Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: படித்ததில் பிடித்தது


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
படித்ததில் பிடித்தது
Permalink   
 


படித்ததில் பிடித்தது:

இங்கு நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ளுங்க :

நானே ஆரம்பிக்கிறேன்:

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

 நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன் .

"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

 "புரியல குருவே.." என்றான் .

"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை,தட்டியவரை எட்டி உதைக்கும்.  ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.

 புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.இது தான் வாழ்வின் ரகசியம்"

 

 

 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வாழ்த்துக்கள் நண்பா,உங்களோட முதல் தலைப்பு இது.......

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

thnks thamilan...its for ur motivation...real thing is I dont write own so hereafter share my reading(!) here....

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தாராளமா எழுதுங்க நண்பா,சொந்தமா யோசிச்சு எழுதுற நீங்களே வெக்கப்பட்டா எப்படி

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே ?
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தோழனே
எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்!
நீயும் என்னை பார்த்ததில்லை.. நானும் உன்னை பார்த்ததில்லை...
இங்கே சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்! நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்.
ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே,

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...கதைய விட கவிதை சூப்பர்...
ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே,...என்ன ஒரு வார்த்தைகள் ....this is every one need...fully energised words...thnks tamilan...


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

sam..! really your first heading wonderful ya..! keep rocking mama..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

யாருக்கோ உன்மீது நம்பிக்கை இல்லை என்பதற்காக,
உன்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கையை குறைக்காதே.

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

sure tamilan...nd thnks butterfly...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"excellent things 're always rare like everyone's mom..!"

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதியகாரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுசிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவுபக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்டஅப்பாவுக்கு கோபம் தலைகேறியது…

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறைஉள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான்கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைகொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள்முறிந்துவிட்டதால்.. இனி விரல்களைகுணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து”அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும்இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாகவெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டிஉதைத்தார். கண்ணீருடன் தலையில் கையைவைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்னஎழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களைநேசிக்கிறோம்…

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களைபயன்படுத்த போகின்றோமோ..?

Source: http://inruoruthagaval.com/i-love-you-dad/

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உண்மை தான்...அரவிந்த்.எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களைபயன்படுத்த போகின்றோமோ..?..சில நேரங்களில் எனக்கும் இது தோன்றும்...thnks for sharing

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கண்ணம்மாவை குழந்தையாக நினைத்து பாரதி பாடிய பாடல்
_____________________________________
சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே! . ... 2

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ... 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ! ... 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ! ... 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ? ... 10______________________________________________________________________

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ..



//குழந்தை நம்மை நோக்கி ஒடி வருகையில்,உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி,

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்,அப்போது நாம் சென்று குழந்தையை அணைக்க முற்பட்டால் அது விளையாட்டை நிறுத்திவிடும்.

அதனால்,நமது ஆசை மட்டும் சென்று குழந்தையை தழுவிக்கொள்ளும்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

பாரதியார் கவிதையில் இல்லாத விஷயமே இல்லை என்பார்கள் ...பெரிய நடனமேதைகளும் இந்த பாட்டிற்கு ஆடி பேர் வாங்கியிருக்கிறார்கள்...
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7....இந்த வரிகள் பாடும் போது நம் கண்ணில் கண்ணிர் வரும்....

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 


!!.."கவனியுங்கள்"..!!
************

!!.."உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.

உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள். அவைகளே செயல்களாக ஆகின்றன.

உங்கள் செயல்களைக் கவனியுங்கள். அவைகளே பழக்கமாகின்றன.

உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்.அவைகளே உங்கள் நடத்தையாகின்றன.

உங்கள் நடத்தையைக் கவனியுங்கள். அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன..!!

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...superaa iruku...உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்.அவைகளே உங்கள் நடத்தையாகின்றன....this is really true...whn we have bad habits the view on others is related to that...whn we avoid those habits, its sure that view also changes...short nd sweet...anbaithedi


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

உன்னோடு கை கோர்த்து சென்ற நினைவை
உதறிவிட்டு திரும்ப எத்தனிக்கையில்
மீண்டும் கைபற்றிக்கொண்டது
உன் நினைவுகள்!!

From Twitter

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ்...மீண்டும் கைபற்றிக்கொண்டது
உன் நினைவுகள்!! ...அருமையான வார்த்தைகள்...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 


1. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். சிலர் உங்களது பலவீனத்தை அவர்களது பலமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

2. பள்ளி, கல்லூரிகளில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து முட்டாள் என்று சொல்லும் ஆசிரியரே முதல் முட்டாளாக இருப்பார்.

3. உங்களை விட்டு விலகிப்போவதால் நன்மை நிகழும் என்று சிலர் கருதினால், அவர்கள் விலகும் முன் நீங்கள் விலகிவிடுங்கள். உங்களுக்கு நன்மை நிகழும்.

4. நாகரீக வளர்ச்சி என்பது ஆடையின் அளவைக் குறைத்துக் கொள்வதல்ல. சிந்தனையின் அளவை வளர்த்துக் கொள்வது.

5. உண்மையாக வாழ்ந்து பாருங்கள். சிலருக்குப் பிடிக்கும், பலருக்குப் பிடிக்காது.

6. உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.

7. உங்கள் குழந்தையை பணக்காரனாக வளருங்கள், தவறில்லை. ஆனால் ஏழையை புரிந்துகொள்ளும் படியாக வளர்க்காவிட்டால் இந்த சமுதாயம் தவறாகிவிடும்.

8. முதுமை காலத்து கொடுமையையும், மழலை காலத்து சந்தோசத்தையும் ஒருவனா(ளா)ல் கொடுக்க முடியுமென்றால், அவனே(ளே) உங்களுக்கு உற்ற துணை.

9. உங்கள் எழுத்திற்கு எதிர்ப்பு அதிகமென்றால் அதன் பலம் அதிகமென்றே பொருள்.

10. தியாகத்திற்காக சிறை சென்று திரும்பியோர் குற்றவாளிகளாகக் பார்க்கப்பட்டனர் அன்று. குற்றத்திற்காக சிறை சென்று திரும்புவோர் தியாகிகளாகக் பார்க்கப் படுகின்றனர் இன்று.

11. தலையா ? தன்மானமா ? என்ற நிலை வந்தால், தலையை இழக்கலாம், தன்மானத்தையல்ல.

12. உங்களைவிட்டு எளிதில் விலகிச்செல்ல நினைப்போரை எளிதில் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள்.

13. ஒரு ஆணின் உணர்வுகளையோ அல்லது ஒரு பெண்ணின் உணர்வுகளையோ புரிந்துகொள்ள, நாம் அந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன மனநிலையில் இருப்போம் என்ற அடிப்படையை புரிந்துகொள்ள முயன்றாலே போதும்.

14. பள்ளி, கல்லூரிகளில் பெரும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை. அது ஒட்டுமொத்தத் திறமையல்ல.

15. மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் நண்பர்கள் ஆவதில்லை. அப்படியே ஆனாலும் அது நீண்டகாலம் நிலைப்பதில்லை.

16. சில விடயங்களைப் பேசித் தீர்ப்பது நல்லது. சிலவற்றை பேசாமல் இருப்பது நல்லது.

17. உங்களை மிகைப் படுத்திக்கொள்ள மற்றவருடன் நீங்கள் உயர்ந்தவர்களும் அல்ல. உங்களைத் தாழ்த்திக்கொள்ள அவர்களைவிட நீங்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.

18. நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலே போதும், உங்களின் கருத்துக்கள் 90 சதவீத மக்களைச் சென்றடைந்துவிடும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே அந்த கருத்தின் மதிப்பிற்காகச் சென்றடையும்.

19. பள்ளி, கல்லூரிகளில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவனின் ஒட்டு மொத்த அறிவு/திறமை என்று எண்ணும் நமது சமுதாயமே, அறியாமையின் உச்சகட்ட அளவுகோள்.

20. சில தருணங்களில், ஒருவருடைய இயலாமை அவர்களின் பொறாமையாக வெளிப்படுகிறது.

21. என்னை எவரோடும் ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இவ்வுலகில் என்னைப்போல் நான் மட்டும் தான்.

22. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்துபோகும். ஆனால் அது போன்ற உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.

23. சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

24. நமக்குப் பிடித்தோர் பேசாமல் இருப்பதைவிட வேண்டா வெறுப்பாகப் பேசுவது அதிகமான வலியைத்தரும்.

25. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட அதுவே காரணமாக அமையலாம்.

26. நடந்து கொண்டுவரும் மனித அழிவிற்கு பலநூறு காரணங்களை நாம் பட்டியலிடலாம். ஆனால் மூல காரணம் மனிதன் மட்டும் தான்.

27. நமது நோயைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனையில் உள்ள ஒவ்வொரு மருந்துப் பொருட்களிலும், அதை சோதனை செய்ய இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில், திரைமறைவில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களின் ரத்தக்கறை படிந்திருக்கும். அவர்களும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

28. நமது நாட்டில் நல்ல தொண்டர்களுக்குப் பஞ்சமில்லை. தலைவர்களுக்கு மட்டுமே.

29. எவனொருவன் சாதி, மத அடையாளங்களைத் தாண்டி மனிதனுக்காக மட்டும் போராடுகிறானோ அவனோடு கைகோர்க்க எனது விரல்கள் காத்துக்கொண்டிருக்கும்.

30. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாக்கப்படும் உறவுகள் யாவும் நீண்டகாலம் நீடிக்கும்.

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

"experience is what you get when you dont get what you want"
frm AG note la staff eluthinathu

__________________

praveen



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Awsm anbu

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அனைத்தும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை....ரொம்ப பிடித்தது.... உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...very nice...9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்....ya most of the people wants this it will have good effect ...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பாலைவனத்தைக் கடப்பவர்கள்தான் கதறி அழுகிறார்கள்.வசிப்பவர்கள் அல்ல!


__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@anbaithedi
superb ya
சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

Mannika mattum katrukol,yaen endral nammai yaematriyavargal nammal nesikka pattavargale....
Forward message by friend..

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

Mannika mattum katrukol, இது ஓகே nammai yaematriyavargal nammal nesikka pattavargale....இது ok சொல்ல மாட்டேன் வேணும்னா அவர்களை மறந்துவிடலாம்...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

1017291_364576713667858_2017770431_n.jpg



__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

அம்மா கடவுளாய் வந்த வரம்... மனைவி கடவுள் தந்த வரம் ...
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்...

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@அன்பைத்தேடி அருமை...அனைத்து விளக்கமும் சிந்திக்க வைக்கிறது

@prabulp...உண்மையான நண்பன் கிடைத்தால் மேலே சொன்ன மூன்றும் கிடைக்கும் (தன்னம்பிக்கை,உழைப்பு,விடா முயற்சி)thnks for sharing

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

unmaithaan nanba@samram

__________________

Your lovely friend.....

                              Prabhu



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்.. ஏதாவது ஒன்று.உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது…நம்பிக்கை நங்கூரம் போல.கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேலை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

945328_264976706978499_2041597754_n.jpg



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்...அருமை நண்பா

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

''காமத்தையும்''''கோபத்தையும்'' கண்ட இடங்களில் வெளிபடுத்துபவன், கல்லடி படுவான்

கற்றோரை விமர்சிப்பவன் சொல்லடி படுவான்.

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கண்டிப்பாக ரெண்டு அடியும் நல்ல பாடம் புகட்டும்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

என் வேதனையில் பொங்கும்
கண்ணீரை மறைபதையும்
மகிழ்ச்சியில் மலரும்
புன்னகையை ஒளிபதையும்
சொல்லி கொள்வேன் நாகரீகம் என்று
***

இறுகப் பற்றிக் கொள்ளும்....
உறவுகளைத்தான் "லூசு"
என்று அழைக்க முடிகிறது.
***

ஒரு தெளிவான நிராகரிப்பு எப்போதும் ஒரு போலி வாக்குறுதி விட நன்றாக உள்ளது.
***

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உறவுகளைத்தான் "லூசு"
என்று அழைக்க முடிகிறது....ha ha its true butterfly...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

வாழ்வில் எளிமை விரயங்கள் தடுக்கும்
பேச்சில் இனிமை பிரிவுகள் தடுக்கும்
நேரத்தின் அருமை தோல்விகள் தடுக்கும்
வேலையில் திறமை வெற்றியைக் கொடுக்கும்


__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்....முதல் வரியும்.... வேலையில் திறமை வெற்றியைக் கொடுக்கும்...கடைசி வரியும் சூப்பர்



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும். மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

So cute..! Sam..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ரொம்ப நாளாச்சு தமிழன்....10ம் சூப்பர் ....எனக்கு ரொம்ப பிடித்தது ..ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும். nd நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

என்னைக் கேலிசெய்தனர்.
எனவே வேகமாக முன்னேறிச்சென்று திரும்பிபார்த்தேன்...
அவர்கள் அதேஇடத்தில் தேங்கி வேறொருவரை கேலி செய்துகொண்டிருக்கின்றனர்....

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ் சூப்பர்...just இன்னைக்கு எனக்கு இது ரொம்ப பொருந்தும்...in compputer class I finsished my second seession including project nd started next session the ohter three whom always crtisize mr(already share this with u) got a break in coarse but still continuing the same with others...thnks tamilan

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard