type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
இன்னும் அந்தப்பழைய நிலாவுடன்என்னை ஒப்பிட்டுப்புகழாதே..நீ மோகத்தில் திளைக்க மல்லிகைப் பூக்களின் வாசத்தில்என்னை முகராதே..இன்னும் இன்னும் நீ மூழ்கஏதுவாய் இருக்கும்நீர் நிலைகளில்என்னை உணராதே..விரல்களைப் பற்றிக்கொள்வதாய்ப் பிதற்றிநான் அங்கிங்குநகர விடாமல் செய்யாதே..ஒரு தேவதையெனச் சொல்லிஎன்னைப் பறக்க விடாமல்சிறகுகளின் கனம் கூட்டாதே..என் கர்ப்ப வாயிலைக் காரணம் காட்டிஎன் அத்தனைநுழைவாயில்களையும்பூட்டி வைக்காதே..நான் ஒருஅம்மாவாய் இருக்க முடியலாம்ஒரு போதும்சும்மாவாய் இருக்க முடியாது...-நறுமுகை தேவி