாளர்கள்’ தான்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை ஓரினசேர்க்கையாளர்களுக்கு வந்துக் கொண்டு தான். அந்த நாட்டின் அந்த நாட்டின் பராம்பரிய குணமும், பழக்க வழக்கமும் அவர்களை பார்க்கும் விதத்தில் வேறாக இருந்தாலும் உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கப்பட்டு வருகிறார்கள்.



தென் ஆப்பிரிக்காவில் லெஸ்பியனில் ஈடுபடும் பெண்களை கற்பழிப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஓரின சேர்க்கை என்பது ஒரு வியாதி. அந்த நோய்யை குணப்படுத்த லெஸ்பியன் பெண்களை ‘கரேக்டிவ் ரேப்’ என்ற பெயரில் கற்பழித்தால் சரியாகிவிடுமாம். ஆண் சுகம் தெரிந்து விட்டால் சுயபால் இன்பத்தை கைவிடுவார்களாம். அதனால், லெஸ்பியன் பெண்கள் குணப்படுத்த அவர்கள் விருப்பதிற்கு மாறாக கற்பழிக்க பல சமூக சேவகர்கள் கலத்தில் குத்தித்துள்ளனர்.

2000ல் இருந்தே 'கரேக்டிவ் ரேப்' என்ற பெயரில் பல லெஸ்பியன் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், 2008ல் தென் ஆப்பிரிக்கா கால்பந்து வீராங்கனை ஈடி சிமெலைன் என்ற லெஸ்பியன் பெண் 'கரேக்டிவ் ரேப்' பெயரில் ஒரு குழுவால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 'கரேக்டிவ் ரேப்' உலக பார்வைக்கு வந்தது. மேலும், வருடத்திற்கு 5 லட்சம் சிறுமி, யுவதிகள் கற்பழிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்கா அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

பிரேசிலில், 19 வயதான ஓச்வன், தன் பகுதியில் 'மிஸ் கே' போட்டியில் வெற்றிப் பெற்று திரும்பும் போது மர்மமான முறையில் தாக்கப்பட்டான். அடுத்த நாள் அவன் உடல் நிர்வணமாய் கண்டெடுக்கப்பட்டு போது இறக்கும் முன் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. 1980 முதல் 2006 வரை பிரேசிலில் 2800 மேற்பட்ட ஓரின சேர்க்கை ஆண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2002ல் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பாரிஸ் மெயரான 'Bertrand Delanoë 'கே' என்பதால் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் . யிஷாயி என்ற யூதன் 'கே போராட்ட ஊர்வலத்தில் மூன்று கேகளை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

போர்சுக்கலில், மாற்று பால் அருவை சிகிச்சை செய்துக் கொண்ட Gisberta Salce Júnior' என்பவர், சில வாலிபவர்களால் மூன்று நாள் கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுளார்.

நியூசிலாந்தில், ஜெஃப் விட்டிங்டன் என்ற ‘கே’ இளைஞன் இரண்டு ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார்.

இவ்வளவு ஏன் ? ஹிட்லரின் மரண முகாமில் ஓரின சேர்கையாளருக்கு தான் முன்னுரிமை. ஹிட்லர் கொன்ற கோடிக்கணக்கானவர்களில் 50,000 ஓரின சேர்கையாளர்களும் அடங்குவார்கள். இறந்த யுதர்களில், ஓரின சேர்கையாளர்கள் கொடுமையான வன்கொடுமைகளுக்கு பலியானார்கள் என்பது பரிதாபத்திற்குறியது.

இன்னும், ஈரான், நைஜிரியா, அரேபியா, சுடான், ஏமன் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதுவும் ஈரானில், 1979ல் இருந்து 4000 ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கி கொன்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் கூட ஓரின சேர்கையாளர்களுக்கு 2001ல் வரை மரண தண்டனை வழங்கி வந்தார்கள். தாலிபன் வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தானில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை நிறுத்தி அபராதம் மட்டும் போட சட்டம் கொண்டு வந்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு சட்டப்படி அங்கிகாரம் கிடையாது. சமூகப்பார்வையில் நிராகரிப்பு என்ற பெரிய தண்டனை இவர்களுக்கு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க எதோ சில பகுதிகளில் அங்கிகாரம் பெற்ற இவர்கள் தின வாழ்க்கை நடத்துவதில் சிரமப்படுபவர்கள் பலர் உண்டு. இவர்களை அழிப்பதாகட்டும், எதிர்பதாகட்டும் மொழி, இனம் பாராமல் ஒற்றுமையாக செயல் படுவதில் ஓரின சேர்கையாளர் விஷயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
 
மூலம்:http://guhankatturai.blogspot.in/2010/08/blog-post_27.html


__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

படிக்கவே பயங்கரமான விஷயமாக இருக்கு....முதலில் நமக்கு யார் தயவும் தேவையில்லை என்ற நிலமை வரணும்...ஆனால் நம் தயவு அவர்களுக்கு வேண்டும் என்ற நிலை வரணும்...ex: விவசாயம்,போர் திறமை,புது கண்டுபிடிப்புகள்,பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையானவை etc...இதை கொடுக்கும்போதும் நம் தன்மானம் இழக்காமல் கொடுக்க வேண்டும்....bcaz a gay got multitalent and love(eg.Alexendar the great,Gandthiji) on the society than a straight.... நடக்குமான்னு தெரியல...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard